பிறந்தநாள் வருவது
நாம் பிறந்ததை நினைவுபடுத்த அல்ல
ஒவ்வொரு பிறப்புக்கும்
அர்த்தம் உண்டு
பிறந்து நீ என்ன சாதித்தாய் என
நினைவுபடுத்தவே ஒவ்வொரு வருடமும்
பிறந்தநாள் வந்து
நமக்கு நினைவுபடுத்திச் செல்கிறது
நீ வெறும் மலரல்ல (ROSE)
மலர்ந்தாய் வாடி வீணே
மண்ணில் சரிந்தாய் என
வாழ்ந்து விட்டுப் போவதற்கு
நீ ஒரு தேவதை (ANGEL)
உன் வாழ்க்கை இறைவன்
உனக்களித்த வரமாகும்
உன்னால்
உன் குடும்பம்
உன் உடன்பிறப்புகள்
உன் சொந்தங்கள்
உன் சுற்றத்தார்
அனைவரும் நலமடையட்டும்
உன் வாழ்வில்
இறைவனருளால்
இன்று போல என்றும்
இனிமைகள் நிரம்பி வழியட்டும் என
மனதார பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறும்
இனிய நண்பன்
தமிழன்