Author Topic: ஓவியம் உயிராகிறது -நிழல் படம் எண் - 132  (Read 2636 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • *
  • Posts: 218308
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 132
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக     வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 12, 2018, 10:49:22 AM by MysteRy »

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
பதில் கண்டபின் காதல் காத்திருக்கும்

அள்ளிவரும் வெள்ளம் போல
தூதில் வந்த காதல் தூரிகைகள்
எண்ணிவிட கூடியவை ஆனால்
இதயத்தில் எண்ணிடா தூதுகள்

காகிதத்தில் பலர் காதலை சொல்லினும்
உள்ளம் என்ணுவது உனைமட்டுமே
ஆதலால் என் கையேறிய எவரது காகித காதலும்
உள்ளத்தில் நுழையவில்லை 

எனை பலர் காதல் கொள்ளினும்
என் உள்ளம் காதலியாய் கொள்வது உனையே
உணர்வாயா என் அன்பை


உன்னிடம் நான் காதல் அன்புக்காய்
ஏங்குவது போலவே என்னிடமும் காதலை
எதிர்பார்த்து ஏங்குவோருக்கு வலிக்கும்தானே

எனது காதல் உன் உள்ளத்தில் இருக்கவே ஏக்கம்
என்னை தமது உள்ளத்தில் ஏந்தியோர் உள்ளம்
வலிக்காது வாழவே விருப்பம்

அதிகம்பேர் எனை காதலித்தார்கள் எனும்
மமதையைவிட என்னை அன்பு செய்தோர்
உள்ளம் கலங்கி நொந்திடல் கண்டு நோகின்றேன் இதயம்


காதல் அன்பு பரிதாபமானது
காதலை பலரும் உணர்வதில்லை
உணர்ந்த காதலையாரும் வாழ-விடுவதுமில்லை

நாம் விரும்பாத நபர் காதல் கடிதம் வெறுப்பு
நாம் விரும்பும் நபர் காதல்கடிதம் மறுக்கையில் வலிப்பு
வலிக்கையிலாவது வலித்தவர் அன்பும் அன்பென உணருமா?

காதல் அன்பு உண்மை என்றால் ஒரே இனம்தான்
விரும்பாதவர் உள்ளம் விரும்பினும் காதலே
பிடிக்கவில்லை என்பதை வலிக்காமல் சொல்வோம்


பிடித்திருக்கு பிடிக்கவில்லை
காத்திரு இல்லை நம்பி இருக்காதே
குறுகிய அவகாசத்தில் சொல்லி விடுங்கள்

வாழ்வை அழிக்கும்வரை காத்திருத்தல்
கல்வி வேலை முன்னேற்ரம் குடும்ப பொறுப்பு
அனைத்தும் சீர்கொடும்வரை பதிலில் சூட்சுமமாதல் விபரீதம்

பதிலை சீக்கிரம் சொல்லுங்கள்! பதில் கண்டபின்
காதல் காத்திருக்கும்
காதல் முன்னேற்றும்
காதல் தவமிருக்கும்
காதல் நிலைத்திருக்கும்



குறைகள் என்னுடையவை  நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline RyaN

உன் கடிதம் பார்த்த நாளன்று
சொக்கி நின்றேன்
உன் விழியில் நானும் விழ கன்டேன்
கடிதமெனும் எட்டு திசையும் உன் முகம்

தேவியுனை தேடிப் போகுதே சிந்தை
பாத சுவடுகள் தேடி அலையுதே மனம்
அனுப்பிய கடிதத்தில் கண்ட அன்பை
வரமென நாடி ஓடிவந்தேன் ஏன் மறைந்தாய்

இரவை நான் வெறுக்கிறேன்
பகலிலும் உன் கனவே
என் உடலிலும் நீ பாதி என்று
உணர்ந்தேன் உன்னை கண்டு

கனவில் நீ தினமும் ஜனனம்
கண் விழிப்பதற்கு மறுக்கிறேன்
நீ கலைந்துவிடுவாய என்று
உன்னை நேசிக்க தெரிந்த இதயத்திற்கு
மறக்க தெரியவில்லையே

என்றோ ஒரு நாள் என்காதலை உணர்வாயென்று
காத்திருப்பேன்  சுவாசித்து கொண்டு - அல்ல
உன்னை நேசித்துகொண்டு

கொடுத்த கடிதங்கள் எதர்க்கும் பதில் இல்லை
தரப்பட்ட கடிதங்களுக்கு பதிலும் நான் கொடுக்கவில்லை
« Last Edit: January 19, 2017, 03:33:14 AM by RyaN »

