Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 043  (Read 2099 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
நிழல் படம் எண் : 043

இந்த களத்தின்

இந்த  நிழல் படம் Kungfu Master அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....

உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


« Last Edit: October 11, 2018, 07:53:33 PM by MysteRy »
                    

Offline தமிழன்

காதல்
வார்த்தையின்றி பலவிதங்களில்
வெளிப்படுத்தப்படும் ஒரு உணர்வு

க‌ண்க‌ள் காத‌ல் க‌தை சொல்லும்
கால்க‌ள் காத‌லை க‌த‌க‌ளி ஆடிக் காட்டும்
க‌ன்ன‌ங்களில் நாணம்
காத‌ல் கோல‌ங்க‌ள் வ‌ரையும்
உத‌டுக‌ள் காத‌லால்
ஒட்டி ஒட்டி பிரியும்

காதலை வெளிப்படுத்த
வார்த்தைகள் தேவையில்லை
அதை உன்னிடம் இருந்தே அறிந்து கொண்டேன்

நான் காதலை உன்னிடம்
எப்படி சொல்வதென்று
வார்த்தைக்கு தடுமாறும் போது
உன் கைவிரல்கள் உன்
காதலை வார்த்தைகள் இன்றி
மௌனமாக எனக்கு புரியவைத்தது

என்னை கண்டதும்
வார்த்தைகள் வராமல்
இல்லாத விரல்ந‌கங்களை கடித்தாயே
நான் உன்முன் வரும் போதெல்லாம்
நாணத்தால் உன் விரல்கள்
அபிநயம் பிடித்தனவே

க‌லையாத‌ கூந்த‌லை
அடிக்க‌டி ச‌ரிசெய்யும் உன் விர‌ல்க‌ள்
புட‌வையின் த‌லைப்பை
அடிக்க‌டி கிள்ளிவிடும் உன் விர‌ல்க‌ள்
இவைய‌னைத்தும் உன் காத‌லை
சொல்லும் ச‌மிக்கைக‌ள் தானே

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
அன்பே!
நான் உன்மீது கொண்ட காதலை
எப்படி உன்னிடம் சொல்லுவது -என்று
மனதளவில் பெரிய போராட்டம் என்னுள்
கடிதம் வழி சொல்லுவதா -இல்லை
கவிதை வழியாக சொல்லுவதா என்று
புலம்பி திரிந்த நேரத்தில்
நண்பன் அறிவுரையால் காதலை
கவிதையில் சொல்ல துணிந்தேன்
என் கவிதையே நீதான் -ஆதலால்
உன்னக ஒரு கவிதை எழுதினேன்
என் காதலை உன்னிடம் தெரியபடுத்த
அந்த கவிதையில் என் உயிரை மையாக கொண்டு
கவிதை தொடுத்தேன் .
கவிதை எழுத தைரியம் வந்து -ஆனால்
உன்னிடம் கொடுக்க தைரியம் வரவில்லை
உன்னோடு பேசிகொண்டு இருக்கும் போது
என் வார்த்தைகள் யாவும் சிக்கிக்கொண்டு நிற்க
நான் பட்ட துடிப்பு யாருக்கு தெரியும்
பசித்தது உன்ன முடியவில்லை
நித்திரை வந்தது நிம்மதியாய் தூங்கவில்லை
பொழுதும் விடிந்தது என் காதலும் விடியும் நேரத்திற்க
 காத்து கொண்டுறிந்த வேலையில்
தேவதை போல உடை அணிந்து
தென்றல் காற்றோடு நீ வர உன்னையே ரசித்த படி
என் அருகில் வந்து உன் பூ விழிகளால் பேசி
உன் ரோசா பூ இதழால் புன்னகையுடன்
உன் பிஞ்சு விரல்களை நீட்ட அதில்
இரண்டு விரல்களில் வரைய பட்ட இதயஓவியம்
மோதிர விரல் நான் என்றும் சுண்டி விரல் நீ என்றும்
விளக்கம் தர புரிந்தது உன் காதல் சொல்லும் விதம்
இருவரின் விழிகளும் கலங்க காதல் புரிந்தது
 
« Last Edit: October 12, 2012, 10:00:05 PM by Thavi »
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
உன்னோடான என் பந்தம்
தொலை வானும் கடலும்
உன் நினைவோடான என் பந்தம்
நிலமும் நிழலும் ...
விழித்திருக்கும் போதெல்லாம்
விரகத்தின் வழியில்
விரைவாக செல்லும்
 நினைவுக் குதிரை
ஏழ்கடல் தாண்டியும்
எம்பி குதித்து உரசி கொள்கிறது
கடந்து போன நம் காதல்
களிப்புகளின் சிதறல்களில் ...

எட்டி நடந்து
உன்னோடு சேர துடிக்கும்
பாதங்களுக்கு
நீ தடயமாக விட்டு செல்வது
என் மீதான
உதாசீனங்களும்
உதிரம் உறைய செய்யும்
உன் வெறுப்பு பார்வைகளையும்தான் ....

சேர்ந்து இருக்கும் பொழுதுகளில் எல்லாம்
உன் சீண்டல்களால்
சில்மிசங்களால்
வெக்கி சிவந்து
 துடிக்க தவறவில்லை என் இதயம் ..
இன்றோ விழியன் வரியில்
நீ எழுதி சென்ற
பிரியாவிடை கிறுக்கல்களில் ..
பிளந்து சிதறும் என் இதயம்
செந்நீர் துளிகளை
கண்ணீர் துளிகளாய் பிரசவிகின்றது ..

