நான் சுவர்ணா
இசைத்தென்றலில் இடம் பிடிக்க மட்டும் அவ்வப்போது இங்கு வருவேன்.அறிமுக பகுதியின் அறிமுகமோ இப்பொழுதுதான்.
கல்லூரியில் சிறைவாசம்
சிறகிழந்த பட்டாம்பூச்சி
வண்ணங்கள் எண்ணங்களில்
தந்தையின் தமிழ்ப்பற்றும்
தாயின் இசைப்பற்றுமே
எனைப் பற்றிய
எனதடையாளங்கள்
பழகத் தயங்கும் நான்
வெகுளியல்ல
வெருண்டோடிட விரும்பும் பேதையே
இது போதும் எனை அறிய
என்றும் அன்புடன்
சுவர்ணா