பாவி நானும் தேடிட்டேன்
இங்கே பழைய சோற்றை
காணலையே !
பச்சைமிளகாய் , வெங்காயம்,
ஊறி புளிச்ச மாங்காயும் ,
அறைச்சு எடுத்தாலும், அம்மி
மணக்கும் துவயளையும்
ஐயோ இங்க காணலையே !
வித விதமா செஞ்ச புள்ள
பக்குவமாய் எடுத்தும் வச்ச புள்ள
கையையும் கழுவி வந்து
காத்திருக்கேன்... பரிமாற
நீயும் இங்கே காணலையே!
இறால், நண்டு , வறுவல்
எல்லாத்தையும் பார்த்து
டாஸ்மார்க் கடைக்கு போன
என் இனிய நண்பர்கள்
வைப்பரையும் , டாங் லீ
பேட்மேன் ,ஜோக் யாரையும்
இன்னும் இங்கே காணலையே !
பசி வந்தால் பத்தும் பறந்து
போகும்.. என்று சொன்ன சொல்லு
என் காதில் இப்போ கேட்குதப்பா
வகை வகையா உணவிருக்கு
உழைக்காத என் உடம்பில்
பசியை இப்போ காணலையே !