தந்திரமாய் நம்மையுமே
வந்திறங்கி ஆட்சி செய்து
மந்திரம் போல் சூழ்ச்சியுடன்
பரங்கியரும் குடி கொள்ள
சக்தி எல்லாம் திரட்டி
சரித்திரத்தை புரட்ட
நித்திரையை கலைத்து
எதிரி முகத்திரையை கிழித்து
இத்தரையை நமக்கே
சொந்தமென மாற்ற
சந்ததியினர் எல்லாம்
சுதந்திரமாய் வாழ
உறுதியுடன் சிலரும்
குருதியுமே சிந்தி
துச்சமென உயிரும்
மிச்சமின்றி கொடுத்து
.
பெருமையுடன் வாழ
அறும்பாடு பட்டு
சுதந்திரத்தை நமக்காய்
பெருமையுடன் பெற்ற
போராட்ட குணமும் நற்பண்பாய் மனமும்,
எந்நாளும் கொண்டு இந்நாட்டில் தமது
இன்னுயிர் நீத்து நம் குடிகள் காத்த
வீரர் யாவர்க்கும் என் வீர வணக்கம்🙏🙏🙏