Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 054  (Read 1931 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
நிழல் படம் எண் : 054


இந்த களத்தின்இந்த  நிழல் படம் Munch  அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.

உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


« Last Edit: October 11, 2018, 08:16:44 PM by MysteRy »
                    

Offline munch

நிழல் படம் எண் : 051

உன் இரு விழிகளால் கவி பாடி
என்னுள் ஒரு கவிங்கனை உருவாக்கினாய் நீ
இரு கரங்களால் கட்டி அணைத்து
உன்னுள் என்னை சிறைபிடித்தாய் நீ
இரு இதழ்களால் முத்தம்மிட்டு
நம்முள் ஒரு இதையத்துடிப்பை காட்டினாய் நீ 
உன்னுள் நான் பிரிய என் விழிகள் ஒழி இழந்தனவே
உன் விழிகளில் நீர் கசிய கண்ட மலரின் வர்ணமும் வெளுத்திட்டது
நம் காதலும் உயிர் பெற்றதடி உன்னால்
என் மறைவிலும் உயிர்த்தேளுந்தேன் உன் கரம் பிடிக்க...!




Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
கல்லூரியின் துள்ளி திரிந்த நாட்களில்
நீ செய்யும் நற்செயல்களை
கண்டதும் கொண்டேன்
காதல் உன்மீது...........
சொல்லிகொள்ளும் அளவிற்கு
பேரழகி இல்லையெனினும்
என் கனவு தேவதை நீ.....
உணர்வும் உயிரும் உன்னையே சுற்றிவர
உடல் முழுதும் ரசாயன  மாற்றம் ஏற்பட ..........

மனதோடு நித்தமும்
போரிட்டு போரிட்டு  நெஞ்சினுள்ளே
பூட்டி வைக்க முடியாமல்
ஒருநாள் வெளிபடுத்த
உன் எண்ணமும் அதுவே என்றதும்
ஒரு இனம் புரியா குதூகலத்தில்
வானத்திற்கும் பூமிக்குமாக
துள்ளி குதித்தது மனம்..........

ஈருடல் ஒருயிராய்
இருவரும் காதலில் திளைத்திருக்க
முன்பொருமுறை உன்னால்
அவமதிக்கப்பட்ட காமுகனுக்கு
நாம் காதலராய் வளம் வருவது
பொறுக்க முடியாமல்
கூட்டாளிகளின் துணையோடு
காமம் தலைகேறி உன்னை சிதைத்திட....
என்னை நெருங்கிய  தருணங்களில்
மணமானபின்தான் உன்னவளென
தட்டிக்கழித்து வந்தேனே.....
தங்களுக்கு முழுதும் அற்பனிக்காமல்
வாழ்விழந்து விட்டேனென
வாடிய வாடா மலரே ....!
வருத்தம் கொள்ளாதே
இப்பிறவி உன்னோடுதானென எவளவோ
தேற்றியும் என்னை கருத்தில் கொள்ளாது
காலம்சென்றது ஏனோ.........?

நீ இல்லா புவியில்
வாழ்ந்திடுவேனென நினைத்தாயோ.....?
அனுதினமும் உன்னோடு வளம் வந்த
வசந்த நாட்களை அசை போட்டும்
அணு அணுவாய் இம்சிக்கிறது
அர்த்தமில்லா பொழுதுகளாய்...,...

அன்பே உன்னை நினைத்து
அர்த்தமில்லாமல் வாழ்வதை விட
இப்பிறவியை அர்த்தமுள்ளதாய் ஆக்கிட
உன் வழியை  தொடர்கிறேன்......
வழி கொடு இறைவா
அவளோடு சேர்ந்து வாழ்ந்திட......!!

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
 வெறுமைச் சுவர்களிலெல்லாம்
மோதிக்கொள்ளும் எண்ண அலைகளில்
மிதந்து அமிழ்ந்து உயர்ந்து
உலாவிக் கொள்கிறது தனிமை ..
ஒடுக்கபட்ட மக்களின்
நசுக்கபட்ட குரலாய்
ஒவொரு தடவையும்
ஏக்கத்தின் கேவல்கள்
எட்டி பார்க்கின்றது ..

இணைய முடியா சமந்தரதுள்
இணைந்து விட்ட இரு மன வெளிகளில்
காலம்
விதைத்து விட்ட சோக விதைகளில்
விருட்சமாய் வேர் விட்டபடி விரக்திகள் ..

