நீயும் நானும்,
எங்கும் நுழைந்தோம்..
எதிலும் வென்றோம்..
அலை பல கடந்தோம்..
இன்றும் நிற்கிறோம் ..
நீயும் நானும்,
ஏற்றங்கள் கண்டோம்..
தடை பல கண்டோம்..
காணா இடம் காண கண்டோம்..
இன்றும் காண்கிறோம் ..
நீயும் நானும்,
இணையாய் ஆனோம் ..
நமக்கு நாமே என்றே ஆனோம்..
இப்போ நாமும் சிறப்பாய் ஆனோம்..
என்றோ நாம் சொந்தம் ஆவோம்?
நீயும் நானும்,
வாழ்வின் அர்த்தம் ஆவோம் ..
வழிதனில் வரும் தடை அகற்றி..
வாழ்வோம் ஒன்றாய் வரும் நாளிலே !