தேவையான பொருட்கள்
- மத்தி மீன்(சிறிய சாளை) - அரை கிலோ
- எண்ணை - 2 டேபிள் ஸ்பூன்
- கடுகு,உ.பருப்பு - அரை ஸ்பூன்
- வெந்தயம் - கால் ஸ்பூன்
- சீரகம் - கால் ஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 100 கிராம்
- மிளகாய் -2
- பூண்டு - 4 பல்.
- இஞ்சி - சிறிய துண்டு
- தக்காளி - 1
- கொடம் புளி- ஒரு சிரிய துண்டு
- மீன் மசாலா ( ஈஸ்டன்)- 3 டீஸ்பூன்
- தேங்காய்ப்பால் - 1 கப்
- அரிசி மாவு - 1 டீஸ்பூன்
- உப்பு - தேவைக்கு
- கருவேப்பிலை,கொத்தமல்லி இலை - கொஞ்சம்.
செய்முறை மீனைச்சுத்தம் செய்து ( சிறிய மீனாக இருக்கும் ,அதனை வாலில் இருந்து தலை
நோக்கி செதிலை சுறண்டி எடுத்தால் வந்து விடும்,தலையையும் வயிற்றோடு
சேர்த்து அரிந்து கழித்து போட்டு விடவும்)உப்பு மஞ்சள் போட்டு
கழுவிக்கொள்ளவும்.
- புளிக்கரைக்க வேண்டாம் ,அப்படியே துண்டாக போடலாம்.
- வெங்காயம்
,தக்காளி கட் பண்ணிக்கொள்ளவும்.மிளகாய் கீறிக்கொள்ளவும்,பூண்டை
தட்டிக்கொள்ளவும். இஞ்சி பொடியாக கட் பண்ணவும்.தேங்காய்ப்பாலுடன்
அரிசிமாவை கலந்து வைக்கவும்.
விட்டு,கடுகு,உ.பருப்பு,வெந்தயம்,சீரகம்,இஞ்சி,பூண்டு,வெங்காயம்,
கருவேப்பிலை தாளிக்கவும்,வதங்கியவுடன்,தககாளி,உப்பு போட்டு
மூடவும்.தக்காளி மசிந்தவுடன் மீன்மசாலா பொடியை போட்டு தண்ணிர் சேர்த்து
கொடம் புளியை போடவும்.
- மசாலா வாடை ,புளி வாடை அடங்கியவுடன் ,மீனை
போட்டு கொதிவந்து அடுப்பைக்குறைத்து விடவும்.5 நிமிடம் கழித்து
தேங்காய்ப்பால் கலவையை விட்டு சிம்மிலேயே 5 நிமிடம் வைத்து அடுப்பை
அணைத்து் விடவும்.விரும்பினால் மல்லி இலை தூவி பறிமாரலாம்.
- கேரளத்து மீன் குழம்பு ரெடி.
குறிப்பு: தேங்காய்
எண்ணை வாசம் பிடிப்பவர்கள் உபயோகிக்கலாம். இது மலயாளி ரெஸ்டாரண்ட் உள்ள
குழம்பு போலவே இருக்கும். இந்த மீனை முழுதாக முதல் மறியாதை செவாலியே
சிவாஜி ஸ்டைலில் சாப்பிட்டால் மிக நன்றாக இருக்கும்.
[/color]