நீந்திச் செல்லும்
காரிருள் மேகம் எல்லாம்
நிலம் நனைத்துச் செல்லாது...
அதுபோல்,
கடந்து வந்த
பாதைகள் எல்லாம்
மறவா நினைவுகள் ஏந்தாது...
நெடுந்தூர பயணத்தில்
இளைப்பாறும் ஓர் நொடி...
தாண்டி வந்த தடங்களை
சற்று திரும்பி நோக்கும் போது...
கல்லூரி நட்பின் கல்வெட்டு - சற்று
கனமான வலி கோர்த்து...
பாதச்சுவட்டின் இடுக்கினிலே
எம்மைப் பார்த்து ஏங்கிடுமே...
இன்னோர் முறை வருவீரோ என்று
நண்பர்கள் படைசூழ
துன்பங்கள் மறந்து நாம்
துள்ளித் திரிந்த காலமல்லோ...
நட்பும் கொண்டோம்
காதலும் கொண்டோம்- நடுவினிலே
சின்னச் சின்ன
பிணக்குகளும் கொண்டோம்...
நாளைய விடியலின்
எதிர்காலம் நமை நோக்க...
கல்லூரி அந்தம் தந்த
பிரியாவிடை கண்ணீர்த் துளிகள்
இன்றும் எமை பிரியாதல்லோ...
மின்னலாய் ஓடும்
வாழ்க்கை நதியினிலே...
கல்லூரி நட்பின் ஓடம்
மிண்டும் மெல்லத் தவழுமே...
ஆண்டுகள் கழிந்து - அந்த
உறவுகளை எதேச்சையாக கானும் நேரம்
எம் கனாக்களில்...
எங்கேயும் எப்போதும்.
பாரீர் என் நிலையை,
அன்று
ஆயிரம் பேர் அருகிலிருப்பினும்
தனிமையின் பிடிவிலங்கை
நான் ஆசையோடு ஏந்தியதால்...
இன்று,
திரும்பிக் கிடைக்கா
இப்பொக்கிஷத்தின் நிஜம் தொலைத்து
நிழலின் மொழிக்கு
வார்த்தைகள் கொடுக்கின்றேன்...
சாத்தியம் எனில்,
காலம் கடந்து பயணிப்பேன்
அந்த,
பசுமை வீசிய
கல்லூரி நட்பெனும் பூங்காவில்
புதிதாய் மலரும் பூவாக...
அன்புடன் HunteR🙂