இப்புவியில் சிலபலவிஷயங்களில்
பணம் நிர்ணயிக்கப்படுகிறது
ஏழை - பணக்காரன்
ஏற்றம் - தாழ்வு
வறுமை -செழுமை
ஏன் இந்த நியதி ?
கஷ்ட படுகிறது ஏழ்மை …அவர்களின்
ரத்தத்தை உறிகிறது பணக்கார வர்க்கம்
ஏன்? இந்த கொடுமை இப்புவியில்...
இதயமே..
இல்லாமல் எடுக்கிறான் அவர்களின்
உழைப்பை...வியர்வையை
அவர்களுக்கே தெரியாமல் திருடுகிறான் …
ஒரு கொடூர மிருகம் …
வெட்க படவேண்டும் இந்த சமுதாயம் ..
பார்த்தும் பார்க்காமலும் போகிறது ..
அவர்களும் ஒரு ஜீவன் தான்
அவர்களுக்கும் மனம் உண்டு ,
குடும்பம் உண்டு, குழந்தை உண்டு
இதை அவர்கள் உணர்ந்தால்
திருட மனம் வராது …
பணம் உள்ளவர்களுக்கு
பணத்தை இழக்க மனம் வராது
ஆனால் பிடிங்கி தின்ன ஆசை வரும்
ஏதும் சுலபமா கிடைக்குதுனா
ஒண்ணுமே இல்லதாது போல் பாவனை
ஏழையின் வயிற்றில் அடிக்க மட்டும் ஆசை ..
உதவிஎன்று கேட்டால் உடன் பதிலோ
இல்லை என்பது .. ஓடி ஒழிவர் சிலர்
உதவி கேட்டால் முன் வந்து நிற்பர் ஏழை,
ஏதும் தோன்றாது அவர்கள் எண்ணத்தில்...
உதவி செய்யணும் மட்டும் தோன்றும்
அவர்களும் என்னை போல்..
அவர்களின் வலி எனக்கும் அப்படியே ..
எங்களையும் வாழ விடுங்கள் ,
எங்களுக்கும் மனம் உண்டு ,
எங்கள் சுமையை சுமக்க வழி விடுங்கள் ..
எங்கள் வயிற்றில் அடிக்காதீர்கள் பணக்கார வர்க்கமே ...
என்றும் பொறுமலுடன்,
பிளேஸ்