இவர்கள் ஆணோ பெண்ணோ
என்ன சாதியோ!
என்ன குலமோ!
என்ன மதமோ!
இவர்களுக்குள்
இப்படியோர் ஒற்றுமை
சந்தோஷ சங்கிலியில்
பிணைக்கப்பட்டு,
அரும்புகளாய் அன்பு
எனும் வார்த்தைக்கு
அர்த்தம் தெரியாமலும்
புரியாமலும் அன்பால்
இணைக்கப்பட்டு,
உள்ள உணர்வுகளை
உணராமல், தெருக்கள்
பல இருந்தாலும்
பார்த்து,சிரித்து,பேசி,மகிழ்ந்து
ஒன்றோடு ஒன்றாய்
கலக்கப்பட்டு,
பார்பவர்களின் உள்ளத்தை
இம்மாம்பிஞ்சிகள், இவன்
சாதி,மதம்,குலத்தால்
பெரியவன்,சிறியவன்
என்ற இறுமாப்பை
அகற்றி,
இருளை விரட்டி
பகலை கைகொண்டு
மேகத்தை துளையிட்டு
சிந்தனையின்றி
சிறகடித்துப் பறக்கிறார்கள்
வானத்தை தொட!!!