இதோ மருத்துவமனை முன்
சீனி தேடி அலையும் நேரத்தில்
வழிமறந்து திரியும் எறும்பை போல
தவித்து கொண்டிருக்கிறேன்
சிலவருடம் முன்
தூரத்து உறவு சொல்லி
உறவாக்கி கொள்ள
அவளை பார்க்க செல்கையில்
கதவின் இடுக்கில் இருந்து இருவிழியால்
என் இதயத்தில் அம்பெய்துகொண்டிருந்தாள்
அவள் கால்கள் ஏனோ கோலம் இட்டுக்கொண்டிருக்க
என் மனதோ அலைக்கழிந்து கொண்டிருந்தது
அவள் பின்னால் ...
இதுதானோ காதல் என உணருமுன்
முகூர்த்தநாள் குறித்து நல்ல நேரம் பார்த்து
கழுத்தில் மூணுமுடிச்சு ஏன் என தெரியாமல் இட்டு
எனக்கு சொந்தமாக்கினேன்
எங்கள் வாழ்க்கையில்
வருடங்கள், மாதங்களாய் உருண்டோட
விசாரிப்புகள் மெல்ல எட்டி பார்த்தன
அன்பு பகிர ஓர் உறவு வேண்டுமென
அக்கரையில் சிலர் , ஆர்வத்தில் சிலர்
அனாவசியமாய் சிலர் கேட்க
பரிச்சியமில்லா தெய்வங்களும் கண்டு
பரிகாரமாய் சொன்னதையும் செய்து
காத்திருக்கும் வேளையில் விஞ்ஞானத்தின்
துணையும் கொண்டு
என்னவள் அவள் வயிற்றில் கருவாய்
எங்கள் உயிர்
இதோ
கேட்கிறது எங்கள் குழந்தையின்
அழுகுரல் ஓடோடி செல்கிறேன்
அவள் இருந்த அறைக்குள்
அங்கு
குழந்தையின் கை பிடித்து
என்னவள் இருக்க
இருவர் கையும் சேர்த்து என் கை பிடிக்க
எங்கள் கண்களின் ஓரத்தில் பிறந்த
கண்ணீர் சொல்லியது
இது தான் காதல் என !!!
****ஜோக்கர் ****