இந்த பூமியில் எத்தனை கடவுள் இருந்தாலும்
இங்கே மனிதன் வாடுகிறான்
எத்தனை தத்துவம் இந்த பூமியில் பிறந்தாலும்
எந்த மனிதனும் அதன் நோக்கில் செல்வது இல்லை
அடடா மனிதா ........
அறியாமை என்ற கூட்டில் பிறக்கிறான்
ஆசை என்ற வீட்டில் வளர்கிறான்
இளமை என்ற பாட்டில் ஆடுகிறான்
முதுமை என்ற காட்டில் இறக்கிறான்
எதை கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு
எதை நீ படைத்தாய் அது வினாவதற்கு
சிதை படும் மேனிக்கு செருக்கு எதற்கு
அடடா மனிதா ........
உடலுக்குள் ஒரு ஆத்மா உள்ளது என்கிறது வேதம்
உயிரின் துடிப்பு தான் அந்த ஆத்மா என்கிறது மனித நேயம்
கருவில் உருவாகி கல்லறைக்கு போகும் முன்
அந்த இதயத்தில் ,அந்த ஆதமாவில் எத்தனை போராட்டம்
ரணமாகி போன அந்த உடம்புக்கு
பணம், பதவி, சிம்மாசனம் ஹ ஹ ஹ
எலும்பாகி போன இந்த மனிதனின்
முகத்தில் தான் எத்தனை வருத்தம்?
"ஆம்" உடலை துறந்து விட்ட வருத்தமா?
இந்த எலும்பு கூட்டிற்கு உணவு தேவை இல்லை,
உடைகள் தேவை இல்லை,இருப்பிடம் தேவை இல்லை
"ஏன்" உறவே தேவை இல்லை என்பதலா.............
அடடா மனிதா!!! மனிதன் என்பவன் ஆனந்தமாக
சிரிக்க வேண்டும் மனிதன் போல் அழகாக
சிரித்து அடுத்தவனை அழ வைக்கும் அந்த
கபட சிரிப்பை விட்டுவிட்டு ஆனந்த
சிரிப்பு சிரிக்க வேண்டும்!!!
By Sana