சிறுவர்கள் பள்ளிப் பாடங்கள் கனத்திட ...
தந்தை வேலை சுமைகள் ஏந்திட ..
தாய் இல்லத்தில் கடமைகளை நிறைவேற்றிட..
நொந்து நூலாய் போனார்
3 தலை முறை மூதாட்டியார்..
இன்னல்களை தொல்லைகளை மறந்திட...
சுமைகளை மறந்து ..
மனம் போனது இன்பத்தை தேடி ...
வந்தது கேளிக்கை கூத்து ..
சிறு வயது முதல் வயதானவர்கள் வரை
ஈர்த்தது காந்தமாய்..
அங்கும் இங்கும் வண்ணக் கோலங்கள்..
அங்கங்கே அங்காடிகள் ...
அழகு ராட்டினங்கள் சில ..
அலை மோதியது கண்கள்..
அப்பா பணப்பையில் இருந்து
பணம் இறைத்திட ..
அம்மா பிள்ளைகளுடன் இணைத்திட..
மூதாட்டியார் அவர்களை பார்த்து இன்பத்தில் திளைத்திட..
கொண்டதே கோலா கோலம்..
அங்கங்கே விளையாட்டுகள்..
பரிசிகளை பார்த்து திளைத்தார் சந்தோஷத்தில்..
அழகு ராட்டினங்கள் பல விதம்..
அதில் ஏறி செல்கையில் ...
சந்தோசம் ஒரு புறம்..
பயம் ஒரு புறம்...
மறந்ததே இன்னல்கள் துன்பங்கள்..
அங்கிருந்து வீடு சேர்கையில்..
இன்பம் போனது அதனுடன்..
பழைய வாழ்கை நிலைக்கு தள்ளிற்று ..
கணம்,சுமை, கடமை..கவலை..
மனம் எதிர் பார்க்கிறது ..
இன்னும் ஒரு வருடத்திற்கு..
விரைவில் வருவாய் எங்களுக்காக..
காத்திருக்கிறோம் உனக்காக...