காலமே உன்னில் ஒருபோதும்
இல்லை மாற்றம்
ஆனால் உன்னால் மட்டுமே
உலகில்
உள்ளங்களில்
உண்டாகும் மாற்றம்,
நீ மட்டுமே மாறாதவள் !
உன்னை நிலையானவள்
என சொல்லேன்.
கடவுள் சொல்லும் வரை
நீயும் இருப்பாய்.!
என்வீட்டு கடிகாரத்தில் - நீ அசையும் அழகு
என்ன அழகு அப்பப்பா...
நொடியாய் 31 557 600
நிமிடமாய் 525 960
மணியாய் 8766
நாளாய் 365 1/4
வாரமாய் 52
பன்னிரு மாதமாகி வருடமாகிறாய்.!
வருடமே!
உனக்கு இத்தனை பருவமா.?
எத்தனை அழகாய்.....
முடிவின்றி தொடர்கிறாய்
கடவுள் அனுமதிக்கும்வரை இருப்பாய் !
201ஆறே நீ இதமாய் வந்தாய்
மென்மையான பெண்ணாய்
நின்றாய். உலகில்.!
மனிதன் உன்னை குழந்தையாய்
பிள்ளையாய் குமரியாய்
தாயாய் பாட்டியாய் பூட்டியாய்
முன்னவளாய் மூத்தவளாய்
கடவுள் முதல் படைத்தவளாய்
காணமறுத்து!
உண்னை கொடுமை செய்து
பலவந்தமாய் சீரழித்து
சிதைத்தான். மனிதன்!
நாதியற்று நின்றாய்.!
நீ கோவம் கொண்டாய்
அரக்கியானாய்.!
வெள்ளப் பெருக்குகளாய் மழையாய்
புயலாய்
பூவி நடுக்கமாய்
தீயாய்
இடிமின்னலாய்
தேவைக்கு மீதமாய்
ஏராளம் தாரளமாய்,,,,,
கிழர்ந்தெழுந்தாய் கொன்று குவித்தாய்.!
ஆனாலும் நீ 201ஆறே.....
அழகு மென்மை
நீதி உண்மை கொண்டவள்.....
கடவுள்
உலகில் உள்ளவர் மேலும்
உள்ளவை மேலும் இரங்க.
மீதம் வைத்தாய்
201ஏழாய் தொடர்வாய்
201ஏழே வழக்கம் போல் அழகாய்
அன்பாய் உண்மையாய் நன்மையாய்
வருவாய்.....
மனிதன் தன் பாவத்தை கொடுமையை
அநீதியை நிறுத்தபோவதும் இல்லை!
புண்ணியனாய் மாறப்போவதும் இல்லை!
கட்டளையும் தொடர ஊழியும் இறங்கும்,
கொண்ட அன்பால் கலங்குவார் கடவுளும்.
உலகில் கொடியவன் மனிதன்!
பாவமாய் பாவத்தின் உருவமாய் - நிற்பான்
உன்னை சீர்கெடுப்பான்.!
நன்மைகளை பலர் சொல்வார்
அனுபவித்து - ஆனால்!
தீமைகளும் கொடுமைகளும் நீ செய்வது
உன்னை காயம் செய்வதாலே, - எனும்
உண்மையும் நான் சொல்ல வேண்டுமே!
இயற்கை தானே இயங்குவதில்லை
இயக்கப் படுவதனாலே இயங்கும் சக்தி.!
முதலும் முடிவுமில்லாது.....
இருப்பவராய் இருப்பவரால் .....
இயக்கப்படு சக்தியே இயற்கை.!
உண்டானவை எவையும்
தானாய் உண்டானவை அல்ல
உண்டாக்க ஒருவர் இருந்து
மனிதனுக்காகவே உண்டாக்கப்பட்டவை
உண்டாக்கியவரே கடவுள் - முதலும் முடிவுமில்லாதவர்.
உலகில் பெருகிய பாவம்
முடிவின்றி தொடர்ந்து பெருக
கடவுள் சினம் கொள்ளவார் - கவலையோடு கட்டளையிடுவார் !
இயற்கை நிறைவேற்றும் கண்ணீரோடு !
நீயும் பொறுமை இழப்பாய்
பொங்கி எழுவாய் 2016 அழித்ததிலும்
அதிகமாய் அழித்து போவாய்!.
குறைகள் என்னுடையவை நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே