இனம், மதம், மொழியை கடந்து இலங்கையர் நாம்
இந் நாட்டை மீட்டெடுக்க ஒன்று கூடிய
இத் தருணம் உங்கள் தோல்வியின் முதல் படி.
எந்த மதம், இனத்தை வைத்து
நீங்கள் ஆட்சிக்கு வந்தீர்களோ
அந்த மக்களாலே நீங்கள் பதவி விலக வேண்டும்
என எதிர்ப்பு வருவது உங்கள் அடுத்த தோல்வி.
எந்த இனத்திற்கு இந் நாட்டில்
இடம் இல்லை என்று அவர்களை
அகதிகளாய் அடுத்த நாட்டிற்கு விரட்டி அடித்தீரோ!
அவர்கள் காலில் dollarகாய் விழுந்த போது
இழந்த மண்ணையும் மானத்தையும்
பெற்ற பெருமித்தில் உங்கள் தோல்வி.
இவை அனைத்தையும் விட
இலங்கையராய் ஒன்றுபட்டு நிற்கும்
எம்மை கண்டு பயப்பட்டு நீங்கள்
கொண்டு வந்த அவசரகால சட்டமும்
ஊரடங்கு சட்டமும் உலகம் முழுதும்
உரக்க சொல்லும் நீங்கள் இலங்கையர்
எம்மை எம் பலத்தை கண்டு பயந்ததை…..
அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்றே கொல்லும்……