Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 036  (Read 2293 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
நிழல் படம் எண் : 036


இந்த களத்தின்

இந்த  நிழல் படம் Thavi (thana) அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....

உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்



« Last Edit: October 11, 2018, 07:35:03 PM by MysteRy »
                    

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
காதல் பருவம் என்பது மலர் மொட்டு போல,
வாசம் வீசியது நம் இருவருக்கு மட்டும்;
நம் திருமணம் பருவம் என்பது
மொட்டு வெடித்த மலர் போல வாசம் (அன்பு )
வீசியது இந்த உலகத்துக்கு. சுதந்திரக்கிளியை
கூண்டுகிளியாய் மாற்றுவது திருமணம்.

திருமணம் எனது இரு இதயம் (மனம் ) இணைந்து
ஒரு புது இதயத்தை உருவாகுவது
பூக்கள் ஒன்று சேர்ந்து  வாசம்
 அதிகம் தருவது போல
இரு மனங்கள் இணைந்து
 இல்லறம் வாசனை தரவேண்டும் !

ஆகையால் பட படத்து பெய்யும் பெருமழையில்
நனைவதை விட (நிச்சய திருமணம் )
சிறு தூரலில் நனைவதையே
நான் விரும்பினேன் (காதல் திருமணம் )
அதனால்தான் அன்பான அமைதியான
உன்னை தேர்ந்தெடுத்தேன் -அன்பே !

விழிகள் என்னும் வாசல் வழியாய் வந்து
இதயத்தில்  நுழைந்து இன்ப சுகம் தந்து
மனதோடு மகிழ்ச்சி கலவரம் செய்து
நீயன்றி நானும் இல்லை, உன் நினைவின்றி
உள்ளத்தில் உயிர் இல்லை என - குரல்
கொடுத்தாய் !

இத்தனை வருடங்களை
பூகளின் மொட்டாய் இருந்த
நம் காதல் வாசத்தை மலர
அகிலத்திற்கும் நர்மனம்
வீசும் நாள் இன்று பெரியவர்கள்
முன்னிலையில் ....

சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட
ஓர் இனிய நன்னாளில்
சொந்த பந்தங்கள் ஒன்று கூடி
நாதஸ்வரங்கள் முழங்க
அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து
உன் கரம் பிடித்தேன்.

அந்நாள் முதல் இந்நாள் வரை
என் கரம் பற்றியே நீ வலம் வருகிறாய்
மனைவி அமைவது இறைவன் கொடுத்த வரம்
நான் தவம் ஏதும் செய்யாமல் கிடைத்த வரம் நீ

ஒரு முழ மல்லிகை பூ
அதை என் கையால் உன் தலையில்
சூடச்சொல்லி நீ ரசிக்கும் அழகே தனி

வேலை முடிந்து இரவில்
எவ்வளவு தாமதமாக வந்தாலும்
உண்ணாமலும் உறங்காமலும்
எனக்காக காத்திருக்கும்
உன் அன்புக்கு ஈடு இணை ஏது

வேலையின் காரணமாக
வெளியில் சென்றால் கூட
ஓயாத உன் அழைப்புகளும்
தீராத உன் ஏக்கங்களும் விரைவில்
என்னை வீட்டில் கொண்டு வந்து சேர்கின்றன

இல்லறத்தை நல்லறமாய் நடத்தும் நீ
என் தாய் தந்தை மீது காட்டும்
அன்பும் அரவணைப்பும்
மேலும் எனை இன்புற செய்கின்றன

எத்தனையோ தருணங்களில்
நம் வாழ்கையில் இடர்பாடுகளை சந்திக்கும்போது
என் தலை கோதி தட்டிக்கொடுக்கும்
உந்தன் அரவணைப்பு தான்
என்னை வழி நடத்தி செல்கிறது

இன்ப துன்பங்களில் இசைந்து கொடுக்கும்
உன்னால் தான் என் வாழ்க்கை
மேலும் வலம் பெற்று கொண்டிருக்கிறது

உறவுகள் பல கடந்து வந்தாலும்
மனைவி எனும்
என் உயிரினும் மேலான
உன் உன்னத உறவை அளித்த
உன்னக்கு என் நன்றி!
« Last Edit: August 11, 2012, 11:29:31 AM by Thavi »
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
என்னவனே ,
கனவுகள் முழுதும் நீயாக
காலம் முழுதும் உன்னவளாக
கரம் பிடிக்கும் கனவு கண்டு
தூக்கத்தை தொலைத்து
கழுத்தை வருடினேன்
கனவில் நீ அளித்த மங்கள நாண் தேடி....