Offline thamilan

இது எனது கடைசி காதல் கடிதம்
இரவு பகல் என்று பாராமல்
உணவு குடிநீர் ஏதும் இல்லாமல்
எத்தனையோ நாட்கள் நான் உனக்கு எழுதிய கடிதங்கள்

எனது கண்ணீரை கொட்டி
எனது அன்பை குழைத்து
எனது எண்ணங்களை கோர்வையாக்கி
வார்த்தைகளுக்கு வர்ணஜாலமிட்டு
நான் எழுதிய கடிதங்கள் பலப்பல

உனது நடையுடை பாவனைகளை
வர்ணித்து
உனது ஒவ்வொரு செயலையும்
ஒற்றுமைப்படுத்தி
உன்னை அம்பிகாவதியாக்கி
என்னை அமராவதியாக்கி
நான் எழுதிய காதல் கடிதங்கள்
இன்னும் பற்பல

எழுதிய கடிதங்களால் அனைத்தையும்
அன்பெனும் பசை கொண்டு ஒட்டி 
இரத்தத்தால் விலாசமெழுதி
முத்தத்தால் முத்திரை ஒட்டி
இன்று வரை
பாதுகாத்து வைத்திருக்கிறேன்
தபால் செய்யாமலேயே ........

நீ மறுத்து விடுவாயோ
என்று ஒருபுறம் பயம் 
உனது தடிமாட்டு அண்ணன்
படித்துவிடுவானோ என்று மறுபுறம் பயம்

என்றாலும் கடைசியாக ஒரு
காதல் கடிதம்
எழுதும் தைரியம்
அனுப்பமட்டும் ஏனோ வருவதில்லை
எத்தனை வீரனானாலும்
காதலின் முன்னே கோழையாவது சகஜம் தானே !!!!!!   

« Last Edit: January 18, 2017, 11:34:28 AM by thamilan »

Offline SweeTie

சிலிகன் சிலையே!
மென்துகிலாம் வெண்முகிலால்   திரைபோட்ட
விண்ணகத்து வெண்ணிலவே 
சொக்கித்தான் போனேன்
உன் சுந்தரம் கண்டவேளை 
வேண்டியே உன் தரிசனம்
தினமும் கால்கடுக்க காத்திருந்தேன்

சிந்தும் உன் சிரிப்புகளை
சிதறாமல் அள்ளி   என்
இதயத்தில் பதுக்கிவைத்து
முப்பொழுதும்  ரசிக்கவேண்டும்
கெண்டையும் கெளுத்தியும்  துள்ளும்
உன் விழிகளை  உள்வாங்கி அணைக்கவேண்டும் 
நம் காதலுக்கு  பச்சைக்கொடி காட்டிவிடு
நானும் பரவசமாய்  நின்றிடுவேன் .

....................

கார்மேக  இளவரசே ! 
ரகசியமாய்க்  கண்ணால்  என்னை அளந்தவனே 
 ஓங்கி வளர்ந்த  உத்தமனே
மிடுக்காய்  துடுக்காய் செருக்காய்  தெரிந்தாய்
கோபியரை  மயங்கவைத்த
மாயவனோ  மன்மதனோ 
ஸ்தம்பித்தேன்  ஒரு கணமே
என் கடைவிழியில்  நீ  விழுந்த மறுகணமே

ஆணை  விடுபட  ஆசை நிறைவேற
கேக்காமல் உன்னை சிறைபிடித்து 
என் கண்மடலில் ஒளித்துவைத்தேன்   …நீயோ
பாய் விரித்து படுத்தே உறங்கிட்டாய்
இங்கேயே இருந்துவிடு என்கிறது உள்ளம்
இருப்பாயா  என்னவனே? 

...................

காதலியே கண்மணியே
கூவும் குயிலை குரலில் அடைத்தவளே
காதல் மழையில் கசிந்தொழுக 
காலமெல்லாம் காத்திருக்கும் கிறுக்கனடி 
உன் இதழ்கள் உதிரும் முத்தங்களை சேர்க்க வேண்டி
சொர்க்கத்தின் வாசலில் காத்திருக்கும் பித்தனடி
உன்னையும் நம்காதலையும் சுமக்கவே
உலகில் பிறந்த உன் பக்தனடி
தாமதம் வேண்டாம் வந்துவிடு

...............

