பள்ளி பருவ நினைவலைகள்
பால் குடி மறந்த அந்த
நான்கரை வயதில்
அழுது கொண்டே சென்று
எழுத்து பயிலும் அந்த வேளையில்
குச்சியை ,பென்சிலை கடித்து சாப்பிட்டு
எதுவும் தெரியாத பச்ச பிள்ளை போல
வீட்டுக்கு திரும்பிய அந்த நாட்கள்
இன்றும் நினைவில் வந்து செல்கிறது.
மறக்க முடியுமா அந்த இலட்சுமி மிஸ் பத்மா மிஸ் ரேவதி மிஸ,
எழுத கற்று கொடுத்த எனது தந்தை அரவணைப்பு, பாசம் காட்டிய அன்னையின் கொஞ்சுதல் ,
சாக்ஸ் டை என்று எதுவும் தெரியாத வயதில் அணிந்து சென்ற அந்த மழலை பருவம் !
ஒன்றாம் வகுப்பு
விக்டோரியா டீச்சர் முதல்
மான்டே குமார் தலைமை ஆசிரியர் வரை
என்னை உருவாக்கிய அந்த பள்ளிக் கூடம்
எனது கண்ணை திறந்த ஓரு கோயில்
ஆசிரியர்கள் இறைவனின் மரு உருவங்கள்.
பள்ளியில் வேற்றுமை இன்றி
ஒருவராய் துள்ளி திரிந்த அந்த காலம்,
நான்காம் வகுப்பு ஆசிரியரிடம் கடலை மிட்டாய் அன்பளிப்பாக தினமும் வாங்கி
சாப்பிட்டு மகிழ்ந்த அந்த காலம்,
பிறந்த நாள் அன்று அனைவருக்கும் இனிப்பு வழங்கி, கன்னத்தில் கிள்ளல்கள் வாங்கி
பெருமிதம் கொண்ட காலங்கள்.
இடை வேளை வந்து விட்டால் வேகமாக சென்று மாங்காயை கடித்து மகிழ்ந்த அந்த காலம்,
கபடி ஆட விரும்பி காலில் அடி வாங்கி ஒதுங்கி விட்டு, ஐய்யா புரம் கிராம மாணவர்களை அதிசயித்து பார்த்து வியந்த பயந்த காலங்கள்,
குறிப்பாக வின்சன்ட் என்னை
மாடு முட்டுவதை போல
என்னை விழ செய்து விட்டான்.
எனது எட்டாம் வகுப்பின் நாட்களில் தான்
எதிர் பாலர் மேல் ஒரு வித ஈர்ப்பும்
அதனை தூண்டும் விதமாக
தில்லா லங்கடி கதை சொல்லும்
சில நண்பர்களும் இன்னும் நினைவில் வந்து போகிறார்கள்.
அன்று ஒரு நாள் மிதி வண்டி ஓட்டி அவள் வந்தாள்,
என்னை கடந்து செல்லும் போதே
எனது நெஞ்சை அள்ளி சென்று விட்டாள்,
மனம் தேடியது ,அவளை விரும்பியது
ஒன்பதாம் வகுப்பில் ஒன்றாக படிக்க வேண்டும் என்று பகல் கனவு கண்டது,
அதுவே எனது உயர் வகுப்பு வரை
ஒரு தலை காதலாய் இன்றும் மறையாமல்
நீங்கா இடம் பெற்று இருக்கிறாள்
அந்த ஜோதி லட்சுமி. 🪔
எல்லோரும் சமம் என்று கற்று
கொடுத்த பள்ளிக்கூடம்,
ஏன் இன்று மட்டும் ஜாதி, மதம் ,இனம் பார்க்கிறது?பிறப்பால் அனைவரும் சமம் என்பதை
நாம் அனைவரும் கற்று கொண்டுள்ளோம்.
இப்போது இருக்கும் சமூகத்திலும்
அதனை நினைத்து எல்லாரையும் சமமாய் கருதி குறிப்பாக பெண்களிடம் கண்ணியமாக நடந்து கொள்வோம். 🙏🙏🙏