தீர்ப்பு நீடிக்கிறது ......................
அனைத்து மக்களும் ஒரு திரண்டு
இந்தியர் எனும் நாமம் கொண்டு
அண்ணார்ந்து கைகூப்பி தலைவர் என்றோம்.
திராவிட வழி, நமது மொழி, அது இனி
முன்னேற்றப் பாதை என்றெண்ணி,
கழகம் அமைத்தோர் கரங்களைப் பிடித்தோம்.
திராவிடம் திருடரிடம் என்பதனையறியாது
முன்னேற்ற ஆட்சி புரிவர் என சாட்சி செய்த சூழ்சியால்
கழகமாயினும் அதற்கு கலங்கமாகயில் கடந்து போகிறோம்.............
மறுமலர்ச்சி பிறக்காதாயென என் மக்கள்
திராவிட வம்சமத்தில் பல அம்சங்களை மாற்ற எண்ணி
முன்னேற்றம் ஒன்றே இதற்கு வழி எனும் குறிக்கோள் கொண்டு
கழகம் தவிர்த்து களம் ஒன்றை அமைத்து கலந்து நின்றால்............
கருத்தரங்கு நடாத்தி கரங்கோற்றோர் அவர்,
மக்கள் கதை கேட்டார் எவர்?
துடுப்பெடுத்தாடும் வீரர் அவர் வியாபாரிகளால் பந்தாடும்
- அரசியல்
வியாபார தந்திரத்தால் விலைபோகும் நிலை அறிந்திடா சமூகமாய்
- ஓர் அரசியல்
தேர்வு செய்தனுப்பும் மக்கள் பிரதிநிதி நீதியின்றி மாறும் சதி
- அது தானா இன்றைய அரசியல்?
மக்களைப் பந்தென எண்ணும் ஓர் கட்சி.
அப்பந்தை எதிர்கொண்டு தாக்கும் எதிர் கட்சி.
வலியினை ஒரு புறம் தாங்கும் மக்கள் ஆட்சி.
களத்தில் இருக்கவேண்டியது யாரென்பதை நீ யோசி.
தீர்ப்பு நீடிக்குறது........................