Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 103  (Read 3291 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 103
இந்த களத்தின்இந்த  நிழல் படம் MyNa அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
« Last Edit: October 11, 2018, 10:13:05 PM by MysteRy »

Offline ராம்

  • Hero Member
  • *
  • Posts: 509
  • Total likes: 894
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உயிருள்ளவரை உன்னையே நேசிப்பேனடி.....
காதலே நீ  எங்கிருந்து  வந்தாய் 
பூட்டியிருந்த என் மனதை
ரகசியமாய் திறந்து அதில்
நிரந்தரமாய் குடிபுகுந்த
காதலே நீ எங்கிருந்து வந்தாய்..

உயிரில்லா  உருவம்  நீ
உயிரெடுக்கும் ஆயுதமும் நீ
உன்னால் வசப்படாதவர் உண்டோ
உன் வசப்பட்டால் ஏனோ
சுமைகளும் சுகமாகின்றன
நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த
என்னை வானில் சிறகடிக்கச் செய்த
காதலே நீ எங்கிருந்து வந்தாய்..

வாழ்க்கையின்  போக்கிலே  இலக்கு
இல்லாதவனாய்  பயணித்தேன்
காதலை  வெறுத்தவனாய் !!!
எங்கிருந்தோ  வந்தாய்  எனக்காகவே
நான்  செய்யும்  அனைத்தையும்  ரசித்தாய்
என்னை  உனக்குள்  வசப்படுத்தினாய் 
உனது  காதலை வெளிப்படுத்தி
என்னை உன்னோடு சங்கமித்த
காதலே நீ எங்கிருந்து வந்தாய்

முகம் கானது நாம்
இருவரது இதயங்களும் பரிமாறி
காதலுடன் பயணித்தோம்
நாம் தனிதனியே இருந்தாலும்
காதல் என்னும் இன்ப வானிலே
சந்தோசமாய் பறக்கின்றோம்
சின்ன சின்ன சண்டைகள்
செல்லமான கொஞ்சல்கள்
உனக்கு நான் எனக்கு நீயென
இதே சந்தோசத்தோடு 
வாழ்க்கை பயணத்தை 
தொடருவோம் கனவினில்...
 
காதலியே என் உயிருள்ளவரை உன்னையே நேசிப்பேனடி ....
« Last Edit: May 24, 2016, 07:39:05 PM by ராம் »

Offline ReeNa

விடியும்  முன்  என்  கனவில்  வந்தவளே
விடிந்த  பின்  என்  வாழ்வில்  வந்தவேளே
காதலிலே  விழுந்த  என்  மனமே
கரம்  சேரும்  வரை  தத்தளிகுமே
 
ஏனோ   ஏதோ உன்னை  கண்ட  பின்பு
நான் நானாகவே இல்லை  இன்று 
உன்  ஒற்றை  பார்வை  போதும்  என்னை  சிறை  அடைத்திடவே
உன்  கண்  இடறி  விழுந்திடுவேன்  உன்  இதயத்தில்  இடம்பெறவே

வார்த்தையெல்லாம்  கவிதையாக  மாறுதே
நேசிக்க   நீ  இருக்கும்  போது   
நீ  வந்த  பின்  சுவாசிக்கும்  காற்றை  மறந்தேன்
வாழ்க்கையின் காயங்கள்  ஆற்றின  உன்  அன்பில்  கவர்ந்தேன்

நீயும்  நானும்  சேர்ந்தே  செல்லும்  நேரம்
வானில்  மேக கூட்டம்  கூடி பேசும்  தாளம்
பகல்  இரவு  பொழிகின்ற  பனி  துளிகள்
நாம்  கட்டின காதல் கோட்டையின்  சாட்சிகள்
« Last Edit: May 22, 2016, 11:06:45 AM by ReeNa »

