என் அன்புள்ள அப்பா !உமை போல யாருண்டு
கருவில் உருக்கொண்ட நாள் உன் நேசம் தொடங்கியதோ.,,
என்னை நெஞ்சில் சுமந்தாய் தோளில் சுமந்தாய் .,,
என்னை கை பற்றி ., பூமியில் நிற்கவைக்க பலம் தந்தாய்.,,
இன்று இங்கே நான் எழுதும் நிலை தந்தாய் .,,
என்னை பார்த்த நாளில் உன்னை மறந்தீரே!
உலகத்திற்கே புரியாத என் மொழியை அறிந்தீரே!
என் தேவை சந்திக்க உன் தேவை மறந்தீரே!
என் கண்ணீரை துடைத்தே உன் கண்ணீரை மறைத்தீரே!
அப்பா! அப்பா! இது என்னாப்பா அப்பா அப்பா சொல்லுப்பா !
என் அர்த்தமற்ற கேள்விக்கு சலிக்காமல் பதிலளித்தீரே !
உன் அன்பிற்கு எது ஈடு !
உன் தியாகம் நான் செல்லும் கோடு..!
என் உறக்கம் உன் தொழில் தானே!
என் கீதம் உன் இதயத்தின் துடிப்பே தானே !
என் முதல் ஆசாரியர் நீ தானே!
என் காதில் ஒலித்த முதல் சங்கீதம் நீகூறும் என் பெயர்தானே!
என் உணவே உன் கை இல் இருந்தே தானே!
என் தேவைகளை வேர்வையால் சாதித்து தந்தவர் நீதானே!
என் முதல் ரசிகனே நீதானே ! என் வெற்றியன் காரணம் நீதானே!