Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 010  (Read 2461 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
                                      நிழல் படம் எண் : 010

இந்த களத்தின் நிழல் படம் என்னால் கொடுக்கப்பட்டுள்ளது ..  ..... இந்த அழகிய படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....

                                     
« Last Edit: October 11, 2018, 06:48:29 PM by MysteRy »
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
உன்னால் பிளவு கொண்ட
என் இதய பையை
உன் நினைவு எனும் ஊசி கொண்டு
என் காதல் எனும் நூல் கோர்த்து
இணைத்துக் கொண்டிருகின்றேன்

உன்னால் எத்தனைவாட்டி
கிளிக்கப்படாலும்
என் இதயம் ஏனோ
உன்னால் கிளிக்கபடவேனும்
துடிக்க நினைக்கின்றது ...

உன் நினைவுகள்
ஊசியாக குத்தினாலும்
என் காதல் அதை
உள்வாங்கி கொள்கிறது
காயத்தின் வடுக்கள்
ஆறிப் போனாலும்
என் காதலின் வடுக்கள்
உன் நினைவுகள் எனும்
ஊசிகளால் ஒவொரு கணமும்
துளைக்கப்பட்டு
வடுக்கள் துகில் உரியப்பட்டு
வலிகள் பிரசவிக்க செய்கிறது

உன்னால் கிளிக்க்பட்ட இதயத்தை
உக்காந்து நெய்வதன் அவசியம் தெரியுமா ..?
உனக்கு என் இதயம்தானே விளயாட்டு பந்து
உருட்டி விளையாட அது உனக்கு எப்பவும் வேண்டும்
விளையாட்டில் கூட
வேதனையும் ஏமாற்றமும் ஏன் தோல்வி கூட
உனக்கு பரிசளிக்க என் இதயம் விரும்பவில்லை ...
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.

ஓவியம் எனது பார்வையில்

உன்னை நினைத்த
இதயம் இன்று
தனியே துடிக்க
காதலை சொல்ல
முனைந்த முயற்சிகளெல்லாம்
தோல்வியில் முடிய
சுவாசம் மறக்காமல்
உன்னை சுமந்த இதயத்தில்
இன்று ஏனோ சிறு பிளவு
உடைந்த போன இதயம்
தேடி துடிப்பது
உன்னை மட்டுமே

என்னை சுற்றி
வந்த உன்னை
பாராமுகமாய் இருந்ததால்
இன்று என்னை பார்க்காமல்
தவிக்க விட்டு
பாராமுகமாய்
இருப்பது முறையோ...

கோடி வார்த்தைகள்
நொடிக்கொருதரம்
பேசுபவள் இன்று
ஊமையாய்
உன் ஒரு வார்த்தைக்காக
காத்திருக்கிறேன்

முள்ளாய் உதிர்த்த
உன் வார்த்தையால்
கிழிந்த என் இதயம்
உதிரம் சிந்த
உதிர்த்து விடு
ஒரு வார்த்தையை ...

காதல் எனும்  ஊசியில்
நேசத்தை நூல்லாக்கி
உன் தீண்டலை மருந்தாக்கி
கிழிந்த இதயத்தை தைத்து விடு..

கிழிந்த இதயம்
மீண்டும் துடிக்க நினைப்பது
உன் ஒருவனுக்காகவே....

ஏற்றுக்கொள்
என் இதயத்தை
காதலை காதலாய்
தருகிறேன்...
என்னை விட உன்னை
உண்மையாய்
காதலிக்க யாரால் முடியும்??  ;) ;) ;) ;)


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline RemO

உனக்காய் துடித்து
ஒவ்வோர் துடிப்பிலும்
உன்னை நினைத்து
என்னைச் சுமந்தவளை விட்டு
உன்னைச் சுமந்த என் இதயம்
இன்றோ இரத்தம் சிந்துகிறது
நீ கிழித்த காயத்தால்
 
நான் அறியா வண்ணம்
என்னுள் நுழைந்த நீ
நான் அறியாமல் சென்றிருக்கலாமே?
போகும் போது மட்டும்,
நீ வாழ்ந்த என் இதயத்தை
குத்தி கொல்ல துணிந்ததேன்??

கண்ணீர் சிந்தாதே
இரத்தம் சிந்தும்
என் இதயத்திற்காக,
பட்ட காயத்தை
நட்பென்னும் நூல் கொண்டு
தைத்திடுவேன்,
ஆனால் தைத்த வடு
வாழும் உன் நினைவுகளாய்
« Last Edit: December 21, 2011, 05:45:36 AM by Remo »