Offline thamilan

காதல் உருவாக்கப்படுவதல்ல
தானே உருவாவது
ஒரு பூவைப் போல
தானே மலருவது

காதல் நம் வசமில்லை
நாம் காதல் வசப்படுகிறோம்
காதல் வா என்றால் வருவதும் இல்லை
போ என்றால் போவதுமில்லை
காதலுக்கு கட்டளையிட
மனிதனால் முடியாது
காதலின் கட்டளைப்படியே
மனிதன் ஆடுகிறான்

காதல் ஒருவகை நெருப்பு
அதில் வெப்பமும் உண்டு
குளிர்ச்சியும் உண்டு
காதலின் வெப்பத்தில் விழுந்து
விட்டில்பூச்சிகளாய் மடிந்தவர்கள் பலர்
அதன் குளிர்ச்சியில்
மெய்சிலிர்த்துப் போனவர்களும் பலர்

காதல் ஒரு நெருப்பு
பச்சையாய் இருக்கும் மனிதன்
காதல் நெருப்பில் பதப்படுத்தப்படுகிறான்
அழுக்கான மனிதன்
காதல் நெருப்பில் புடம் போடப்பட்டு
தூய்மையாகிறான் 

காதல் கந்தகநதியல்ல
அது ஜீவநதி
இந்த நதிக்கரை நாகரீகத்தின் 
அகரம் ஆதாம்
கைப்பற்றிய சிகரம் ஏவாள்

இரு உயிர்கள்
ஒரு கனி பிடுங்கி தின்னிட
வெட்கம் உருவானது
இலைகுழைகள் ஆடைகள் ஆனது
காதலுக்கு முதல் பிள்ளையார் சுழி இது தான்




Offline BreeZe

  • Hero Member
  • *
  • Posts: 703
  • Total likes: 2381
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Smiling is the prettiest thing you can wear
தூக்கத்தை தொலைத்த கண்கள்
கனவுகள் சுமக்கும் மனது
ஒரு வட்டத்துக்குள் சுழலும் சிந்தனைகள்
பைத்தியங்களுக்கு ஒப்பான செயல்கள்  இவை
காதலின் அடையாளங்கள்

தொலைபேசிக் கொஞ்சல்கள்
வாழ்த்து அட்டை வசீகரங்கள்
ஈ மெயில் முத்தங்கள்
தனிமைப் பிதட்டல்கள்
சின்னச் சின்ன ஊடல்கள்
திருட்டு முத்தங்கள் இவை
காதலின் செயல்பாடுகள்

அம்பிகாவதி அமராவதி
லைலா மஜ்னு
சலீம் அனார்கலி இவர்கள்
நிறைவேறா காதலின் சின்னங்கள்

காதல் உருவமில்லா ஓர் உயிர்
ஈருயிர்களை  ஓருயிராக்கி
ஈருடல்களை ஓருடலாக்கி
ஈர் இதயங்களை ஓர் உணர்வில்
துடித்திட வைத்திடும் 
 உணர்வுகளின் சங்கமம்
உணர்சிகளின் வெளிப்பாடு காதல்

தென்றலாக வாழ்வில்  வரும் காதல்
சில நேரம் புயல் கடந்த பூமியாகிவிடும்
நம் வாழ்க்கை



பதிப்புரிமை
BreeZe
« Last Edit: May 23, 2016, 07:00:28 AM by BreeZe »
Palm Springs commercial photography

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • *
  • Posts: 218351
  • Total likes: 23050
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வாழ்வில் நம்பிக்கை தந்தாய்
வாழ வழிகளும் அமைத்தாய்

 
வாழ்க்கை என்னை கீழே தள்ளும்போதெல்லாம்       
என் அருகில் இருந்து தோள் கொடுத்தாய் 

 
எனக்கு அரவணைக்க  பயிற்று வித்தவன் நீ                 
அன்பைப் பகிர்ந்துகொள்ள  பழக்கியவனும்  நீ   

