அன்பே,உன்னை பார்க்கும் நேரம் எல்லாம்,என் மனதுக்குள் ஒரு மழை, அந்த மழை துளிகளை சேகரித்து அன்பு என்ற ஒரு அணை கட்டினேன் உனக்காக, ஆனால் என்னவோ அந்த அணையின் ஆழம், கொள்ளளவு எனக்கு தெரியவில்லை, கடலின் ஆழத்தை அளவிட ஆழமானி பயன்படுத்தப்படுகிறது,அது போல மனதின் ஆழத்தை அளந்தவர் எவரேனும் உண்டோ?
என் மழையே,என் சூரியனே,என் கடலே
என் நதியே,என் விண்மீனே,என் பூமியே, என் கவிதையே,உன்னை கடந்து போனால், உடைந்து விழும் என்னை,சேகரிக்க வேறு யாராலும் முடியாததால்,உன்னிடமே தங்கிவிட்டேன் உயிரே...
உலக பூக்களின் வாசனைகளை
குத்தகைக்கு எடுத்த குமரி நீ,
கடலை உறிஞ்சு மழையாக பெய்யும் மேகங்கள் நீ, நந்தவனப் பூக்களை உறிஞ்சு
மழையாகப் பெய்த பூமாரி நீ..
இதுவரை பூமியில் பெய்த,பனித்துளிகளின் குளிர்ச்சி நீ,இதுவரை பூமியில் பெய்த
மழைத் துளிகளின் மகிழ்ச்சி நீ...
மழை பெய்யாத அரபு நாடாக இருந்த என்னை,உனது அன்பினால் நனைத்து சிரபுஞ்சி- ஆக மாற்றி விட்டாய்,அப்பொழுதுதான் உணர்ந்தேன் அரபு நாட்டிலும் மழை பெய்யும் என்று...😉
அன்பே,உனது அன்பு என்ற மழையில் நாளும் குளிக்க வேண்டும்,குளித்து பாசம் என்ற வளம் பெருக வேண்டும்.நமது அன்பு செழிக்க, செழிக்க நாளும் நமது காதல் என்னும் நாட்டில் மழை பொழிய வேண்டும்...