காதல் என்றதும் , அக்தென்னவோ
இளமைக்கு மட்டும் எழுதிவைக்கப்பட்ட
பெரும் சொத்தாய், கருதிடும் சொத்தை சமூகமே !
எங்கள் முதுமைக்காதலின் மகத்துவம் அறிவாயா ?
புதுமைபுதுமையாய் பற்பல புதுமைகளை
புகுத்திடுவதாய் எக்காளமிடும் இக்காலக்காதலர்களே !
இக்காலம் என்றில்லை , இனி எக்க்கலாமானாலும் சரி
முக்காலமும் முயன்றாலும் ,எங்கள் முதுமைக்காதலின்
100 % முதன்மைக்காதலின் மனமகிழ்மகிழ்சியை
முழுதாய் அனுபவித்திடும் ,அனுபவம் அதை
வெறும் 50 % ஆவது அனுபவித்ததாய்,அனுபவிப்பதாய்
அறுதியிட்டு , உறுதியாக அறிவிக்கத்தயாரா ??
மற்றதையெல்லாம் இப்போதைக்கு விட்டுவிட்டு
இதோ, சத்தமில்லாமல் நான் கொடுத்திடும்
இந்த முத்தத்தின் பகிர்வின் பொழுது
அரவம் தீண்டியதும் பரவும் விடமாய்
இரு சித்தம் முழுதும் நித்தமித்தம் மேனிமுழுதும்
படர்ந்திடும், காதல் சூடுகுறையா ரத்தத்தின் சுத்தத்தினை
உங்களின் ஒத்தை (ஒற்றை ) முத்ததிலாவது
உங்களால் பகிர்ந்திட முடியுமா? ?
பார்போற்றிகளாய் தங்களை தானே போற்றிக்கொள்ளும்
இளமைக்காதலர்களே !