நேர்வழி காட்டினாய்
நேர்மையான மனிதனாய் என்னை மாற்றினாய்   

காதலை உணர்த்தியவன் நீ
காதலின் மேன்மையை பயிற்றுவித்தவனும் நீ 

நான் வாழ்வதும் உன்னாலே
என் வாழ்க்கையும் உன்னிலேயே     

என் பருவ காலங்கள்                                     
பரவசமானதும் உன்னாலே

காதல் என்றால் கண்முன் தெரிபவன் நீயே   
என் உலகமும் நீயே என் உற்ற நண்பனும் நீயே

நான் உன்னை காதலிக்கிறேன் ஏனென்றால் 
இரக்கமுள்ளவன் எனது நம்பிக்கையின் நாயகன் நீயே 
நான் உன்னை காதலிக்கிறேன் ஏனென்றால்
என் இன்பமும் என் வாழ்க்கையும் என் கனவுகளும் நீயே

 
என்னை ஒரு பெண்ணாக உணர்த்தியவனும் நீயே
எனது நன்றிகள் என்றும் உனக்கே

Offline Mohamed Azam


காதல் என்பது கடைத் தெருவில் பெண்ணை பார்த்து
கண் சிமிட்டினால் வருவது அல்ல……

உள்ளத்தால்  உணர்வுகளோடு பல ஆண்டுகள் பார்த்து
புரிந்துக்கொண்டு வருவதற்கு பெயர் தான் காதல்!.....

கல்லரையிலும் உனக்காக விழித்திருக்கும் கண்களில் வரும்
கண்ணீர் துளிகூட உனக்காக உன் வாழ்விற்காக என்று நினைத்து
கண்ணீரின் பெருமிதம் யாருக்கும் புரியாது …….

காற்றில் அசைந்தாடிக் கொண்டிருக்கும் 
நாணல் அல்ல காதல் தொட்டு  விட்டு செல்ல …….

நேசிக்கும் இதயம் உண்மையாக இருந்தால்
நான் விடும் மூச்சு காத்தும் உனக்காகத்தான்……..

கண்ணாடி குவலையின் முன் நின்று  முகம் பார்த்து
புன்னகைக்கும் போது வருவது காதல் என்றால்…..

இதயச்சுவற்றின் சுவாசமாய் கலந்து அசைந்தாடிக் கொண்டிருக்கும்
என் குறுகிய நேரத்தில் கூட உன் பெயரே என் செவிபுலனுடாக
ஒரு இதய துடிப்பின் இசையை போல
கேட்டுக் கொண்டு வாழும் வாழ்க்கையை
என்ன பெயர் சொல்லி அழைப்பது?....

« Last Edit: May 25, 2016, 10:49:39 AM by Mohamed Azam »

Offline SuBa

உன்னை நான் கண்டபோது
உன் கண்கள் பிரகாசித்தன
உன் கண்ணில்
கண்டேன் நான் என்னை
நாம் சந்தித்தபோது
உதடுகள் அசையவில்லை - நம்
கண்கள் பேசின
உன்னைக் கண்டதும்
நான் தேடும் ராமன் நீ தான் என புரிந்துகொண்டேன்

கண்டதும் காதல் - அது
பொய்யில்லை என உணர்ந்து கொண்டேன்
 காதல் கொண்டேன் நான் உன்மீது
நாம் உள்ளத்தாலும் எண்ணத்தாலும்
நெருங்கினோம் மிக மிக நெருங்கினோம்
என்னை விரும்புவதாக நீ சொன்ன வார்த்தையில்
ஒரு மல்லிகைத் தோட்டமே
என்மீது மலர் தூவியது போல மகிழ்ந்தேன் 

கைகளை கோர்த்துக் கொண்டு
உன்மீது சாய்த்தபடி நாம் நடக்கையில்
இந்த ஒரு ஜென்மம் போதும் என நினைத்தேன்
பேசினோம் பேசினோம் பொழுதுபோவது தெரியாமல்
 
நீ எனது காதலன் மட்டுமல்ல
எனது உயிர் நண்பனும் கூட
நான் அழுகையிலே
என் கண்ணீரை தாங்கிப்பிடித்தாய்
உன் முத்தங்களால்
என் கண்ணீரை துடைத்தாய்

