நான் ! நீ ! நாம்! நாடு!
கட்டுவாசியாய் வாழ்ந்தவன் நாகரீக அரிதாரம் பூசிய போது
பிறப்பு உரிமை கண்ணாடியில் கண்ட முகம் தான் ஜனநாயகம் !
என்னை சுமந்த கருவறையும் , என் கல்லறை சுமக்கும் என் தாய் நாடும் ஒன்று தான்
என் முதல் சுவாசம் கொடுத்த இரண்டாம் தாய் என் நாடு!
என் முதல் தாகம் தணிக்க தாய்ப்பாலை தண்ணீராய் தந்தவள் என் நாடு!
என் முதல் வார்த்தை ஒலித்த பள்ளிக்கூடம் என் நாடு !
என் முதல் காதலை உணர பசுமை கம்பளம் விரித்த கனவு கன்னி என் நாடு!
என் அறிவை தீட்டி , என் புகழ் ஏற்றி , என்னை நானே யார் என்று உணர செய்தவள் !
என்னை சீர் தூக்கிய என் தாய் நாட்டை .......
ஆள போகும் ஒருவன் ! எப்படி இருக்க வேண்டும்...
தாயை தாண்டி தாய் நாட்டை நேசிப்பவனாய் ...
அள்ளிகொடுத்த அன்னையை ஆராதிக்கும் ஆர்வலனாய்...
வேகம் நடையில் , விவேகம் செயலில் ...
ஆர்பரிக்கும் அறிவியல் உலகத்தில்.....
என் நாட்டின் பிரஜைகளை , பிரிநிதிகளாய் நிர்ணயிக்கும் விஞ்ஞானியாய்
நிதர்சன நிஜங்களை நியாய தராசில் பங்காளிகள் பாரபச்சம் பார்க்காமல்
மனித மாண்புகளை வேட்டையாடும் "பணம் "என்னும் முதலாளித்துவத்தை
அடக்கி .... ஏழை , பணக்காரன் ஏற்றதாழ்வுகள் இல்லா...சமுதாயத்தை உருவாக்கி ..
எல்லாரும் சமம்..எல்லாரும் நம் மக்கள் ...எல்லாரும் நல்லோராய் வாழ
வாழ் நாளை அற்பணிக்கும் ஒரு மாமனிதன் என் தாய் நாட்டை வழிநடத்தட்டும் ....
ஒரு பேனா , தன் தலை குனியும் போது தான் ஒரு நாட்டின் தலை விதி நிமிரும் ...
என் கை விரலில் போடபடுவது வெறும் மை அல்ல...
என் நாட்டின்
பெருமை ,
ஓற்றுமை ,
பசுமை ,
வளமை
எள்ளாமை ,
இல்லாமை ....ஓங்கி !
வறுமை
கல்லாமை
பொறமை
ஆற்றாமை ......நீங்கி
என் நாடு , உன் நாடு , நம் நாடு ......ஆள போகும் மனிதனை ...தேர்தெடுக்கும்
உன்னத " மை " உரிமை ........உங்கள் விரல் ....நீட்டும் முன் ....
சிந்திப்போம் .....செயல் படுவோம் ....
என்றும் அன்புடன்
உங்கள் குயில் ....
நான் ! நீ ! நாம்! நாடு!
கட்டுவாசியாய் வாழ்ந்தவன் நாகரீக அரிதாரம் பூசிய போது
பிறப்பு உரிமை கண்ணாடியில் கண்ட முகம் தான் ஜனநாயகம் !
என்னை சுமந்த கருவறையும் , என் கல்லறை சுமக்கும் என் தாய் நாடும் ஒன்று தான்
என் முதல் சுவாசம் கொடுத்த இரண்டாம் தாய் என் நாடு!
என் முதல் தாகம் தணிக்க தாய்ப்பாலை தண்ணீராய் தந்தவள் என் நாடு!
என் முதல் வார்த்தை ஒலித்த பள்ளிக்கூடம் என் நாடு !
என் முதல் காதலை உணர பசுமை கம்பளம் விரித்த கனவு கன்னி என் நாடு
என் அறிவை தீட்டி , என் புகழ் ஏற்றி , என்னை நானே யார் என்று உணர செய்தவள்
என்னை சீர் தூக்கிய என் தாய் நாட்டை .......
ஆள போகும் ஒருவன் ! எப்படி இருக்க வேண்டும்...
தாயை தாண்டி தாய் நாட்டை நேசிப்பவனாய் ...
அள்ளிகொடுத்த அன்னையை ஆராதிக்கும் ஆர்வலனாய்...
வேகம் நடையில் , விவேகம் செயலில் ...
ஆர்பரிக்கும் அறிவியல் உலகத்தில்.....
என் நாட்டின் பிரஜைகளை , பிரிநிதிகளாய் நிர்ணயிக்கும் விஞ்ஞானியாய்
நிதர்சன நிஜங்களை நியாய தராசில் பங்காளிகள் பாரபச்சம் பார்க்காமல்
மனித மாண்புகளை வேட்டையாடும் "பணம் "என்னும் முதலாளித்துவத்தை
அடக்கி .... ஏழை , பணக்காரன் ஏற்றதாழ்வுகள் இல்லா...சமுதாயத்தை
எல்லாரும் சமம்..எல்லாரும் நம் மக்கள் ...எல்லாரும் நல்லோராய் வாழ
வாழ் நாளை அற்பணிக்கும் ஒரு மாமனிதன் என் தாய் நாட்டை வழிநடத்தட்டும் ....
ஒரு பேனா , தன் தலை குனியும் போது தான் ஒரு நாட்டின் தலை விதி நிமிரும் ...
என் கை விரலில் போடபடுவது வெறும் மை அல்ல...
என் நாட்டின்
பெருமை ,
ஓற்றுமை ,
பசுமை ,
வளமை
எள்ளாமை ,
இல்லாமை ....ஓங்கி !
வறுமை
கல்லாமை
பொறமை
ஆற்றாமை ......நீங்கி
என் நாடு , உன் நாடு , நம் நாடு ......ஆள போகும் மனிதனை ...தேர்தெடுக்கும்
உன்னத " மை " உரிமை ........உங்கள் விரல் ....நீட்டும் முன் ....
சிந்திப்போம் .....செயல் படுவோம் ....