பேஸ் புக் ,டிவிட்டர் , யு டுயுப் , ஸ்கயிப்
நேரத்தை செலவிடும் உங்கள் கூட்டாளிகள்.
உலகத்தின் பார்வையை ஈர்க்கும் புகைப்பட குப்பைகள்.
பிடிக்கும் பிடிக்காதென்று உங்கள் எண்ணங்களை பதிவிடலாம் ..
அம்மா சொல்லுவாள் தலை நிமிர்ந்து நடவென்று ..
ஆனால் தொடர் வண்டி , பேருந்து ,வணிக மையம், சாலை ஓரமென .
தலைநிமிர்ந்து நடைபோடும் நாம் .,சமூக தளங்களில் தலைகவிழ்ந்து போனோம்..
வார்த்தை மறந்து போய்.. எழுத்துகளை மட்டுமே பரிமாறி கொள்கிறோம் ..
சுவரை பார்ப்பது போல பேஸ்புக் பார்க்கிறாய் ..
தெரியாதவர் நட்பின் அழைப்பை நெகிழ்ச்சியோடு பார்க்கிறாய் ..
என்ன வாங்கினாயோ அதை பற்றி ட்விட்டர் இல் கிறுக்குகிறாய்
யு டுயூப் என்ற அகழியில் வீழ்ந்து கிடக்கின்றாய் .,,
ஸ்கை பில் கமலோடும்., ஜமாலோடும் வெட்டியாய் பேசுகிறாய் ..
பொருந்தாத தூரத்தில் இந்த பொறிகள் .,,
மனங்களை சிறை பிடிக்கும் முடிவில்லா வலைகள் ..
வந்தவர்களை வசீகரிக்கும் சுவைகொண்ட உணவகங்கள் .,
யாரையும் அடிமையாக்கும் இங்கே கிடைபதேன்னவோ..
கொஞ்சம் சந்தோசமும் ., கொஞ்சம் பூக்களுமே .,,
திரையில் தெரியும் எழுத்துக்கு பின்னால் அர்த்தங்களை மறைத்து
போலியான பொம்மைக்கு பின்னால் உண்மையான உணர்வுகள் மறைத்து
சிந்தனைகளுக்கும் ,இலட்சியங்களுக்கும் வண்ணம் பூசி ..
பதிவிட்டு .. பதிவிட்டு ., நம் எல்லா அசைவுகளையும் பதிவிட்டு ..
யாருக்கு தெரியும்.,, யாரும் படித்தார்களா ., பார்த்தார்களா என்று ?
இவ்வுலகை விட்டு நாம் விடைபெறும் நாளில் .,
இவ்வளைதலங்களும் விடை பெற வழி செய்வோம் ..
என் தனிமை போய்விட்டது .,,அதற்கு என்ன விலை ?
வலைதளங்களுக்கு ஏது கருணை ..
எண்ணங்கள் திருடப்படுகிறது .. சட்டங்கள் மீறப்படுகிறது
வார்த்தைகளே உண்மையான ஆயுதம்..
உன்னை ஒரு அமானுஷ்யம் பார்க்கிறது..சந்தர்பத்திற்காக .
உன்னை பற்றிவிட்டால் மந்திரக்காரன் கை பதுமை நீ ..
மறந்துவிடாதே ! உன் வாழ்கையை நீ வாழ வில்லை என்பதை .,,