Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 042  (Read 2211 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
நிழல் படம் எண் : 042

இந்த களத்தின்

இந்த  நிழல் படம் Gotham அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....

உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 11, 2018, 07:50:24 PM by MysteRy »
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
விரக்தியின் விளிம்புகள்
விகாரமாய் விளையாடும்
மனகூண்டின் மையபகுதியில்
சூனியம் குடி கொண்டு
சுழல் காற்றாய் அடிக்கடி வீசும்

ஆழ்ந்துறங்கும் வேளையிலும்
அலாரங்கலாய் ஒலிக்கும்
உன் நினைவு கூவல்களுக்கு மத்தியில்
சேவல்களின்     அவசியம்
செயல் இழந்து தூங்கும்

உலர்ந்து போன உதடுகளும்
உன் நினைவுகளால்
உப்பி துடிக்கும் இதயமும்
சப்பி துப்பிய உன் துரோகங்களுக்கு
சடுதியாய் முக கண்ணடியாகின்றது..

தொடர்ந்து விட துடிக்கும்  உறவுக்கு
முற்றுப் புள்ளிகளை
நீ வைக்க முயன்றாலும் ..
என் முழுமைகளை திரட்டி
என் கையில் இருக்கும்
இந்த நாய் குட்டியாய்
உன்னை காண்கிறேன் ...

என் தழுவல்கள் இனி இதற்கு சொந்தம்
என் உணர்வுகள் இனி இதற்க்கு பந்தம் ..
என் தனிமைகள் இனி நமக்குள் இன்பம் ..
எங்கோ இருக்கும் உன்னை
நான் என் அருகில் பார்கிறேன் ..
இங்கே இருக்கும் எனை நீ
அங்கு எதுவாய் பார்ப்பாய் ?
உன் மனைவியில் ..?
உன் மகிழ்வில் பிறந்த குழந்தையில் ?
எதுவாய் பார்ப்பாய்
சொல்லிவிட்டு செல் ....
என் இதய நரம்பின் ஸ்ருதிகள்
இடம் மாறுவதற்கு முன் ...
                    

Offline SuBa

அவர்கள் கேட்கவில்லை உந்தன் காதலை
அள்ளிக்கொடுத்தனர் அவர்தம் காதலை
உன்வாழ்வின் நல்லதும் அல்லதும்
பகிர்ந்தனர் மனமகிழ்வோடு
உண்மையான நட்புனக்கு அவரன்றி
வேறிலர்
அள்ள அள்ள குறைய அன்புதனை வாரி
வழங்குவர்
அளவிட முடியா மகிழ்ச்சியுடன் உன்வாழ்வை
வசந்தமாக்குவர்
உந்தன் இதய அறைக்குள் நுழையும் சாவி
இருக்குமிடமும் அவரறிவர்
நீ அறியாமல் உன்னுள்
உனக்குள் பிரியமுடியா
பிரிக்க முடியா
ஒருவராயிருப்பர்
வரங்கள் வாங்கிவந்த அவர்கள்
உன்னுடன் உற்ற தோழனாய்
உறவாய் செல்ல நாய்க்குட்டியாய்
என்றும் உடனுறைவர்
மனிதத்தின் சிறந்த நட்பென என்றென்று
தன் திறன் காட்டி
மெய்ப்பிப்பர்

என்றும் மனிதத்தின் நண்பன்

Offline Gotham

விட்டத்தின் விளிம்புகளில்
அள்ளித் தெரிக்கிறது
எனக்கும் அவனுக்குமான
ஸ்நேகம்

சில நேர கொஞ்சல்களும்
சில நேர கெஞ்சல்களுமாய்
என் சில்லறை நேரங்களை
சிக்கனமே இல்லாமல்
செலவழிக்கத் தெரிந்தவன்

சிந்தனை வயப்பட்டாலும்
சீற்றமே கொண்டிருந்தாலும்
சின்னதொரு பார்வை
துள்ளலான நடையில்
மாற்றிவிடுவான் மனதை
ஒருநொடியில்

ஆயிரம் உறவுகள்
லட்சம் ஸ்நேகங்கள்
யார் வந்தாலும் யார் சென்றாலும்
என் வாழ்வின் ஒரு நாள்
அவனில்லாமல் போகாது

அவன்தன் ஸ்பரிசங்களில்
உணர்ந்தேன் எந்தாயின்
நேசத்தையும் பாசத்தையும்
முதுகில் குத்தப்பட்ட நிமிடங்களில்
ஆதுரமாய் இருந்தது
அவன் தழுவல்கள்..

இதோ இந்த வீடு
இன்னுமிருக்கிறது நன்றாக
பலமாக
ஆனால் உயிரின்றி
என் உற்றநண்பனாய்
சகோதரனாய் சாப்பிட
சண்டையிட்ட தருணங்கள்
உயிர்க்குமா இனி நிஜங்களில்..

