Author Topic: RICE (பல வகை சாதம்)  (Read 14204 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #45 on: July 17, 2011, 08:53:40 PM »
                                  கவாபட் ரைஸ்

பாசுமதி அரிசி - 5 குவளை
தக்காளி - 7
வெங்காயம் பெரியது - 2
பூண்டு - 10பல்
பச்சை மிளகாய் - 3
நெய் +எண்ணெய் - 50கிராம்
சோயாசாஸ் - 3 கரண்டி
வினிகர் - 2 கரண்டி
மிளகுத்தூள் - 1 கரண்டி
எழுமிச்சைபழம் - ஒன்று
உப்பு - தேவையான அளவு
முட்டை - இரண்டு
மல்லிக்கீரை - ஒரு சிறிய கட்டு
 


அரிசியை உதிர் உதிராக வடிக்கவும். பூண்டை பொடியாக வெட்டி வைக்கவும்
தக்காளியை அரைத்து வைக்கவும் பச்சை மிளகாயை விதையை நீக்கி இரண்டாக கீறி வைக்கவும் வெங்காயத்தை வெட்டி வைக்கவும்
சட்டியில் எண்ணெய்+நெய் ஊற்றி வெங்காயத்தை போட்டி வதக்கவும் பாதி வெந்ததும் அதில் அரைத்த தக்காளியை ஊற்றி மூன்று நிமிடம் கிளறி அதில் பொடியாக நறுக்கிய பூண்டு விதை நீக்கிய பச்சை மிளகாய் சோயா சாஸ், மிளகுத்தூள், எ.பழம், வினிகர் அனைத்தையும் சேர்த்து நன்கு ஐந்து நிமிடம் கொதிக்கவிடவும்.
பின் அதில் சோற்றை சேர்த்து கிளறி பத்து நிமிடம் தம்மில் போடவும் கடைசியில் முட்டையை கொத்திவிட்டு பொரித்து மேலே தூவி மல்லிக்கீரையை தூவி சூடாக பரிமாறவும்.

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #46 on: July 17, 2011, 08:55:46 PM »
                                   சீரக புலவு

பிரியாணி அரிசி- 2 கப்
தேங்காய்ப்பால்- 1 கப்
சீரகம்- 1 மேசைக்கரண்டி
பட்டை-1
கிராம்பு-1
ஏலம்-1
கறிவேப்பிலை- 1 கைப்பிடி
நெய்- 2 மேசைக்கரண்டி
எண்னெய்- 1 மேசைக்கரண்டி
இஞ்சி விழுது- அரை ஸ்பூன்
சிறிய பூண்டிதழ்கள்- 10
மெல்லியதாக அரிந்த வெங்காயம்- 1 கப்
தேவையான உப்பு
 


அரிசியைக் கழுவி அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் நெய்யும் எண்ணெயும் ஊற்றி சூடு செய்யவும்.
சீரகம், பட்டை, கிராம்பு, ஏலம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின் வெங்காயம், பூண்டு சேர்த்து சிறிய தீயில் வதக்கவும்.
தேங்காய்ப்பால், 3 கப் நீர் சேர்க்கவும்.
உடனேயே அரிசியையும் சேர்க்கவும்.
அரிசி பாதி வெந்ததும் தேவையான உப்பைச் சேர்க்கவும்.
அரிசி முக்கால்வாசி வெந்ததும் நீரெல்லாம் சுண்டியதும் புலவு சாதத்தை ‘தம்’ மில் வைத்து 20 நிமிடங்கள் வேக வைக்கவும்.

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #47 on: July 17, 2011, 08:57:29 PM »
                                மஞ்ச சோறு


தரமான வெள்ளைப்பொன்னி புழுங்கல் அரிசி - 2 கப்
தேங்காய் - 1
தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்
பூண்டு - 4 பற்கள்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்பொடி - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
ரம்பை இலை - 1
பட்டை - சிறுதுண்டு
கிராம்பு - 4
ஏலம் - 3
 