முழுதாய் நேசித்தேன்
முழுதாய் உன்னையே சுவாசித்து
திருமண நாளை எண்ணி
தவித்திருக்கும் நாட்கள்
நரகமான போதும்
கனவில் கை கோர்த்து
வலம் வருகிறேன்
நம் காதல் கனவில் தொடரட்டும்
திருமணம் வரை....

திருமணங்கள் சொர்கத்தில்
நிச்சயிக்க படுகிறதாம்...
என் சொர்கமே நீயாகி போனதால்
தனியாக ஒரு சொர்க்கம்
வேண்டுமோ எனக்கு...

ரொக்கத்தால்  நிட்சயக்கபட்டு
பாதியில் போகும்  சிலர் வாழ்வு..
சாதி மதம் பார்த்து சருகாய்
சிதையுது சிலர் கனவு

சிதையாத கனவாய்
முடியாத உறவாய்
முடிவில்லாத  வாழ்வை
உன்னோடு வாழும்
நாளை நோக்கி
திருமண கனவோடு காத்திருக்க
தினமும் கனவில் வந்து
ஆசைத்தீயை மூட்டுவது
முறையோ....

அழகான பட்டுடுத்தி
கை வளை குலுங்க
உன்கரம் பிடிக்கும் தருணம்
கனவில் வர
கனவு நிறைவேறும் நாள் எப்போது..?
இருவிழியால்  ஒரு சுரம் பாடி
இணைவது எப்போது?
திருமண மலரை நீ சூட
உன் திருமதியாய்
உனக்கே உனக்காக வாழும் நாள்
வருவது எப்போது??

காத்திருக்கிறேன்
உன்னோடு வலம் வரும்
நாள் எண்ணி....
« Last Edit: August 16, 2012, 09:51:06 PM by ஸ்ருதி »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Dong லீ

திருமணம்
தவிர்க்க கூடாத பந்தம்
அமையும்
புது புது சொந்தம்

இரு உள்ளங்கள் மட்டுமல்லாமல்
இரு குடும்பங்களும்  இணையும்

மணமக்கள் நாங்கள்  இருவரும்
ஒரு மனதாய்
ஒரே எண்ணங்களாய்
ஒரே ஆசைகளாய்
ஒன்று சேரும்
திருநாள்
 
பெரியர்வர்களின் ஆசிர்வாதங்கள்
உறவுகளின் வாழ்த்துக்கள்
நண்பர்களின் நேசங்களுடன் 
புது வாழ்க்கை
பயமின்றி
உரிமையுடன் காதல் வாழ்க்கை
நாதஸ்வரம்
மேள தாளங்கள் இசைக்க
உதயமாகிறது

மணமேடையில்
அருகில் என் தேவதை
அவளுடன் நூறு வருட வாழ்வை
உடனடியாக
வாழ்ந்துவிட ஆவல் என்
உள்ளத்தை பந்தாடுவதும் ஏனோ

இனி இவள் நாணங்கள்
என் சொந்தம்

அவள் கூந்தல் பூக்களும் 
காதோரம் கலைந்திருக்கும் கூந்தலும்
நெற்றியில் துளி துளியாய்
படர்ந்திருக்கும்
வியர்வையும்
அழகிய புன்னகையும்
மெல்லிய கண்ணீரும்
அனைத்தும் எனது
சொந்தம்

தாலி கட்டும் அவ்வேளையில்..
பூப்போல் இவளை பாதுகாக்க வேண்டும்
என்ற எண்ணம் மனதில்
நீர்த்துளிகள் விழிகளில்

தாயின் அன்பாய்
தந்தையின் அரவணைப்பாய்
இதய துடிப்பாய்
காலம்தோறும் நான் இருப்பேன்
அதற்கு சான்று
இந்த மூன்று முடிச்சு

என் உயிரில் கலந்த உன்னை
என் உயிருக்கும் மேலாய் சுவாசிப்பேன்

« Last Edit: August 16, 2012, 01:31:17 PM by sri »

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
காதலால் இருவர்
கருத்தொருமித்து
வாழ்தலாம் திருமணம்
காதலால் இணையாது போனாலும்
காசால் இணையும்
பல பந்தம்
பலமற்ற பந்தம்  ....


