2
கம்போடிய அல்லது க்மெர் மொழிக்கு எந்த இலக்கியப் பாரம்பரியமும் தத்துவ மரபும் கிடையாது. அம்மொழியில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க புத்தகம் ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால், சுமார் 1200 வருடங்களுக்கு முன்னால் அவர்கள் கோவில்களைக் கட்டத் தொடங்கினார்கள். மகா விஷ்ணுவிற்கும் மகேசுவரருக்கும் புத்தபிரானுக்கும் சுமார் 500 வருடங்கள் செலவிட்டுக் கட்டிய பிரமாண்டமான கோவில்கள் பிற்காலத்தில் கலைச்சுவடு தெரியாமல் மறைந்துவிட்டன. குறிப்பாகத் தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக இருந்துவரும் ஸ்தபதிகள் மரபைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு இன்று கம்போடியாவில் அந்தக் கலைப் பாரம்பரியத்திலிருந்து வந்தவர் யாரும் இல்லை என்பது ஆச்சரியமளிக்கிறது.
19ஆம் நூற்றாண்டில் இந்தக் கோவில்கள் மூன்றும் கண்டுபிடிக்கப்பட்டன. கம்போடிய மக்கள் தங்கள் கலைச் சொத்துகளை மறக்கவேயில்லை. அவர்களைக் கேட்டால் தாய்லாந்து, வியட்நாம், லாவோஸ் போன்ற நாடுகளின் ஊற்றுக்கண் தங்கள் நாட்டில்தான் இருக்கிறது என்கிறார்கள். அதற்கான ஆதாரங்களாகத் தங்கள் நாட்டில் இருக்கும் நூற்றுக்கணக்கான கோவில்களைக் காட்டுகிறார்கள். தொள்ளாயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் இந்தப் பிராந்தியத்தில் இருக்கின்றன. காரில் சென்றால் இரண்டு மணி நேரத்தில் கடந்துவிடலாம்.
இந்தக் கோவில்களுக்கு ஊற்றுக்கண் இந்தியக் கலாச்சாரம் என்பதில் ஐயமுமில்லை. பல்லவர்கள் சாயல் இந்தக் கட்டடங்களுக்கு இருப்பதாக வல்லுநர்கள் சிலர் கருதுகிறார்கள். ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் பிரம்ம வர்மனில் தொடங்கிப் பதினான்காம் நூற்றாண்டில் ஜயவர்மன் பரமேஸ்வரன்வரை எல்லா அரசர்களின் பெயர்களும் வர்மன் என்றுதான் முடிகின்றன. கோவில் கல்வெட்டுகள் சமஸ்கிருதத்திலும் க்மெர் மொழியிலும் இருக்கின்றன. ஆனால், கோவில்களைக் கட்டியவர்களோ சிற்பக் கலைஞர்களோ நமது நாட்டிலிருந்து சென்றவர்கள் அல்ல. அவர்கள் கம்போடியர்களாகத்தான் இருப்பர் என்பது சிற்பங்களைப் பார்த்தாலே தெரிந்துவிடும்.
இந்தக் கோவில்களில் செங்கல், மணற்கல் (sணீஸீபீ stஷீஸீமீ), செம்புரைக்கல் (றீணீtமீக்ஷீவீtமீ) போன்றவற்றோடு மரமும் பயன்படுத்தப்பட்டது. தீட்டப்பட்டிருந்த வண்ணங்களும் மரச் சுவடுகளும் பல ஆண்டுகளுக்கு முன்னாலேயே அழிந்துபோயின.
இந்தக் கோவில்களில் முக்கியமானவை பல என்றாலும் நான்கு கோவில்களைப் பற்றி நான் இந்தப் பத்தியில் பேச இருக்கிறேன். அவை:
1. அங்கோர் வாட் (கிஸீரீளீஷீக்ஷீ கீணீt ) - கோவில் நகரம் (வாட் என்றால் கோவில் என்று பொருள். இந்தப் பெயரைத் தென்கிழக்கு ஆசிய நகரங்கள் எல்லாவற்றிலும் கேட்கலாம்).
2. பேயான் (ஜிலீமீ ஙிணீஹ்ஷீஸீ) - பொருள் தெரியவில்லை (முகம்?)
3. தா ப்ரோம் (ஜிணீ றிக்ஷீஷீலீனீ) - மூதாதைப் பிரம்மன்.
4. பண்டே ஸ்ராய் (ஙிணீஸீtமீணீஹ் ஷிக்ஷீமீவீ) - பெண்களின் கோட்டை.