தேங்காயைத்துருவிக்கொள்ளவும். 1/4 கப் அளவு தேங்காய்த்துருவலை தனியாக எடுத்து வைக்கவும்.
மீதமுள்ள தேங்காயை மிக்ஸியில் அரைத்து 6 டம்ளர் அளவு பால் எடுத்துக்கொள்ளவும்.
அரிசியை களைந்து நீரில் 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
1/4கப் தேங்காய்த்துருவலில் சோம்பு, மஞ்சள்பொடி சேர்த்து சன்னமாக நீர் சேர்த்து நைஸாக அரைத்துக்கொள்ளவும்.
ரம்பை இலையை அனலில் காட்டி வாசனை வந்ததும் நறுக்கி வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலம், ரம்பை இலை தாளித்து நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை தாளித்து தனியாக வைக்கவும்.
தேங்காய்ப்பாலை பெரிய பாத்திரம் அல்லது எலெக்ட்ரிக் குக்கர் ஏதாவது ஒன்றில் வைத்து அரைத்த மஞ்சள்நிற தேங்காய் விழுது வெந்தயம், இரண்டாக நறுக்கிய பூண்டுபற்கள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
கொதித்து வரும் பொழுது ஊறிய அரிசியை சேர்க்கவும்.
மேலும் கொதித்து வரும் பொழுது தாளித்தவற்றை சேர்த்து கிளறி விடவும்,
அரிசி வேகும் வரை குறைந்தது 2, 3 முறையாவது கம்பால் கிளறி விட வேண்டும்.
சாதம் சமைத்ததும், மேலும் 10 நிமிடம் சிம்மில் வைத்து அல்லது எலெக்ட்ரிக் குக்கர் என்றால் தம்மில் வைத்து பரிமாறவும்

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #48 on: July 17, 2011, 08:59:22 PM »
                  ம‌ட்ட‌ன் த‌ம் பிரியாணி (குக்க‌ர் முறை)

தரமான பாஸ்மதி அரிசி - அரை கிலோ
மட்டன் எலும்புடன் - 400 கிராம்
பழுத்த தக்காளி - நான்கு
வெங்காயம் - நான்கு
பச்சை மிளகாய் - நான்கு
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு தூள் - 2 1/2 தேக்கரண்டி
தயிர் - கால் கப்
கொத்தமல்லி தழை - அரை கைப்பிடி
புதினா இலை - கால் கைப்பிடி
எண்ணெய் - அரை டம்ளர்
நெய் - இரண்டு தேக்கரண்டி
பட்டை - இரண்டு அங்குலம் அளவு ஒன்று
கிராம்பு - இரண்டு
ஏலக்காய் - இரண்டு
பிரிஞ்சி இலை - இரண்டு
ஷாஜீரா - அரை தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - இரண்டு மேசைக்கரண்டி
பாதாம் - ஐந்து (அரைத்தது)
சஃப்ரான் - ஐந்து இதழ் (பாலில் ஊற வைத்தது)
 


அரிசியை களைந்து ஊற வைக்கவும். வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பாதாமை அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும். சஃப்ரானை ஒரு மேசைக்கரண்டி சூடான பாலில் கரைத்து வைக்கவும். மட்டனை சுத்தம் செய்து நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை, ஏலம், பிரிஞ்சி இலை, ஷாஜீரா, கிராம்பு ஆகியவற்றை போடவும். லேசாக பொரிந்ததும் நறுக்கின வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்கு சுருங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதன் பிறகு சுத்தம் செய்து வைத்திருக்கும் மட்டன் மற்றும் பச்சை மிளகாயை போட்டு நன்கு வதக்கவும்.
குக்கரை மூடி தீயை மிதமாக வைத்து 5 நிமிடம் மட்டனை வேக விடவும்
இப்போது மட்டன் லேசாக வெந்து சுருண்டு இருக்கும். அதனுடன் தக்காளி, கொத்தமல்லி தழை மற்றும் புதினாவை சேர்த்து கிளறவும்.
தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறி விடவும். அதன் பின்னர் தயிர், பாதாம் விழுது, பாலுடன் கரைத்து வைத்திருக்கும் சஃப்ரான் ஆகியவற்றை சேர்த்து கிளறி விடவும்.
எல்லாவற்றையும் சேர்த்த பின்னர் நன்கு கிளறி விட்டு கொதிக்க விடவும். அப்படியே ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து வேக விடவும்.
பின்னர் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி கிளறவும். தண்ணீர் சேர்த்து, பின்னர் ஒரு கொதி வந்ததும் களைந்து வைத்திருக்கும் அரிசியை சேர்க்கவும்.
அரிசியை சேர்த்து நன்கு கிளறி விட்டு கொதிக்க வைக்கவும்.
கொதித்ததும் குக்கரை மூடி வெய்ட் போட்டு தீயை மிதமாக வைத்து இரண்டு விசில் வரும் வரை வைத்திருந்து இறக்கவும்.
ஆவி அடங்கியதும் மூடியை திறந்து சாதத்தை பிரட்டி விட்டு உடனே வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி விடவும். அப்படியே விட்டால் கட்டி பிடித்து விடும்.
சுவையான மட்டன் பிரியாணி ரெடி.