எனது பாதுகாவலனும் நீதான்
எனது சக்தியும் நீதான்
என்னை நம்பு 
விலையற்றது நம் காதல்
என் கண்களுக்கு
உன்னையும் என்னையும் தவிர யாருமே
உலகில் தெரிவதில்லை 
« Last Edit: May 23, 2016, 05:35:49 PM by SuBa »
commercial photography locations

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5181
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
  ;)அவனின்றி ஓர் அணுவும் அசையாது!!!
காதல் இன்றி இவுலகம் அசையாது !!!   
     காதல் என்பது வலி
     அதை அனுபுவிதவர்களுக்கு
         வலியிலும் ஒரு சுகம் ...!!!
 காதல் என்பது உண்மை
   அதை உணர்ந்தவர்களுக்கு
       வாழ்வில் அற்புதம் ..!!!
 காதல் என்பது உணர்வு
   அதை உணர்ந்தவர்களுக்கு
        சாகவரம்...!!!
    இவுலகில் எந்த உறவும்
       நிரந்தரம் இல்லை ...!!!
  இருக்கும் வரை உண்மையான
    அன்பை கொடுப்போம் ...!!!
 சட்டை கிழிஞ்ச தைச்சடலாம்...
    மனசு கிழிஞ்ச தைக்கமுடியாது ...!!! ;) ;) ;) ;)
 வாழும் வரை யார் மனதையும்
    காய படுத்தாமல் ...உண்மையான
 அன்போடு பழகுவோம் ....!!!!
    காதல் என்றும் அழிவதில்லை ...!!!
...இத்துடன்
       விடைபெறுகிறேன்...
  நான் உங்கள் சிநேகிதி
     ரி.... தி...கா....நன்றி வணக்கம்...
« Last Edit: May 24, 2016, 03:46:41 PM by RiThiKa »


Offline KuYiL

                                வானம் வசப்படும்!

  கட்டு கட்டாய் கவிதை எழுதி ,  முத்தங்களை காற்றில் தூது விட்டு
  உயிரே! உறவே! நிஜமே !நிழலே! நிகழ்வே !எதிர்காலமே !என்று
  உருகி , உயிர் கொடுத்தவள் ஒருத்தி இருக்க உயிரே இவளை / இவனாய்
  யாதுமாகி நின்ற காதல் !......
 
   எல்லாம் காதல்
  முடிவில்லா காதல்
  முகவுரை எல்லா காதல்
  உருவம் இல்லா காதல்
  அனைத்தும் காதல்
  ஆழமான காதல்
   எங்கும் காதல்
   எதிலும் காதல்
   "கற்புக்கும் " காதல்
   களவுக்கும் காதல்
   அன்புக்கும் காதல்
   ஆசைக்கும் காதல்
     மௌனம் காதல்
   மோகம் காதல்
   ஜனனம் காதல்
  மரணம் காதல்
  மறுஜென்மம் காதல்
  புனர் ஜென்மம் காதல்
  புது வாழ்வும்  காதல்
  புது யுகம் காதல்
 புது படைப்பும் காதல்
 புகழ் காதல்
 பூமிக்கு உயிர் காதல்
  காதல் க்கும் உயிர் காதல்
   புல்வெளி பனி காதல்
   புயல் மழையும் காதல்
   வெயில் பனியும் காதல்
   பாலை மணல் காதல்
   சாலை மரமும் காதல்
   ஆழ கடலும் காதல்
   பளிங்கு நதியும் காதல்
   சூர்யன் நீர் காதல்
   மேக கூட்டமும் காதல்
    அகிலம் காதல்
    அளவு இல்லா காதல் !
   நட்பும் காதல்
   காதலான நட்பும் காதல்
   எல்லா உயிரும் காதல்!
   உயிர் இல்லா ஜடமும் காதல்.

   அனைத்தும் காதல் ! ஆதலால் நாம் உயிர் வாழ காதலை அனைத்திலும் உயிர்ப்பிபோம்

 வானமும் வசப்படும் காதலால்!

காதலோடு வாழும் நட்புடன் ,
 குயில்....