கோரமாய் அதன் நகங்கள்
கொடூரமாய் தாக்கிய பொழுதெல்லாம்
ஆறென கண்ணீர்
ஆறாது போனது ..
வாவெனும் ஆசைகள்
வற்றாது இருந்தது
நீ எனும் தேவை
நீங்காது இருந்தது

உன்னோடு என் தனிமைகள்
ஒரு முறை வேண்டும்
கண்ணோடு கலக்கின்ற
கணம் கொஞ்சம் வேண்டும்
மண்ணோடு  மண்ணாகும்
மரணம் ஈயும்
மகத்தான அமைதி கொள்ள
உன் மன ஓரத்தில்
மௌனமான நிமிடங்கள் வேண்டும்

என் கண்ணோடு வழியும்
உப்பு நீர் உட்கொள்ளும்
செவ்வண்ண ரோஜாவும்
என் உள்  வண்ணம் கொண்டு
உயிர் உருகி ஒழுகுது பார் ..
என் உயிர் பருகி
உலவுவதை உவப்பாக செய்பவனே
உன் உயிர் கொண்டு உலாவும்
உன்னதமான வேளை வாய்க்காதோ ..
                    

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
காதல் சொல்லுவது பல விதம் -அதில்
 ரோஜா பூ கொடுத்து சொல்லுவது ஒரு விதம்
ஒருவர் ஒருவர் பார்த்து நண்பர்களாக பழகி
காதலாக மாறும் பொழுது ....

காதலை சொல்ல தயங்கி நிர்ப்பது
நீ சொல்லுவாயா என்று நான் காத்து இருக்க
நான் சொல்லுவேன் என்று நீ காத்திருக்க
நண்பனிடம் சொல்லி அறிவுரை கேட்க ...

நண்பனின் ஆலோசனை படி உன்னை
சந்தித்து காதலை சொல்ல  வரும் நேரத்தில்
அதே எண்ணத்தில் நீயும் ஒரு ரோஜா பூவை
மறைத்து கொண்டு தலை சாய்ந்து .....

ஒரு ஈர புன்னகை கலந்த  வெக்கத்துடன் 
என் அருகில் வர உன்னை கண்டதும்
உடல் முழுவதும் ஒரு பட படப்பு
வேர்வை துளிகள்  வழிந்தோடின .....

மனதினை திட படுத்திக்கொண்டும்
கடவுளை வணங்கியும் உன் பெயரை
நான் உச்சரிக்க மெதுவாக -உன்
கரு விழிகளால் ஓர பார்வை வீசும்  பொழுது ...

வந்த தைரியம் என்னை விட்டு சென்றதடி
வாங்கி வந்த ரோஜா பூவும் நானும்
வாடி நிற்கும் வேலையில் வாய் திறந்து
பேச மாட்டாய ஏங்கிய தருணத்தில் ......

நீ ஒளித்து வைத்த  ரோஜா பூவை எடுத்து
என்னிடம் நீட்டி வாய் பேசாமல் தலை
குனித்து நிற்கிறாய் நான் வாங்கி வந்த ரோஜா
போல ஆனதடி உந்தன் முகம் ....

உந்தன் பூவை வாங்கி கொள்ள மனம் துடிக்கிறது
ஆனால் நீ சொல்லும் அந்த ஒரு வார்த்தையை
கேட்க என்மனம் .ஏங்கி தவிக்கிறது
சொல்லுவாயா அன்பே அந்த ஒற்றை சொல் வார்த்தை ....
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline Gotham


நீ மட்டுமல்ல பெண்ணே
நாடே தலைகவிழ்ந்து கிடக்கிறதே


கண்ணீரால் கழுவ முடியாமல்
செந்நீராய் வடிக்கின்றதோ
இந்த பூங்காவனப் பூக்களும்


மனித முகமூடிக்குள் ஒளிந்து
மறைந்திருந்த மிருகங்கள்
தத்தம் குணம் காட்ட
வெகுண்டு மிரள்கிறது
மிச்சசொச்ச மனிதம் எல்லாம்


எங்கு திரும்பினாலும் மனித
முகமாயிருக்க
எது உண்மை எது முகமூடி
அறிமாமல் இன்னும்
குழம்புதடி மனிதம்


மாதரைத் தாம் புனிதராய்
இனிய தாயாய் சேயாய்
நல் மனைவியாய் தமக்கையாய்
சொல்லிக் கொடுத்த
ஒழுக்கம் எங்கே இப்போ...