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #49 on: July 17, 2011, 09:01:02 PM »
                                    புடலங்காய் முட்டை சாதம்

அரிசி - 2 கப்
புடலங்காய் - 500 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - 2
காய்ந்த மிளகாய் - 2
பூண்டு - 4 பல்
முட்டை - 2
எண்ணெய்
கடுகு - 1/2 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
 


முதலில் அரிசியைப் போட்டு சாதத்தை உதிரியாக வடித்துக் கொள்ளுங்கள்.
புடலங்காயை பொடியாக நறுக்கவும்.
வெங்காயம், தக்காளி, பூண்டை நறுக்கி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு அது வெடித்ததும் வெங்காயம், மிளகாய், பெருஞ்சீரகம், பூண்டு, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளியைப் போட்டு வதக்கவும்.
பின்பு மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
புடலங்காயைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். உப்பு சேர்த்து கிளறி மூடி வேகவிடவும்.
பின்பு முட்டையை உடைத்து ஊற்றி வதக்கி உதிரியாக வரும் வரை கிளறி விடவும்.
சாதத்தின் மேல் கொட்டி கிளறி விடவும். சுவையான புடலங்காய் முட்டை சாதம் தயார்.
இதை குழம்புடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #50 on: July 17, 2011, 09:03:27 PM »
                                     பகாறா கானா

தரமான பாசுமதி அரிசி ‍- ஒரு படி (எட்டு டம்ளர்‍)
எண்ணெய் - ஒரு டம்ளர் (200 மில்லி)
வெங்காயம் - கால் கிலோ
தயிர் - 175 மில்லி
பச்சைமிளகாய் - 8
எலுமிச்சை ‍- ஒன்று
ப‌ழுத்த‌ த‌க்காளி - ஒன்று
ப‌ட்டை - 2 அங்குல‌ துண்டு இர‌ண்டு
கிராம்பு - ஆறு
ஏல‌ம் - நான்கு
நெய் (அ) டால்டா ‍- 25 மில்லி
இஞ்சி பூண்டு விழுது - 8 தேக்க‌ர‌ண்டி
கொத்தம‌ல்லி த‌ழை - ஒரு சிறிய‌ க‌ட்டு (கைக்கு இர‌ண்டு கைப்பிடி)
புதினா - சிறிய‌ அரை க‌ட்டு (கைக்கு ஒரு கைப்பிடி)
உப்பு - எட்டு தேக்க‌ர‌ண்டி (அ) தேவையான‌ அள‌வு
 

அரிசியை க‌ளைந்து 20 நிமிடம் ஊற‌ வைக்க‌வும். வெங்காய‌த்தை நீள‌வாக்கில் நறுக்கிக் கொள்ள‌வும். கொத்தம‌ல்லி மற்றும் புதினாவை ஆய்ந்து ம‌ண்ணில்லாம‌ல் க‌ழுவி த‌ண்ணீரை வ‌டித்து வைக்க‌வும். த‌க்காளியை இர‌ண்டாக‌ நறுக்கி வைக்க‌வும்.

ஒரு பெரிய‌ வாய‌க‌ன்ற‌ பாத்திரத்தில் எண்ணெயை காய‌ வைத்து அதில் ப‌ட்டை, ஏல‌ம், கிராம்பு போட்டு வெடித்த‌தும் வெங்காயம் சேர்த்து வ‌த‌க்கி மூடி போட்டு தீயை மிதமாக வைத்து வேக‌ விட‌வும்.

வெங்காய‌ம் சிவந்து விட கூடாது, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வ‌த‌க்கி மூன்று நிமிட‌ம் அடுப்பை குறைத்து வைக்க‌வும் இதுவும் சிவற கூடாது.

இஞ்சி பூண்டு விழுது வ‌த‌ங்கிய‌தும் கொத்தம‌ல்லி, புதினா, ப‌ச்சைமிள‌காய், த‌யிர் அனைத்தையும் சேர்க்க‌வும்.

எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து க‌ருகவிடாமல் தீயை மிதமாக வைத்து வேக‌ விட‌வும்.

அதன் பிறகு ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்றரை + ஒன்று ஊற்றி கொதிக்க‌ விட‌வும்.