காதலனே கண்ணாளனே
உன் பார்வை என்மேல் படர்ந்த நாள் முதல்
என் இதயத்தில்  ஆயிரம் மின்குமிழ்  எரிகிறதே
குதிரைகளின் லாடம் ஒலி காதைக் கிளிக்கிறதே
ஓ வென்ற  இரைச்சலுடன் கொட்டும் அருவியில்
நாமிருவர்  ஓருடலாய்  நனைவதுபோல்  தெரிகிறதே
தாமதிக்கும் வினாடிகள் யுகமாக தெரிகிறதே
சீக்கிரமே என்னை ஏற்றுக்கொள்ளடா
காத்திருக்கிறேன் உனக்காக


............
« Last Edit: January 19, 2017, 02:01:34 AM by SweeTie »

Offline BreeZe

  • Hero Member
  • *
  • Posts: 703
  • Total likes: 2381
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Smiling is the prettiest thing you can wear


இனியவனே
என் இதய ரோஜாவில்
எண்ணற்ற ரணங்கள்
இருந்தபோதும் கூட
இதழ் பதித்து அனுப்பிய - உன்
இனிய காதல் மடல்களால்
என் இதயம் இதமானது

பொன்வானில்
அழகுநிலா தேரோட்டம்
நீரோட்டம் முடியுமுன்னே
மேகத்தின் நீரோட்டம் அது
காலத்தின் அரங்கேற்றம்

வெண்மேகம் நிலவை
கண்மூடி  மறைத்ததால்
நிலவை குற்றம் சொல்வதா
நிலவை புரிந்துகொள்ள
வானுக்கு நேரமில்லையா

மேகமேடையில்
நட்சத்திர மின்மினிப் பூச்சிகளின்
நடனத்தை வானம் புறக்கணிக்கும்
நிலவு ஒன்றே
நினைவினில் நிலைத்திருக்கும்
உன் வானில் நான் நிலவு என்று
நிருபித்திருக்கும் உனது மடலுக்கு
எனது கண்ணீர் துளிகள் காணிக்கை

அன்புக்கு தடை சொல்ல
ஆண்டவனுக்கும்  உரிமையில்லை

இது பூக்களின் புனிதப் பயணம்
இதயங்களின் இனியசங்கமம்
நம் அன்புக்கு ஏற்றப்படும்
அணையா தீபம் உனது அன்பு மடல்கள் 




Copyright by
BreeZe



« Last Edit: January 18, 2017, 10:05:11 PM by BreeZe »
Palm Springs commercial photography

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
பௌர்ணமி நிலவு பளிச்சிட ...
நட்சத்திரங்கள் மின்னிட ....
தனிமையில் அமர்ந்து
நான் ரசித்திட ...

இரு விழிகள் அதன்
அழகில் மயங்க ...
எண்ணங்கள்  முழுவதும்
நீயே நின்றாய் ...
என் மாமனே ..!!!

ஏனோ நெஞ்சில்
உந்தன்  நினைவுகள்
மட்டும்  பட்டம்பூசியாய் 
சிறகு  முளைத்துப்
பறந்திட ....

கரங்கள் காதல் கடிதம்
தீட்ட எண்ணிட  ...
இருள் சூழ்ந்த
வானில் தீட்டுகிறேன்
என் காதல் கடிதம் ..... !!!

வண்ணமில்லா எழுத்துக்களில் ...
வரைந்தேன்
வண்ணம் நிறைந்த
என் ஆசைகள்  ....!!!

வரைந்த எழுத்துக்கள் ...
உந்தன் கண்களுக்கு தெரியாது ...
அதை உந்தன் மனது
அறிய மறுக்காது ....

கடல் கடந்து நீ
இருப்பினும் ...
உந்தன் நினைவுகளை மட்டும்
சுமந்து நான் நிற்க ....
உந்தன் பிரிவும் சுகமானதே ...

உன்னை நினைத்து
கிறுக்கிய கிறுக்கல் ஆயிரம் ...
அவையோவொன்றும்
யாம் வரைந்த காவியம் ...

எந்தன் காதலை விளக்கிட
என்னிடம்
வார்த்தைகள் இல்லை ...
வார்த்தைகள் கொண்டு விளக்குவது
காதலுமில்லை ....

என்னுள்ளம் நீ அறிவாய் ...
உன்னுள்ளம் நான் அறிவேன் ...
இன்னும் விளக்கங்கள்
ஏதற்கு ....?

