தோன்றும் விதம் தொடர்பான கொள்கைகள்
உணவு மற்றும் சூழலில் காணப்படும் பாக்டீரியா, வைரசு, மற்றும் சில தாவர பிறபொருளெதிரியாக்கிகள், A மற்றும் B கிளைக்கோ புரத பிறபொருளெதிரியாக்கிகளைப் போன்ற, எபிடோப்களைக் (Epitope) கொண்டுள்ளன. இந்த epitope களே பிறபொருளெதிரியாக்கிகளில் காணப்படும், பிறபொருளெதிரிகளால் அடையாளப்படுத்தக் கூடிய பகுதியாகும். பிறந்து முதல் வருட காலத்தில், இந்த சூழல் பிறபொருளெதிரியாக்கிகளுக்கு எதிராக உடலில் உருவாகும் பிறபொருளெதிரிகளே, வாழ்க்கையின் பின்னாளில், தான் தொடர்புகொள்ள நேரும் ABO-ஒவ்வாமை கொண்ட சிவப்பு இரத்த உயிரணுக்களுடன் குறுக்கு வினை புரிகின்றன. A கிளைக்கோ புரதத்திலுள்ள α-D-N-galactosamine ஐ ஒத்த epitope களையுடைய இன்ஃபுளுவென்சா வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் முறைமை செயல்முறையில் எதிர்-A பிறபொருளெதிரிகள் உருவாகின்றன எனக் கருதப்படுகின்றது. அதேபோல் B கிளைக்கோ புரதத்திலுள்ள α-D-galactose ஐ ஒத்த epitope களையுடைய கிராம்-நெகட்டிவ் பாக்டீரீயாக்களான, E.coli போன்றவற்றுக்கு எதிரான பிறபொருளெதிரிகளில் இருந்து எதிர்-B பிறபொருளெதிரி உருவாவதாக நம்பப்படுகிறது, [13]
"இருளில் ஒளி கோட்பாடு" (டெல்நக்ரோ, 1998) (Light in the Dark theory by DelNagro) பரிந்துரையின்படி, ஒரு மனித நோயாளியின் விருந்துவழங்கி உயிரணுவின் (Host cell) மென்சவ்வில் (குறிப்பாக, முளைவிடும் வைரசுக்கள் (budding viruses) அதிகளவில் காணப்படக்கூடிய பகுதிகளான நுரையீரல் மற்றும் சீத புறவணியிழையம்) வளரும் வைரசுக்கள், அங்கிருந்து ABO இரத்த பிறபொருளெதிரியாக்கிகளையும் பெறுகின்றன, பின்னர் வைரசுக்கள் தாம் பெற்றுக்கொண்ட பிறபொருளெதிரியாக்கிகளை, இரண்டாம் நிலை பெறுநருக்கு கொண்டு செல்கின்றன. புதிய பெறுநரில், இந்த தன்னுடல் சாராத இரத்த பிறபொருளெதிரியாக்கிகளுக்கு (Non-self foreign blood antigen) எதிரான நோய்த் தடுப்பாற்றல் முறைமை செயல்முறை நிகழும். அதன்மூலம் அங்கே ABO பிறபொருளெதிரிகள் உருவாகின்றன. குழந்தைகளில், வெளியிலிருந்து பெறப்படும் இரத்த பிறபொருளெதிரியாக்கிகளை நடுநிலைப்படுத்தும் பிறபொருளெதிரிகள் உருவாக, இவ்வாறு வைரசினால் கடத்தப்படும் மனித இரத்த பிறபொருளெதிரியாக்கிகளே காரணமாகும். எச்.ஐ.வி (HIV) தொடர்பான சமீபத்திய ஆய்வுகளில், இந்த கோட்டுப்பாட்டுக்கான ஆதரவு வெளிவந்தது. குறிப்பாக, எச்.ஐ.வி உருவாக்கும் உயிரணு வரிசைகளில் (HIV-producing cell lines) வெளிப்படுத்தப்படும் குருதிவகை பிறபொருளெதிரியாக்கிகளுக்கு (blood group antigens) எதிரான பிறபொருளெதிரிகளைப் பயன்படுத்தி, செயற்கைக் கல முறை சோதனைகளில், எச்.ஐ.வி யை நடுநிலைப்படுத்தலாம்[14][15]
"இருளில் ஒளி கோட்பாடு" புதிய கூர்ப்பு தொடர்பான கருத்தாக்கத்தை முன்வத்தது: அதாவது, ஒரு குறிப்பிட்ட மக்கள்தொகையில், வைரசுக்கள் ஒருவரிலிருந்து ஒருவருக்கு பரவாமல் தடுக்க, சமூக அளவில் ஒரு நோய்த்தடுப்பு செயல்முறை உருவாகின்றது. இதனால், ஒரு குறிப்பிட்ட மக்கள்தொகையில் உள்ள தனியன்கள் ஒவ்வொருவரும், தனித்துவமான பிறபொருளெதிரிகளை தோற்றுவித்து மக்கள்தொகைக்கு அளித்து, மரபியற் பல்வகைமை உருவாக்கத்தில் பங்கெடுத்து, ஒட்டுமொத்தமாக ஒரு மக்கள்தொகையின் நோய் எதிர்ப்பு இயல்புக்கு காரணமாகின்றனர்.
எதிருரு பல்வகைமை (allele diversity) யினால் ஏற்படக்கூடிய கூர்ப்பை உருவாக்கும் திறனானது, எதிர்மறை அதிர்வெண் சார்ந்த தேர்வாக (negative frequency-dependent selection) இருப்பதற்கான சாத்தியமே அதிகமாகும். அதாவது நோய் எதிர்ப்பாற்றல் முறைமையானது, வேறு விருந்துவழங்கிகளில் இருந்து நோய்க்காரணிகளால் காவப்படும் பிறபொருளெதிரியாக்கிகளை விட, உயிரணுக்களின் மென்சவ்விலிருக்கும் மரபியல் மாற்றத்துக்குட்பட்ட அரிதான பிறபொருளெதிரியாக்கிகளை இலகுவில் அடையாளப்படுத்தும். இதனால் அரிதான வகைகளைக் கொண்ட தனியன்கள் இலகுவில் நோய்க்காரணிகளை அடையாளப்படுத்தக் கூடியவையாக இருக்கும். மனிதர்களிடையே அதிகளவில் காணப்படும் மக்கள்தொகைக்குள்ளேயான பல்வகைமை, தனியன்களிடையேயான இயற்கை தேர்வினால் ஏற்படுகிறது