பின்னர் ஊற வைத்திருக்கும் அரிசியை தண்ணீரை வடித்து விட்டு இந்த கலவையில் சேர்த்து நன்கு கிளறி விடவும்.

அதனுடன் பாதியாக நறுக்கின தக்காளி, நெய், உப்பு மற்றும் எலுமிச்சை சாறை பிழிந்து மீண்டும் கிளறி விட‌வும்.

தீயை அதிக‌மாக வைத்து கொதிக்க‌ விட‌வும். முக்கால் ப‌த‌ம் த‌ண்ணீர் வ‌ற்றும் போது தீயை குறைத்து வைக்கவும்.

பிறகு அடுப்பின் மேல் த‌ம் போடும் க‌ருவி (அ) தோசை த‌வ்வா (அ) டின் மூடி வைத்து ச‌ட்டியை அதன் மேல் வைத்து ச‌ரியான‌ மூடி போட்டு அத‌ன் மேல் வெயிட் (அ) சூடான‌ குழ‌ம்பு உள்ள‌ ச‌ட்டியை வைத்து 20 நிமிட‌ம் த‌ம்மில் போடவும்.

ச‌ட்டியை திற‌ந்து லேசாக‌ பிரட்டி விட்டு மற்றொரு ப‌வுளில் எடுத்து வைக்க‌வும்

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #51 on: July 17, 2011, 09:05:36 PM »
                                          நவரத்தின புலாவ்

பாஸ்மதி அரிசி - கால் கிலோ(2கப்),
பெரிய வெங்காயம் - 3,
பனீர் - 200 கிராம்,
பச்சை பட்டாணி - 200 கிராம்,
காலிஃப்ளவர் - 200 கிராம்,
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
இஞ்சி - சிறிது,
பூண்டு - 5 பல்,
பட்டை - சிறிது,
கிராம்பு - 2,
ஏலக்காய் - 2,
பாதாம் -10,
பிஸ்தா - 10,
முந்திரி - 10,
உலர்ந்த திராட்சை - 20,
வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி,
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி,
உப்பு - தேவைக்கேற்ப.
 


அரிசியை கழுவி, அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
வெங்காயத்தை நீளமாக, சன்னமாக நறுக்கவும்.
காலிஃப்ளவரை சிறியதாக நறுக்கி வைக்கவும்.
இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கவும்.
பனீரை சிறிய துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் பொரித்து வைக்கவும். அதே எண்ணெயில் பாதாமையும் வறுத்து எடுக்கவும்.
மீதி எண்ணெயில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் காலிஃப்ளவர், பட்டாணி சேர்த்து வதக்கி இறக்கவும்.
வேறொரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
கொதித்ததும் மஞ்சள் தூள், அரிசியை போட்டு வேக விடவும்.
முக்கால் பதம் வெந்ததும் உப்பு, வதக்கிய காய்கள், பொரித்த பனீர், வறுத்த பாதாம், பிஸ்தா, திராட்சை,வெண்ணெய் சேர்த்து சாதம் உடையாமல் கலக்கி சிறிது நேரம் தம்மில் வைத்து பரிமாறவும்.
Note:
ரைஸ் குக்கரிலும் செய்யலாம். தொட்டுக்கொள்ள காரமான சிக்கன் கிரேவி நன்றாக இருக்கும்.

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #52 on: July 17, 2011, 09:07:07 PM »
                                ஸ்ரீலங்கன் ஃப்ரைட் ரைஸ்

பாஸ்மதி அரிசி - 3 கப்
பட்டர் - தேவையானளவு
நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்
நறுக்கிய பச்சைமிளகாய் - அரை கப்
சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி
நறுக்கிய பீன்ஸ் - 2 கப்
உள்ளி (பூண்டு) - 3 பல்
இஞ்சி நறுக்கியது - ஒரு தேக்கரண்டி
தக்காளி நறுக்கியது - ஒரு கப்
கோவா (முட்டைகோஸ்) நறுக்கியது - 2 கப்
முட்டை (அவித்து, சிறுதுண்டுகள்) - 2
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
கோழி இறைச்சி(பொரித்த) - 2 கப்
உருளைக்கிழங்கு (சிறியதுண்டுகள்,பொரித்த) - ஒரு கப்
அஜினோமோட்டோ - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
லீக்ஸ் - 2 கப்
இறால் (சுத்தமாக்கி, பொரித்த ) - 2 கப்
கத்தரிக்காய் (சிறியதுண்டுகள், பொரித்த) - ஒரு கப்
 