என் இனிய டாலி..
அவனுடனான வாழ்வு
இனி கிடைக்குமோ
இப்பூவுலகில்..

(டாலி என்ற நாய்க்குட்டியை மிகவும் நேசித்து, இறந்த போது அழுது புரண்ட என் நண்பனின் மனக்கதறலாக இக்கவிதை)



Offline Rainbow

அன்புக்கு அடைக்கலம் நீயோ
அறிவுக்கு இருப்பிடம் நீயோ
தாய்மையின் தரிப்பிடம் நீயோ
தரணியிலே குல மகள் நீயோ

அழகாய் பிறந்த உன்னை
அருகில் சேரும் பாக்கியம்
ஐந்தறிவு ஜீவனுக்கு
அருளிய ஆண்டவன்மேல்
அளவில்லாத மன தாங்கல் எனக்கு
அணுவணுவாய் நான் ரசிக்கும் உன்னை
அன்புடன் என் கண்கள் புசிக்கும் உன்னை
அருகில் வந்து அள்ளி தழுவும்
அந்த நாய் குட்ட்யின் மீது
கொலை வெறி தாண்டவம் எனக்குள் ...

பொறாமைகளும்
பொருளற்ற கோபங்களும்
பொதிந்திருக்கும் காதல் உணர்வுக்குள் சிக்கி
காலாவதி ஆகிகொண்டிருகின்றேன்
கனிந்திருக்கும் உன் கனிவுள்ளம்
அடியேன்பால் இசைந்துருக மாட்டாயோ ...
உன் அருகிருக்கும்
நாய்குட்டி ஆகேனோ..


Offline Dong லீ


அழகே உந்தன் அழகின்
சிதறல்களை
அள்ளி ஒப்பனை செய்ததோ
இந்த நாய் ..
அம்சமான அழகுடன்
ரசிக்க வைக்கிறது

அன்பே உந்தன் அன்பின்
துளிகளில்
அன்னையை கண்டதோ
இந்த நாய் ..
தன் தாயையும்
மறக்கிறது

உன் விழி தரும் போதையில்
தள்ளாடுகிறது

உன் கொஞ்சல்கள் உதிர்க்கும்
மெல்லிய  காற்றில்
ஊஞ்சலாடுகிறது

அழகே உன் அருகில்
இருந்தால்
நாய் என்ன
பேய் கூட  தான் அழகு ..

நாயாய் மாறிட ஆசை
 
அப்படியாவது சிறு அன்பும்
மரியாதையும் கிடைக்குமே

நாயிடம் கொஞ்சி கொஞ்சி  பேசுகிறாய்
என்னிடம்  கொலை வெறியாய் குரைக்கிறாய்

நாயை செல்லம் என்கிறாய்
என்னை நாயே என்கிறாய்

நாயை தாலாட்டுகிறாய்
என்னிடம் வாலாட்டுகிறாய்

நாயை அணைக்கிறாய்
என்னை துரத்துகிறாய்

நாயை மட்டும் கட்டி கொண்டு
என்னை விட்டு  போனாயே(போ நாயே) 


[yaaraiyum izhivu paduthum ennam illai
nagaichuvaikkaaga mattume[nagaichuvaiya? enga? nu ketrurathinga]]
« Last Edit: October 05, 2012, 12:52:48 PM by Dong லீ »

Offline ME IDIOT

இன்றொரு நாள் விடுதலை....
கணினியில் சிக்கிகொண்ட விழிகளுக்கும், விரல்களுக்கும்
மனதோடு மறைந்து கிடக்கும் இறுக்கத்திற்கும்
துயரத்தோடு வரும்போதெல்லாம் எனை தொட்டு தழுவும்
அலையீன் மடியில் பொழுதை கழிக்க
இன்றொரு நாள் விடுதலை. ...


இன்றொரு நாள் உன்னோடு....
" நாளை தொடரபோகும் முதலாளியின் நச்சரிப்பு
கூட்ட நெரிசலில் சிக்கி துடிக்கும் பேருந்து  பயணம்
வேண்டாம் என்று சொன்னாலும் துரத்தி வரும் தெரு குமாரர்களின் தொல்லை
இதிலிருந்து விடுதலை வேண்டி அலை மடியின் கை பிடியில்
 இன்றொரு நாள் உன்னோடு ....


உணரபடுகிறது விரசம் இல்லா விழிகள்
உற்சாகம் கொள்கிறது நகருகின்ற நொடிகள்
எட்டி உதைத்தாலும் தொட்டு தழுவும் அலைகள்
வேண்டாம் என்று விட்டு சென்ற நுர்ரைகளை தேடி மறுமுறை வரும் அலைகள்..

இவை எல்லாம் எங்களுக்காக... இன்றொரு நாள் .......