பிரசவங்களின் முடிவில்
மீந்து இருக்கும் களிப்பு இங்கில்லை
சவங்களின் சந்நிதியில்
சடுதியாய் குடிகொள்ளும்
சலனங்கள்தான் மீதம்
தவிக்கும் என் சலனங்களுக்கு
சயனமாய் வந்துவிடு
                    

Offline KungfuMaster

  • Sr. Member
  • *
  • Posts: 277
  • Total likes: 1
  • Karma: +0/-0
  • Gender: Male
  • தீதும் நன்றும் பிறர்தர வாரா!!!
ஏ! நிழற்படமே!
நீ எதை பறைசாற்றுகிறாய்?
சேர்ந்திருந்த காதல் பிரிந்ததையா?
பிரிந்திருந்த காதல் சேர்ந்ததையா?
அல்லது பிரிவதும் சேர்வதும்தான்
அழகான காதல் என்றா?

என்ன அப்படி நோக்குகிறாய்?
ஏன் இந்த குழப்பம் என்றா?
என் மனதின் குழப்பங்களால்
நீயும் குழப்பமாகி போனாய்
என் மனக்கண்ணிற்கு...

விரல்கோர்த்து விளையாடிய
மழலைப் பருவம் முதல்
வீம்போடு விளையாடிய
விடலைப் பருவம் வரை
தெரியவில்லை அது காதலென்று...

அவள் கண்களில் தூசுபட்டதால்
கண்ணீரில் என் கண் கலங்கி
கோபமாய் தூசியை ஊதிவிட்டு
அவள் கண்ணை பார்க்கும்போதெல்லாம்
தோன்றவில்லை அது காதலென்று...

அவளோடு கைகோர்த்து
சின்ன சின்ன சண்டையிட்டு
மனதோடு சிரித்து மகிழ்ந்த
கணக்கில்லா நாட்களெல்லாம்
உணர்த்தவில்லை அது காதலென்று...

காலத்தின் கட்டாயத்தால்
அவள் கண்ணிலிருந்து தூரம்செல்லும்
அந்த தருணமும் வந்துசேர
முதன் முதலாய் உணர்ந்தேன்
வர்ணிக்கமுடியா வலியை...

இதோ எண்ணிரண்டு திங்கள்
எப்படி சென்றது தெரியவில்லை
ஆனாலும் அவளைப்பற்றிய
நினைவுகள் மட்டும்
ஓங்கி நிற்கிறது ஆலமரமாய்...

ஏட்டில் எழுதவும் முடியாமல்
ஏனென்று சொல்லவும் முடியாமல்
நொடிக்கு ஒரு முறை
என்னுள் நானே கேட்டுக்கொள்கிறேன்
இதுதானோ காதலென்று...

வெற்றுசுவரையும் ஓவியமாய் பார்த்து
என் உதடுகள் வேட்கச்சிரிப்பூட்ட
விழித்திருக்கும் விழிகளில்
கற்பனை கனவுகள் வந்து செல்ல
என்னுள் ஒரு குதூகலம்...

கவனிக்க ஆளில்லாமல்
துடித்துகொண்டிருந்த  என் இதயம் கூட
ஒவ்வொரு முறை துடிக்கும்போதும்
சொல்லிசெல்கிறது அவள்
என் காதலி என்று.....

சற்றே உற்று நோக்கினேன்
இதயத்துடிப்பின்  இடைவெளி மட்டும்
எதோ சற்றே எச்சரிக்கையாய்
சொல்லி சென்றது அவள்
தோழியாகவும் இருக்கலாமென்று....

அவளை காணாமல் என் கண்கள்
இமைக்காமல் விழித்துகொண்டிருக்க
என் மனதிலும் உறங்காமல் ஒலித்தது
ஒரு விடை தெரியா வினா
அவள் காதலியா தோழியா என்று....

என் ஒட்டு மொத்த கற்பனைகளும்
கனப்பொழுதில் கலைந்துபோயின
காதலா நட்பா என்றறியாமல்
காதலென கற்பனைசெய்த
என் முட்டாள்தனத்தை எண்ணி...

கவிதைகளால் உயிர் பெற
ஆர்வமாய் காத்துக்கொண்டிருக்கும்
விரல்கொண்ட  ஓவியமே
நீயாவது விடைசொல் எனக்கு
அவள் தோழியா? காதலியா?

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
சோர்வின்றி உன்னை சுற்றும்
என் நினைவுகள்..

தேடாத காதலை
தேடி வந்து  தந்தவன் நீ
புரியாத நேசத்தை
புரியவைத்து புன்னகைத்தவன் நீ

ஓர்  இதயமாய்
இருகரம் இணைந்து
கவிதையான காதலை
திகட்டாமல் தந்தவன் நீ..

என்னுள் வந்த நாள் அறியாமல்
தினமும் தோல்வியுறும்
என் நினைவுகள்...

மின்னலாய் வந்தவனே
நொடியில் மறையும்
வானவில்லாய்
மறைந்தது ஏனோ..

நான் காணும்  இடங்களில்
என்னோடு  நீ இருந்தாய்
நிஜமாக அல்ல நினைவுகளாய்

என்  நாட்கள்  முழுதும்
உன்னில்  தொடங்கி
உன்னில்  முடிந்த 
பொன்னனாள்  மீண்டும்
வாராதோ...
வாழத நாட்களை எல்லாம்
வாழ்ந்துவிட ஆசை ..

கண்ணீரை மறைக்க
புன்னகை சூடினேன்
துயரம் மறக்க
கவிதையை நாடினேன்

சொல்லாமல் விட்ட
காதலை வரிகளாய் கண்டு
வலிகளை மறக்கிறேன்
முற்றுபுள்ளிகளை மட்டும்
கண்ணீர்த்  துளிகளில் முடிக்கிறேன்... :)

















« Last Edit: October 13, 2012, 02:59:27 PM by ஸ்ருதி »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்