மருண்ட விழிகளில்
ஓராயிரம் கதைகள்
இருண்ட வாழ்வின்
முடிந்திடா பக்கங்களில்
சித்திரம் என்பர்
இந்த விசித்திர மனிதர்
பத்திரமாய் என்றும்
வீட்டுக்குள்ளே
பூட்டிவைத்தார்
ஆயிரமாயிரம் பிறவி தான்
முண்டாசுக்கவிஞன் எடுத்தாலும்
அவன் கண்ட கனவு
கனவாகவே முடியக்கூடும்
ஏச்சுக்கும் பேச்சுக்குமே
படைப்பட்ட பெண்டிர்
என இறுமாந்து கூறு
போடும் கூட்டங்கள்
ஏட்டுக் கல்வியையும்
வீட்டுப் பிள்ளைகள் படித்தால்
எட்டா உயரம் செல்வர்
என்று
அடுப்புள்ளே பூட்டி வைத்த
கதைசொல்லுதோ கண்கள்?
முகம் கூட காட்ட முடியா
வேதனையும் விசும்பல்களும்
தீரும் நாளும் வந்தே தீரும்
மானுட கூட்டம் மனிதம்
கற்கும் அந்நாளில்!!
(பெண் கல்விக்காக குரல் கொடுத்து தற்போது தாலிபான்களின் அரக்கத்தனமான துப்பாக்கிச்சூட்டில் தலையிலும் கழுத்திலும் குண்டடிபட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் உயிருக்குப் போராடி வரும் பதினாலே வயதான பாகிஸ்தானின் மலாலா யூசுப்ஸாய் என்ற சின்னப் பூந்தளிர் வீரத் திருமகள் நலம் பெற இவ்வரிகள் அவளுக்கு சமர்ப்பணம்)