மழைக்காலத்தில் நிலா மறைந்து போனது
மௌனத்தின் ஆழத்தில் நானும் மூழ்கினேன்!
கண்ணீரில் தழுவிய இருள் கொண்டாடு
வலியின் கரையில் நான் நின்று கொண்டேன்!
வாழ்க்கையின் கனவுகள் சிதறியதுபோல்
உள்ளம் தாங்கும் சோகத்தில் மூழ்கினேன்!
நிழலின் மடியில் நான் ஒளிந்திருந்தேன்
துயரமும் சோகமும் என்னை ஆட்கொண்டது!
நேற்றின் நினைவுகளில் வாடியிருந்தேன்
நிம்மதியை தொலைந்து தவித்திருந்தேன்!
கனவுகள் கரைந்தே போனதுபோல்
வாழ்வின் சிக்கலில் துவண்டிருந்தேன்!
எல்லை மீறும் ஏக்கத்தின் குரல்களில்
விழிகளினால் நானும் மறைந்திருந்தேன்!
வெள்ளம் போல கண்ணீர், வாழ்க்கையின் வலியை வெளிப்படுத்தும். மௌனத்தின் மொழியில், என் இதயம் கதைக்கின்றது.
மழை துளிகள் விழும் நேரம், மனதின் சோகங்கள் துடைக்கின்றன.
இருள் சூழ்ந்த பாதையில், நம்பிக்கை ஒளி தேடுகின்றேன்.
மறுமொழியில் நான் கண்டேன் ஒளி!!
நிழல்கள் நம்மை சுற்றி, நம்பிக்கையை மறைக்கின்றன. ஆனால், ஒளி எங்கோ, என்னை அழைக்கின்றது.
நிழல்கள் மறைந்தாலும், நம்பிக்கை என்னை வழிநடத்தும். மழை துளிகள் விழும் நேரம், என் இதயம் புதிதாய் பிறக்கின்றது.
வாழ்க்கையின் சுழலில், நான் தேடுகின்றேன் சாந்தியை. கண்ணீரின் வழியே, நான் காண்கிறேன் உண்மையை.
மழை துளிகள் விழும் போது, என் மனம் சுத்தமாகின்றது. வலியின் வழியே, நான் வளர்கிறேன்.
எந்தன் உள்ளம் உறுதியாய் நிமிர்ந்தது!
முன்னேற காத்திருக்கும் புதிய வழிகள்!
விழிகளை உயர்த்தி பரந்த வானத்தை பார்த்தேன்!
விழிகளில் ஒளிந்த கனவுகளை காணப் பெற்றேன்!
தொலைந்த நிம்மதியை மீண்டும் தேடினேன்!
வாழ்வின் ஒவ்வொரு நொடியும் புதுவிதமாய் உணர்ந்தேன்!
வெற்றி எனது விதியை மாற்றும் அலை!
வாழ்வின் பயணம் தொடரும், உற்சாகத்தின் கலை!
முகம் திருப்பிய நேரங்களில் கூட!
விழிகளை உயர்த்து நிமிர்ந்து பார்ப்பேன்!
வாழ்க்கையின் சோகங்கள், என்னை தாழ்த்த முடியாது.
மழை துளிகள் போல, நான் மீண்டும் மலர்வேன்.!
தினமும் ஒரு புதிய காலை,! ஒரு புதிய தொடக்கம்!
நம்பிக்கையின் ஒளியில் வாழ்வதை மறக்காமல்!
வாழ்க்கை என்பது ஒரு பயணம், ஓர் அழகிய பரிசு!
சிரிப்பின் விளிம்பில் சந்தோஷம் விளைந்திடும்!
துயரத்தின் பின்னால் ஒரு ஒளியிருக்கும்!
அதை தேடுங்கள், அதில் நிம்மதி இருக்கும்!
மலர்ந்த கன்னங்களில் உதிர்ந்த தூய்மையைப் போல
வாழ்வின் ஒவ்வொரு கணமும் அழகாகும்!
கடந்து செல்லும் எல்லா போராட்டங்களும்
நமக்கு புதிய சக்தி சேர்க்கும்!!
முடிவில்லா கனவுகளை விரும்பி வாழ்ந்திடுங்கள்!
உங்கள் பாதையில் ஒளியாய் வழிகாட்டும்!
இன்பமும் துன்பமும் சந்திக்கும் நொடிகளில்
உங்களின் தன்னம்பிக்கையை விடதிர்கள்!!
வாழ்வின் சிறகு விரித்து பறந்திடுங்கள்
அசாதாரணமான சந்தோஷத்தை அனுபவித்திடுங்கள்!!
வாழ்க்கை அழகாகும்!