உன்னைப் போல் தானடி பெண்ணே
நானும் வெட்கித் தலைகுனிகிறேன்


வெட்கம்கெட்ட உலகில்
மாமிச பிண்டங்களுக்கு மத்தியில்
ஏதும் செய்யவியலா விரக்தியின்
விளிம்பில்


தாங்க வேண்டிய முட்களே
ரோஜாவினைக் குத்திக் கிழிக்கும்
பனிசொரிய வேண்டிய பூவிதழோ
குருதி வடிக்கும்....




தூக்கிலிட்டு விடலாமென்றால்
திரும்பும் பக்கமெலாம்
வரும் சேதி கேட்டு
துக்கம் தொண்டை அடைக்கிறது
தூக்கிலிடக் கூட ஆளிலிருக்காதோ?


மரபு மாறும் வழக்கங்கள்
இயற்கை மீறிய சீற்றங்கள்....
புலம்பத் தான் முடிகிறது பெண்ணே
உன்னோடு நானும்...


ஏனோ தெரியவில்லை
இன்று தோன்றுகிறது
அன்றே மாயன் வாக்கு
பலித்திருக்கலாமோ??


Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
வெளிச்சம் அடர்விழக்கிற‌
சாயுங்கால பொழுதின்
ஏதோ ஒரு நொடியில்
தனது மீத ஒளிகிரணங்களையும்
வழித்தெடுக்கிற சூரினை போல‌
நீ தெரியப்படுத்திய
உனது நிரந்தரப் பிரிவின் வார்த்தைகள்
என் வாழ்வின் எல்லா பக்கங்களிலும்
படர்த்தியது ஒரு கும்மிருட்டை

உன்னுடைய கை உதறல்
ஊற்றிய வலியை
ஓங்கி குற்றிய கத்தியை போல‌
உண்டாக்கிய ஆழமான காயத்தை
பொசுக்கி போன எனது பேரன்பின் ஏமாற்றத்தை
ஜீரனிக்க தேவைப்படும்
இன்னும் பல நூற்றாண்டுகள்

இந்த குருதி வடிக்கும் ரோஜாவை போல‌
அழுகிற எனது இதயத்தின்
கதறல்களை உதாசீனம் செய்து
முகந்திருப்பி நடக்கும்
உனது இரக்கமற்றதன்மை
என்றைகேனும்
ஒரு தெய்வீக கைகளின்
கருணையால் மன்னிக்கப்படலாம்

நீ வழங்கிய இந்த கசப்பு
ஒரு காடென செறிந்து நீண்டு
உன்னையும் சூழ்ந்து
தன் முட்களால் குற்றும் தருணத்தில்
அதன் பரப்பில் காயாமல் இருக்க கூடும்
உனக்காக நான் இப்போழுதில் சிந்தும்
கண்ணீரின் ஒரு துளி
அன்புடன் ஆதி

Offline RyaN

[quote author=pEpSi link=topic=1207.msg6953#msg6953

என் காதலி என்னை வேண்டாம் என்று
விட்டு சென்ற வழியில், அவளது நினைவால் 
சென்று கொண்டிருந்தேன்.

உன் அழகிய பிஞ்சு முகத்தை கண்டதும்
என் மனம் அவளது நினைவை விட்டு,
உன் பக்கம் சென்ற்டது.

உன்னை கண்டதும் என் மனம் வருந்தியது.

உன் கையில் இருக்கும் ரோஜா அழகாக சிறிகிறது
உன் முகம் மட்டும் வாடி இருகிறதே ஏன் ??????

இந்த வயதில் உன் கையில் இருக்க வேண்டியது புத்தகம்
ஆனால் உன் கையில் ரோஜாகளோடு
வீதியில் அலைந்து திரிந்து சுற்று கிறாய்  ஏன் ??????

உன் கண்களை பார்க்கும் போது,
உன் வறுமை கண் முன்னே தெரிகிறது.
அதை கண்டு என் மனம் துடிக்கிறது.

உன் வறுமைக்கு காரனம்  யார் ???????

உன் அழகு சிரிப்பை பார்க்கும் போது
உனது பசியை என்னால் உனர முடிகிறது.

இது அனைத்தையும் பார்க்கும் போது
எனக்கு கடவுள் மீது மட்டும்  கோவம் வருகிறது.

நம் நாட்டின் வறுமை மட்டும் பெருகி கொண்டே
போகிறதே என்று என்னும் போது.
« Last Edit: January 04, 2013, 10:00:10 PM by ryhan »