பச்சைநிறமே! பச்சைநிறமே!
வளமையைக்காட்டும் பச்சைநிறமே!
வண்ணவண்ண ஏழு நிறத்தினுள்
முதன்மை நிறமே! . பச்சைநிறமே!
பாறைகளின் மேலும் , உயர்ந்த
மரங்களின் மேலும்
உறைபோல மூடி படர்ந்து வளரும்
பாசி இனத்தாவரமே!.
இரு உயிரினங்கள் இணைந்து
இணைந்த வாழ்க்கை நடத்தும்!
நட்பு முறைக்கோர் சான்றாய்
இலக்கணமான தாவரமே!
இரு நுரையீரல் போன்ற காட்சியிலே!
புகைப்பதனால் ஒன்று பாதியளவு
பாதித்ததுபோல் காட்சிதரும்
பாறையில் வளர முடியாத தாவரமே!
இரட்டை இலை போன்ற காட்சியிலே !
கடன்சுமையால் ஒன்று பாதியளவு
பாதித்ததுபோல் காட்சிதரும்
கரையான்களால் வளர முடியாத தாவரமே!!
புகைப்பதை நிறுத்தி உடல் நலம்
பேண வழி காண வேண்டுமே ! !
மீண்டும் கரையான்கள் வேரை அழிக்காதிருக்க
அகற்ற வழி காண வேண்டுமே !.!
காற்றும் நீருமே உயிரினங்கள்
வாழ வழி செய்யும் போது
இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு,
இயற்கை சூழல் சீர்கெட்டால்
அதனைதடுக்கும் தாவரமே!
அரிதான மூலிகை செடிகளை பராமரிப்போம்!
சுற்றுச்சூழலை பாதுகாப்போம்!
இயற்கையுடன் இணைந்து செயல்படுவோம்!
வளம் குன்றா வேளாண்மைக்கு
உயிர்க்கோளத்தைக் காப்பாற்றுவோம்! ! !
.