எவர் போதிப்பது உனக்கு?
அவ்விடம்விட்டு அகலும் வரை
அவனுக்கே தெரியாது
தான் தடுமாறிகிரமோ என்று
தடுமாறுவது அவனது கால்கள் அல்ல
அவனது காலங்கள் என்று
எவர் போதிப்பது அவனுக்கு?
உண்ண உணவின்றி உள்ளபோதும்
ஊற்றிக்கொள்ள மது கேட்கும் அவனுக்கு
எவர் எடுத்துகூறுவது..?
அளவில்லா மதுவினால் அடிமையாகிபோன அவன்
எழுவதே எதற்கு என்று தெரியாமல்
வீழ்ந்து கிடக்கிறான் வீதி மண்ணில்...,
கடந்த காலத்தை மறந்த அவன்
எதிகாலத்தை மட்டும் எப்படி எதிர்கொள்வான்?
மதுவின் மடியில் மடங்கி கிடக்கும் அவனது
மனம் மாறுவது எப்பொழுது?
குடியின் அருமை தெரிந்த அவனுக்கு
வாழ்வின் அர்த்தம் புரிவது எப்பொழுது?
மகிழ்ச்சியான வாழ்வு மனிதனுக்கு மட்டுமே
அதில் மதுவை ஊற்றி அழித்துவிடதே..,
மகிழ்சிக்கு மது வேண்டும் என நினைக்கும் உனக்கு
மனமும் வேண்டும் என நினைகவில்லையா ..,
சிற்பம்போல நீ காட்சியளித்தாலும்
நீ என்னவோ சிறைபட்டிருப்பது மதுவின் மடியில்தான்
சிறைக்குள் இருக்கும் சிற்பதிற்குதான்
என்ன மதிப்பு...?
உணர்ந்துகொள் உணர்வை புரிந்துகொள்
எழுந்து நடப்பவன் பாதம்தான் மண்ணில் பதியும்
வீழ்ந்து கிடப்பவன் பாதம் அல்ல..,
நிலையில்லா வாழ்வில் நினைவில்லாமல் இருக்காதே
நினைவோடு இருந்திடு
நித்தம் வாழ்வில் வென்றுவிடு ...,