பாஸ்மதி அரிசியை கழுவி துப்பிரவு செய்யவும். பின்பு அடுப்பில் தாட்சியை (வாணலியை) வைத்து சூடாக்கிய பின்பு பட்டர், கழுவி துப்பிரவு செய்த பாஸ்மதி அரிசி ஆகியவற்றை போட்டு வறுக்கவும்.
பின்பு அடுப்பிலிருந்து தாட்சியை இறக்கி வறுத்த அரிசியை வேறு ஒரு பாத்திரத்தில் போடவும்.
அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து அதில் முக்கால் பகுதி தண்ணீர் விட்டு அதனை கொதிக்க விடவும்.
அடுப்பிலுள்ள தண்ணீர் கொதித்ததும் அதில் கழுவி வறுத்த அரிசியை போட்டு அவியவிடவும்.
அரிசி அவிந்து சோறு(சாதம்) ஆகியதும் அதிலுள்ள கஞ்சியை வடித்து விட்டு அடுப்பிலிருந்து இறக்கி வேறொரு பாத்திரத்தில் போட்டு ஆற வைக்கவும்.
பின்பு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து அதில் முக்கால் பகுதி தண்ணீர் விட்டு அதனை கொதிக்க விடவும்.
அடுப்பிலுள்ள தண்ணீர் கொதித்ததும் அதில் கழுவி வறுத்த அரிசியை போட்டு அவியவிடவும்.
அரிசி அவிந்து சோறு(சாதம்) ஆகியதும் அதிலுள்ள கஞ்சியை வடித்து விட்டு அடுப்பிலிருந்து இறக்கி வேறொரு பாத்திரத்தில் போட்டு ஆற வைக்கவும்.
அதன் பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து சூடாக்கிய பின்பு அதில் எண்ணெய் விட்டு சூடாக்கி அதில் வெங்காயம், பச்சைமிளகாய், உள்ளி(பூண்டு), இஞ்சி போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
பொன்னிறமாக வதக்கிய பின்பு அதில் நறுக்கிய பீன்ஸ் போட்டு வதக்கவும். பீன்ஸ் வதக்கிய பின்பு அதில் நறுக்கிய காரட் போட்டு வதக்கவும்.
காரட் வதக்கிய பின்பு அதில் நறுக்கிய கோவா(முட்டைகோஸ்) போட்டு வதக்கவும்.
கோவா(முட்டைகோஸ்) போட்டு வதக்கிய பின்பு அதில் நறுக்கிய தக்காளி போட்டு வதக்கவும்.
தக்காளி போட்டு வதக்கிய பின்பு அதில் பொரித்த உருளைக்கிழங்கு போட்டு வதக்கவும்.
உருளைக்கிழங்கு போட்டு வதக்கிய பின்பு அதில் நறுக்கிய லீக்ஸ் போட்டு வதக்கவும்.
பின்பு அதில் பொரித்த கத்தரிக்காய் போட்டு வதக்கவும். பின்பு பொரித்த இறால் போட்டு வதக்கவும்.
பொரித்த இறால் போட்டு வதக்கிய பின்பு அதில் பொரித்த கோழி இறைச்சி போட்டு வதக்கவும்.
இவையாவும் நன்றாக வதங்கியதும் அவித்தமுட்டை, உப்பு, அஜினோமோட்டோ, மிளகுத்தூள், கறிவேப்பிலை, தேசிக்காய்(எலுமிச்சம்பழ)சாறு, சோயா சாஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.
அதன் பின்பு சோற்றையும்(சாதத்தையும்) சேர்த்து நன்றாக கலக்கவும். கலந்த ஒரு நிமிடத்தின் பின்பு சுவையான ஃப்ரைட்ரைஸ் தயாராகி விடும்.
அதன் பின்பு அடுப்பிலிருந்து இறக்கி ஒரு தட்டில் ஸ்ரீலங்கன் ஃப்ரைட் ரைஸ் வைத்து இதனுடன் கறிவேப்பிலை துவையல் அல்லது இஞ்சித்துவையல் அல்லது வேறு ஏதாவது துவையலுடன் பரிமாறவும்.

