இன்றைய குழந்தைகள்...
நாளைய இளைஞர்கள்!
நாளைய இளைஞர்கள்...
நாட்டை ஆள்பவர்கள்!
நாட்டை ஆள்பவரை நல்லவராய், வல்லவராய்
உருவாக்கும் கடமை மூவரிடம்!
மூவரில் முதலாமவர் பெற்றோர்...
இரண்டாமவர் ஆசிரியர்...
மூன்றாமவர் இச்சமுதாயம்!
இக்கடமையிலே முதன்மை நிலையம்
பெற்றோரின் கடமை தனை...
எத்துனை பெற்றோர்கள் அறிவர்?
குழந்தையை பெற்றால் போதாது
அக்குழந்தையை நல்லவனாய், வல்லவனாய்
வளர்த்தெடுப்பது தாய், தந்தையின்...
கடமை அன்றோ!
தான் பெற்ற பிள்ளையை ஒழுக்கமாய்
வளர்க்காததன் விளைவு...
தந்தையின் முன்னே புகை பிடிக்கும்,
மது அறுந்தும் பிள்ளைகள்...
பெற்றோர்களை முதியோர் இல்லத்திலே...
தள்ளிடும் அரக்க நெஞ்சம்...
கொண்ட பிள்ளைகள்!
இப்படி நீண்டு கொண்டே செல்கிறது
அட்டூழியத்தின் பட்டியல்!
தாயை போல பிள்ளை
நூலை போல சேலை
என்று எங்கோ படித்த நினைவு!
பெற்றோரை போலத்தானே
பிள்ளைகளும்!
நாம் நல்லவராய், வல்லவராய்
இப்புவியினிலே வாழ்ந்திருந்தால்!
நம் பிள்ளைகளும் நல்லவராய், வல்லவராய்
வாழ்வார்கள்!
நாம் கெட்டவராய், கொடியவராய்
இப்புவியினிலே வாழ்ந்திருந்தால்!
நம் பிள்ளைகளும் அப்படித்தானே
வாழ்வார்கள்!
அதில் விதிவிலக்காய் ஒரு சிலர்
இருக்கலாம்!
குழந்தைகளை பெற்றேடுத்தால் போதாது
அவர்களை நல்லொழுக்கம் உடையோராய்...
வளர்ப்பதுவும் பெற்றோரின் கடமை அன்றோ!
குழந்தையின் கை பிடித்து நடைபழக
வைப்பது போல்...
நல்லோழுகங்களை வாழ்க்கையிலே
நடைமுறைப்படுத்த வைப்பதுவும்
பெற்றோரின் கடமை அன்றோ!
குழந்தைக்கு ஊட்டும் உணவை போன்று...
அன்பு, ஈகை, இறக்கம், நேர்மை, சுயமரியாதை
போன்ற நற்பண்புகளை ஊட்டி
வளர்ப்பதுவும் பெற்றோரின்...
கடமை அன்றோ!
இக்கடமைகளை செய்திட முனைந்திடுவோம்!
அன்பெனும் மந்திரத்தால்...
ஒழுக்கமேனும் உயர்பன்பால்...
நேர்மை எனும் நற்பன்பால்...
நாளைய சரித்திரத்தை மாற்றிடுவோம்!
நல்லதொரு சமுதாயத்தை உருவக்கிடுவோம்!