ஜெய் ....
என்னையும் எந்தன் காதலையும்
ஜெயித்திட விரைந்து வந்திடு ....
உந்தன் இரும்பு கரத்தில் சிறைப்பட்டிட
ஏங்கிடும் என் நெஞ்சம் ...
உந்தன் வருகை ஒன்றையே
எதிர்பார்த்துக்  காத்திருக்கிறது ...

இவ்வாறு தேய்ப்பிறை...
வளர்ப்பிறையென...
தனக்கேன எழுதினேன் மடல்கள் பல...
அதை சொல்ல முடியாமல்
என் மனம் அழ ....
தவிப்பதுதான் காதலோ...

கிறுக்கிய கிறுக்கள்கலும்
அலைந்தது காற்றில் ....
மை இல்லாமல் நான் எழுதிய மடல்கள் மட்டும்.....
நிழல் ஆடுகின்றது என் கண்  முன்னில்...

ரித்திகா
« Last Edit: January 17, 2017, 06:25:03 PM by ரித்திகா »


Offline ChuMMa

என் இதயத்தில் ஓராயிரம் ஆசைகள்
ஓராயிரம் ஆசைகளும் ஒன்றாய்
உன்னை சுற்றியே இருந்தன...

உன்னை நான் பார்க்கும் போதெல்லாம்
என் மனம் கவிஞனாய் மாறும்

எழுத்தாணி பிடிக்கும்போது ஏனோ
ஊமையாகி போகும்

நான் உன் அருகில் வரும்போதெல்லாம் ஏனோ
நீ விலகி செல்கிறாய்

ஆனால் என் உள்ளத்தில் உன்
நினைவுகளோ நெருங்கி நிற்கிறது

என் கண் எட்டும்  தூரத்தில் நீயில்லை -இருந்தும்
என் கண்கள் உன்னை தேடுகிறது

பாவம் அதற்கு தெரியவில்லை  நீ இருப்பது
என் இதயத்திலென்று ..

உன்னிடம் பேசாமல் இருக்கும் ஒவ்வொரு நொடியும்
வாழ்க்கை கழிகிறது மௌனமாய்

கொட்டி தீர்த்திருக்கிறேன் என் எண்ணத்தை
இதோ என் காதல் கடிதங்களாய்..

என் காதலை உன் நினைவுகளாக்க போகிறாயா ?
இல்லை
வாழ்க்கையாய் மாற்ற போகிறாயா ?

காத்திருக்கிறேன் பதிலுக்காக அன்பே ..
சொல்லிவிடு ...



« Last Edit: January 18, 2017, 08:16:32 PM by MysteRy »
En meethaana ungal thedal naan yaar endru ariyum varai mattume..


"Ideas are funny little things
They won't work unless we do".

Offline BlazinG BeautY

  • Full Member
  • *
  • Posts: 182
  • Total likes: 800
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு!
என் அன்புக் காதலியே!
எனது நூறாவது தூது..
உனை வந்து சேராத - இன்று 
புறாவை தூது விட்டேன் ..

அந்தி மாலை வேளையில்
மழை கொட்டும் நேரத்தில் 
உன் பதம் நனைய கண்டேன்..
அழகிய முகத்தை கூந்தல் மறைக்க 

மின்னல் வெளிச்சத்தில் , தேடியது
என் விழிகள் உன் விழிகளை ,
மில்லிய சிரிப்பில் காணாமல் போனேன்
கொள்ளை அடித்தாள் என்னை அங்கே

மழை நின்றதும் போனாள் 
என்னையே அறியாமல் பாதங்கள்
தொடர்ந்தது  அவள் பின்னே ..
மறைந்தாள் என்னை விட்டு..

கொள்ளை அடித்து போனவள்..
வந்தாள்.. திரும்பி வந்தாள்
மழையின் தாரகையாய்  என் முன்னே
சாலையின் முகவரியை கேட்க..

புன்னைகைத்தேன் அவளை பார்த்து
என் சுவாசம் உயிர் பெற்றது அவளால்
இப்போது அவள் முகவரியை தேடி
ஒவ்வோர் நாளும் என் கடிதங்கள் ..
   
என் இதயத்தை சூறையாடி சென்றவளே
கறையாதா  உன் அழகிய இதயம்
ஆயிரம் கடிதங்களை கொடுக்காமலே
தங்கி போனது என் அறையில்..

காத்திருக்கிறேன் உன் பதிலுக்காக.. 



« Last Edit: January 19, 2017, 05:19:08 PM by BlazinG BeautY »