கால மாற்றத்தில்
காசும் மாறி
கனவுகளும் மாறி
காலத்துக்கும்
கவலையை தரும் பந்தம் தவிர்த்து
உன்னை காதலால்
கை பிடிக்க நினைத்தேன்
என் கண்ணாளனே...


தினம் பல கனவு
தித்திக்கும் கனவு
விடிந்ததும் திகட்டும் உலகு

பூ பந்தலிட்டு
புது மனைகள் தான் இட்டு
மணமகளாய் நானும்
என் மன நாஜகனாய்
என் மணாளனாய்
என்னருகில் நீ
உன்னருகில் நான்

காஞ்சி பட்டும்
கரை வேஷ்டியும்
ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்ள 
அவப்போது அசையும் கைகள்
அடிகடி பட்டுக்கொள்ள
முட்டிக் கொள்ளும் உணர்வுகள்
மூச்சை அதிகரிக்க ...
அவசரமாய் பரிமாரிகொள்ளும்
கடைக்கண் பார்வையில்
உன் கண் சிமிட்டலில்
வெட்கம் வேள்வியில் தகிக்கும் ...


மற்றாரும் உற்றாரும்
சுற்றமும் சூழ நின்று
மங்கள வாத்தியம் முழங்க
மங்கள நாண்...
நீ மகிழ்வுடன் சூட்டும் நேரம்
என் மனமெங்கும் நீ நிறைவாய் ..
என் மனதெல்லாம் பூ சொரிவாய் ..


ஏக்கங்களும் தாபங்களும்
இடை விடாத ஞாபகங்களும்
இடை விடாது பற்றி கொள்ள
வாழ்த்து கூறுபவரும்
வர்ணனை செய்பவரும்
கருத்தில் அல்ல
கண்ணில் கூட பதிய மாட்டார்கள் ...
புகை படம் பிடிபாதாய் கூறி
உன் தீண்டலில் என்னை
என் உணர்வை சிதைக்கும்
புகைப்பட பிடிப்பாளர்
உன்னிடம் புண்ணியம் கட்டிகொல்வார்

புரிந்தும் அறிந்தும்
புரியாமல் அறியாமல்
இருப்பதில் சுகம் ...
எதனை சுகம் ...
இணை பிரியாத துணைவியாய்
இன்ப மயக்கத்தில்
உன் இதய சுவர்கத்தில்
என்றுமே உன் ராணியாய்
உலாவரும் இனிய வரம் வேண்டும் ...


அம்மா பால் .....
எங்கயோ ஆழமாய்
ஒரு குரல் ஒழிக்க
மெதுவாய் தூக்கம் கலைகிறது
என் துயர் படிந்த
இன்ப கனவும் கலைகிறது ..

வாழ முடியாத வாழ்வை
கனவிலே வாழ்ந்த சுகத்துடன்
மீண்டும் கனவுகளுக்காய்
இரவினை நோக்கிய
என் தவம் தொடரும் ...

                    

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
இனிய சகோதரியே நீயும் உன்
இதயம் கவர்ந்தவனும்,
இருவேறு நாட்டில் வசித்தும்
இணையத்தின் உதவியால்
இருமனங்களும் இணைந்து
இருமனதும்  ஓர்மனதாகி
இணக்கம் கொண்ட இதயங்கள்
இருவீட்டாரின் ஆசியுடன்
இசை வாத்தியங்கள் முழங்க
இந்திரன் முதலான தேவர்கள்  பூமாரி பொழிய
இனமான நண்பர்களும் உறவும் வாழ்த்த
இரு இதயங்களும்  திருமணம் கண்டு
இல்லறத்தில் நல்லறம் காணபோகும்
இனிய உறவுகளே.......

இத்தருணம்  முதல் உங்கள் வாழ்வில்
இன்னல் இல்லா வாழ்க்கையும்,
இல்லாமையும்   நீங்கிட
இயலாமையை களைந்து எத்தனை
இடர்கள் வந்தாலும் வருந்துதற்குரிய
இக்கட்டான நிலை வந்தாலும்
இம்மியளவும் தளர்ந்திடாது
இவ்வுலகில் சீரும் சிறப்புமாய் இருக்க
இறை அருள் பெற்று
இப்படித்தான் வாழனுமென
இலக்கணம் வகுத்து
இலட்சிய பாதையை எட்டி 
இழிசொல்லுக்கும் பழி சொல்லுக்கும்
இடங்கொடாமல்  பல்லாண்டு காலம்
இனிதாய் வாழனும்.....!

இருள் சூழும் வேளையில்அலுவல் முடித்து
இல்லம்  திரும்பும்
இன்னுயிர் கணவனுக்கு
இன்முகம் காட்டி
இதமாய், நயமாய், கனிவாய்
இனிய சொல் பேசி,
இதழ் பதித்து இன்புற்று,
இளமையான மனதுடனும்,
இனிமையான  குணத்துடனும்
இசையின் ஸ்ருதியும் லயமும் போல
இணைபிரியா தம்பதியாய்
இனிய வாழ்வை மேற்கொள்வீர்.....!!

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
திருமணம் சொர்கத்தில் நிச்சயிக்கப்பட்டு
புவியில் பூக்களாய் மலரும் மலர் போல
வாசம் வீசும் உண்மை வாழ்வின் முதல் படிக்கு
ஓர் அறிமுகம்!!

இருமணங்களை ஒருமணமாய் இணைக்கும்,
இன்புற வைக்கும் இல்வாழ்வின்,
இனிமையின் பயணத்தின்,
இந்திர விழா காணும்
இன்னதொரு ஊடலாய் வாழ்வில் வாசம் வீசும்
இனிமையான தென்றலாய் திருமணம்,..

எங்கோ பிறந்து , வளர்ந்து,
எத்தனையோ தடங்களை தாண்டி,
எண்ணற்ற கனவுகளுடன்,
எண்ணிலடங்கா நினைவுகளுடன்,
ஏக்கத்தின் ஏடுகளுடன்,
எல்லாமே இவன்தான் என்றுணர்த்தும்
எண்ணத்தின் தூண்டுதலாக திருமணம்,..

அறிமுகத்துடன் அன்பான இருமனம் இனைய இதோ!!!

தோழியே!!!

எல்லை தாண்டி இருந்த இருவரும்
இணையத்தில் இணைந்து
இன்முகத்துடன், இன்பத்துடன்
ஊரறிய உன்னதமானவனை
உனக்கானவனை ,உன் வாழ்வில்
உள்வாங்கி, உறவுகளில் உச்ச
உறவாகி, உன் கரங்களால் அவன் கரம் பிடித்து
உண்மையின் அக்கினியை வளம் வந்து
உனக்கானவனாகப்போகும் கையால் மூன்று முடிச்சு
உன் கழுத்தில் கதிரவனாய்
உலாவரும் நாளுக்காக நான் ஏங்குகிறேன்!!!

தோழனே!!!

உன் காலம் முழுவதும் முடியாத பந்தமாய்,
உனை அன்பால் அரவணைக்கும் அன்னையின் அடுத்த ஜென்மமாய்,
உனை தன கண்ணில் வைத்து கண்கலங்காமல் காக்கும் கடவுளாய்,
உன் வாழ்விற்கு வளம் சேர்க்கும் வாழ்வாதரமாய்,
உன் உள்ளத்துள் உள்ள சங்கடங்களுக்கு சாந்தமாய்,சந்தோஷமாய்,
உனக்கானவளாக வரப்போகும் என் நண்பியை
உன் இதயத்தில் இதமாய் தாங்கு!!!

நான்!!!

இருவரின் மனமும் இணையும் திருமணம் காண
காத்துக்கிடக்கின்றேன், உங்கள் திருமண நாளே
எனக்கு திருமங்களகரமான் நாள்,
வரப்போகும் அந்நாள் என் வாழ்வின் வசந்த நாள்,
திருமணம் விரைவில் திருமண மேடையேற
வேண்டுகிறேன், வாழ்வில் அனைத்து வளங்களையும்
பெற்று வாழ வாழ்த்துகிறேன்!!!! :) :) :)
« Last Edit: August 17, 2012, 11:26:40 PM by vimal »