இத்தனை சிறிய இதயக் கூட்டுக்குள்
எத்தனை சுமைகள் !எத்தனை ஏக்கங்கள்!
இந்த உலகில் நிம்மதி எங்கு உள்ளது
பாசம் ,நேசம் உள்ளதா?
பரிவும் ,பிரிவும் உள்ளதா ?
இன்பம்,துன்பம் இரண்டையும்
ஒன்றாய் கருதும் என் வீட்டு
சுமைகளை எண்ணி பார்த்து வியக்கிறேன் ...
எங்கிருந்தோ இங்கு வந்து சுகமான
சுமைகளை தாங்கி,அன்பை தோலில்
சுமந்து ஆசைகளை நெஞ்சில் அடக்கி
அந்த சிங்கார தேரோட்டும் -என்
மன்னவன் -அந்த தேரில் பவனி வரும்
என் புதல்வன்-ஆகா இந்த சிங்கார
கூட்டுக்குள் தான் எத்தனை எத்தனை
இன்பங்கள்
தவழ்ந்து ,விழுந்து எழுந்து தடுமாறி
நடந்த போது தாங்கி பிடித்த
என்னை ஈன்ற தாயே !
சூப்பிய விரலை எடுக்க சொல்லி
சுரிரென்று அடித்த விட்டு
அரவணைத்த தந்தையே !
எந்தன் ஏல் பிறப்பிலும் தொடரும் பந்தம்
எட்டு திக்கிலும் தேடினாலும்
கிடைத்திடாத செல்வம்
கருவறையில் காத்து கௌரவமாய்
என்னை ஈன்றவளே -என் அன்னை
உன் தியாகத்தை ,உன் அன்பை
கண்ணென காத்து கடமையென வளர்த்து
கண்ணியமாய் என்னை காத்த-என் தந்தை
உங்கள் இருவரின் அன்பை ,அரவணைப்பை
பார்த்து கடவுள் காட்சி என் கண்கள் கூச நின்றது
கூசிய கண்களை துடைத்து விட்டு விழித்த போது
அங்கே என் பெற்றோர்கள் !!!!