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #53 on: July 17, 2011, 09:09:20 PM »
                                சைனீஸ் ஃப்ரைட் ரைஸ்

பாஸ்மதி அரிசி(ஊறவைத்தது) - 2 கப்
காரட் நறுக்கியது - 200 கிராம்
பீன்ஸ் நறுக்கியது - 200 கிராம்
கறிமிளகாய்(குடைமிளகாய்) நறுக்கியது - 200 கிராம்
பச்சைமிளகாய் கீறியது - 8
சோயா சோஸ் - 2 மேசைக்கரண்டி
லீக்ஸ் - ஒரு பிடி
செலரி - ஒரு பிடி
பட்டர் - தேவையானளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
வெங்காயம் நறுக்கியது - ஒரு கப் (200 கிராம்)
 


பாஸ்மதி அரிசியை கழுவி துப்பிரவு செய்யவும். பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து சூடாக்கியபின்பு அதில் பட்டர், கழுவி துப்பிரவு செய்த பாஸ்மதி அரிசி ஆகியவற்றை போட்டு வறுக்கவும்.
அதன் பின்பு அடுப்பிலிருந்து தாட்சியை இறக்கி வறுத்த அரிசியை வேறு ஒரு பாத்திரத்தில் போடவும்.
பின்பு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து அதில் முக்கால் பகுதி தண்ணீர் விட்டு அதனை கொதிக்க விடவும்.
அடுப்பிலுள்ள தண்ணீர் கொதித்ததும் அதில் கழுவி வறுத்த அரிசியை போட்டு அவியவிடவும்.
அரிசி அவிந்து சோறு(சாதம்) ஆகியதும் அதிலுள்ள கஞ்சியை வடித்து விட்டு அடுப்பிலிருந்து இறக்கி வேறொரு பாத்திரத்தில் போட்டு ஆற வைக்கவும்.
அதன் பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து சூடாக்கிய பின்பு அதில் எண்ணெய் விட்டு சூடாக்கி அதில் வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
பொன்னிறமாக வதக்கிய பின்பு அதில் நறுக்கிய பீன்ஸ் போட்டு வதக்கவும்.
பீன்ஸ் வதக்கிய பின்பு அதில் நறுக்கிய காரட் போட்டு வதக்கவும். காரட் வதக்கியதில் நறுக்கிய கறிமிளகாய் (குடைமிளகாய்) போட்டு வதக்கவும்.
கறிமிளகாய்(குடைமிளகாய்) வதக்கிய பின்பு அதில் சோயாசாஸ், லீக்ஸ், செலரி, உப்பு ஆகியவற்றையும் போட்டு பாத்திரத்தை டைட்டாக மூடி மெல்லிய நெருப்பில்(தீயில்) வேகவிடவும் .
வெந்த பின்பு இதனுடன் சோற்றை(சாதத்தை) போட்டு நன்றாக கலந்தால் தாளிப்போ அல்லது கரம்மசாலாவோ இல்லாத சைனீஸ்ஃப்ரைட் ரைஸ் தயாராகிவிடும்.
பின்பு ஒரு தட்டில் சைனீஸ் ஃப்ரைட் ரைஸை வைத்து இதனுடன் கறிவேப்பிலை துவையல் அல்லது இஞ்சித்துவையல் அல்லது வேறு ஏதாவது துவையலுடன் பரிமாறவும்.

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #54 on: July 17, 2011, 09:11:01 PM »
                  தாய் ஃப்ரைட் ரைஸ்


பாஸ்மதி அரிசி (ஊறவைத்தது) - 250 கிராம்
பட்டர் - ஒரு தேக்கரண்டி
கோவா(முட்டைகோஸ்) நறுக்கியது - 2 கப்
காரட் (நறுக்கியது) - ஒரு கப்
கறிமிளகாய்(குடைமிளகாய்)நறுக்கியது - ஒரு கப்
வெங்காயம் (நறுக்கியது) - ஒரு கப்
தக்காளிப்பழம் (நறுக்கியது) - ஒரு கப்
வெங்காயத்தாள் - 2
பேபிக்கான் - 4
துளசி இலை - ஒரு கட்டு
இஞ்சி நறுக்கியது - ஒரு தேக்கரண்டி
உள்ளி(பூண்டு)நறுக்கியது - 8 பல்
பச்சைமிளகாய் நறுக்கியது - 10
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
அஜினோமோட்டோ - தேவையானளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வறுத்தகச்சான்(இரண்டாக உடைத்தது) - சிறிதளவு
கறிவேப்பிலை நறுக்கியது - சிறிதளவு
தேசிக்காய்(எலுமிச்சம்பழ)சாறு - சிறிதளவு
 


