நீலம் தீட்டிய விரிந்த உலக வானம் ..
மனித மூளையாய் குட்டி குட்டி நூலகங்கள் ..
காதின் வழிய பல புத்தகம் நுழைய ..
யார் யாரே அதை ஓதித்திரிய ..
கண்கள் பேசும் சில புத்தகம் ..
மெளனம் என்னும் மொழி எடுத்து ..
விரல்கள் வருட உணர்ச்சி எனும் சில புத்தகம் ..
கண்ணீரை இழுத்து பேனாவில் மையிட்டு ..
பலநூறு மொழிகள் இங்கு
பேச ஒரு மனித இனம் தான் உண்டு ..
உலகின் உணர்வு , அனுபவ பகிர்வு , வரலாற்றுக்குறிப்பு என ..
மனித இனத்தின் மூளைநூலகத்தை ..
சேகரிக்கும் அலமாரிதான் நூலகங்கள் ..
உலகம் என்னும் பரந்த நூலகத்தில் ..
மனிதன் என்னும் எத்துனை புத்தகங்கள் ..
ஆச்சரியம் தான் ஒவ்வொரு பக்கங்களும் ..
ரித்திகா ..