என்
விழிக்குள்
உலகமானவனே,
உயிர் தொட்டு
செல்பவனே.,
நம் கண்கள்
குளமாக
தேசம் கடந்து
என் நேசம் கொண்டு
நீ போகிறாய்
எனக்காக
உன் இதயத்தை விட்டு...
உன்
எண்ணம் தாங்கிய
உன் இதயத்தோடு
காத்திருப்பேன்.,
உன் கைகளில்
நான் தந்த
வாடாத
மலர்க்கொத்தாய்., மீண்டும்
நீ வரும்
பாதை நோக்கி...
தேசம் பல கடந்து
சென்றாலும்
என் சுவாசம்
அங்கு
உனக்காக வாசம் செய்யுமடா...