பாஸ்மதி அரிசியை கழுவி துப்பிரவு செய்த பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை)வைத்து சூடாக்கிய பின்பு அதில் போட்டு வறுக்கவும்.
வறுத்த பின்பு அடுப்பிலிருந்து தாட்சியை (வாணலியை) இறக்கி வறுத்த அரிசியை வேறு ஒரு பாத்திரத்தில் போடவும்.
பின்பு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து அதில் முக்கால்பகுதி தண்ணீர் விட்டு அதனை கொதிக்க விடவும்.
அடுப்பிலுள்ள தண்ணீர் கொதித்ததும் அதில் கழுவி வறுத்த அரிசியை போட்டு அவியவிடவும்.
அரிசிஅவிந்து சோறு(சாதம்) ஆகியதும் அதிலுள்ள கஞ்சியை வடித்து விட்டு அடுப்பிலிருந்து இறக்கி வேறொரு பாத்திரத்தில் போட்டு மூடி வைக்கவும்.
அதன் பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து சூடாக்கியபின்பு எண்ணெய் விட்டு சூடாக்கி அதில் வெங்காயம், பச்சைமிளகாய், உள்ளி(பூண்டு), இஞ்சி, வெங்காயத்தாள் போட்டு வதக்கவும்.
இவையாவும் வதங்கியபின் இதனுடன் கறிமிளகாய்(குடைமிளகாய்), கோவா(முட்டைகோஸ்), காரட், துளசி யிலை ஆகியவற்றையும் சேர்த்து வதக்கவும்.
இவையாவும் வதங்கிய பின்பு இதனுடன் தக்காளிப்பழம், பேபிக்கானையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வதங்கிய பின்பு அஜினோமோட்டோ, மிளகுத்துள், கறிவேப்பிலை, தேசிக்காய்(எலுமிச்சம்பழ)சாறு, பட்டர் சேர்த்து நன்றாக கலந்து ஒரு நிமிடத்தின் பின்பு அடுப்பிலிருந்து இறக்கவும்.
அதன் பின்பு வாயகன்ற பாத்திரத்தில் சோற்றையும்(சாதத்தையும்) வதக்கிய காய்கறிகளையும் மாறிமாறி போட்டு நன்றாக கலந்து அதன் மேல் வறுத்து இரண்டாக உடைத்த கச்சானை (வேர்கடலையை) போட்டு அலங்கரிக்கரித்த பின்பு சுவையான தாய் ஃப்ரைட் ரைஸ் தயாராகிவிடும். அதன் பின்பு அதை பரிமாறவும்.



புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #55 on: July 17, 2011, 09:12:32 PM »
                       நெல்லை தம் பிரியாணி


மட்டன் - 1 1/4 கிலோ
பிரியாணி அரிசி - ஒரு கிலோ
எண்ணெய் - 150 மில்லி
நெய் - 150 மில்லி
இஞ்சி பூண்டு விழுது - 3 மேசைக்கரண்டி
ஏலம் - 3
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு (கரம் மசாலா பவுடர் போடுவதால், விரும்பினால் சேர்க்கவும்)
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி (ஏலம், பட்டை, கிராம்பு பொடி)
பச்சை மிளகாய் - 6
சில்லி பவுடர் - 2 தேக்கரண்டி
வெங்காயம் - 300 கிராம்
பழுத்த தக்காளி - 400 கிராம்
தயிர் - 200 மில்லி
எலுமிச்சை - 2(சிறியது)
புதினா - சிறிய கட்டு
மல்லி - சிறிய கட்டு
ஆரஞ்ச் ரெட், லெமன் யெல்லோ கலர் - ஒரு பின்ச்
உப்பு - தேவைக்கு
 
வெங்காயம் மற்றும் தக்காளியை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். மல்லி, புதினாவை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பிரியாணி அரிசியை தண்ணீரில் ஊற வைக்கவும்.

கறியை சுத்தம் செய்து கழுவி தண்ணீரை வடிகட்டி அதில் தயிர், ஒரு மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, ஒரு தேக்கரண்டி சில்லி பவுடர், உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

அதன் பிறகு குக்கரில் ஊற வைத்திருக்கும் கறியை போட்டு 3 விசில் வரும் வரை வைத்திருந்து இறக்கவும்.

கறி வெந்த பின்பு எடுத்து தனியாக வைக்கவும்.

ஒரு பெரிய பாத்திரத்தில் 150 மில்லி எண்ணெய், 100 மில்லி நெய் விட்டு காய்ந்ததும் ஏலம், பட்டை, கிராம்பு தாளித்து நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் முழுவதையும் போட்டு வதக்கவும்.

வெங்காயம் வதங்கி சிவந்ததும், மீதமுள்ள 2 மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா போட்டு பிரட்டவும். சிம்மில் வைத்து சிறிது நேரம் மூடி திறக்கவும்.

பின்பு அதில் தக்காளி, மிளகாய், மல்லி, புதினா, ஒரு தேக்கரண்டி சில்லி பவுடர், சிறிது உப்பு போட்டு பிரட்டி மூடி போட்டு மசிய விடவும்.

மசிந்ததும் வேக வைத்த மட்டனை சேர்க்கவும். சிறிது நேரம் தீயை மிதமாக வைத்து மூடி வைக்கவும். மட்டன் மூழ்கும் அளவு கிரேவி இருக்க வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் தாராளமாக ஊற்றி கொதி வந்தவுடன் ஊற வைத்த அரிசியை போட்டு முக்கால் அளவு வெந்ததும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். பின்பு மட்டன் மசாலா உள்ள பாத்திரத்தில் வடித்த சாதத்தை கொட்டி சமப்படுத்தி, ஆரஞ்ச் ரெட், லெமன் யெல்லொ கலரை சிறிது நீரில் கரைத்து சாதம் மேல் ஊற்றி விடவும். மீதி உள்ள 50 மில்லி நெய்யை சாதம் மேல் ஊற்றவும்.

பின்பு தம் போடுவதற்கு அலுமினியம் ஃபாயிலை போட்டு பாத்திரத்தில் மூடி அதன் மேல் தட்டு வைத்து மூடி போடவும். சிம்மில் கால் மணி நேரம் வைக்கவும். பாத்திரத்தின் அடியில் பழைய தோசைக்கல் அல்லது ஹீட் டிஃப்யுசர் இருந்தால் வைத்து கால் மணி நேரம் சிம்மில் வைத்திருக்கவும்.

அடுப்பை அணைத்து கால் மணி நேரம் கழித்து திறந்து ஒன்று போல் பிரட்டவும். சாதம் மட்டனுடன் சேர்ந்து வருமாறு பிரட்டவும். சாதம் உடையக்கூடாது. தம் போடுவதால் மட்டனில் உள்ள கிரேவி எல்லாம் சாதம் இழுத்து கொண்டு விடும்.

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #56 on: July 17, 2011, 09:13:58 PM »
                         மூலிகை சாதம்

உதிராக வடித்த சாதம் - 2 கப்,
கற்பூர வெற்றிலை (வெள்ளை வெற்றிலை) - 10,
வெள்ளை துளசி - ஒரு கைப்பிடி,
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி,
புதினா - ஒரு கைப்பிடி,
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி,
சீரகம் - 1 தேக்கரண்டி,
மிளகு - 1 தேக்கரண்டி,
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.
 
எல்லா இலைகளையும் நன்கு கழுவி, மிகவும் பொடியாக நறுக்கி, தனித்தனியே வைக்கவும்.
சீரகம், மிளகை வெறும் வாணலியில் வறுத்து நைசாக பொடிக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, முதலில் நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பிறகு புதினா, அடுத்து கொத்தமல்லி, அதற்கடுத்து துளசி, கடைசியாக வெற்றிலை சேர்த்து கிளறவும்.
வெற்றிலை சேர்த்த பிறகு அதிகம் கிளறாமல், உதிராக வடித்து, ஆற வைத்த சாதம், பொடித்த சீரக-மிளகு பொடி, உப்பு சேர்த்து, நன்கு கிளறி இறக்கவும்.
Note:
ஓரளவு சூட்டுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.


புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #57 on: July 17, 2011, 09:15:08 PM »
                                   நவரத்தின புலாவ்

பாஸ்மதி அரிசி - கால் கிலோ(2கப்),
பெரிய வெங்காயம் - 3,
பனீர் - 200 கிராம்,
பச்சை பட்டாணி - 200 கிராம்,
காலிஃப்ளவர் - 200 கிராம்,
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
இஞ்சி - சிறிது,
பூண்டு - 5 பல்,
பட்டை - சிறிது,
கிராம்பு - 2,
ஏலக்காய் - 2,
பாதாம் -10,
பிஸ்தா - 10,
முந்திரி - 10,
உலர்ந்த திராட்சை - 20,
வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி,
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி,
உப்பு - தேவைக்கேற்ப.
 


அரிசியை கழுவி, அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
வெங்காயத்தை நீளமாக, சன்னமாக நறுக்கவும்.
காலிஃப்ளவரை சிறியதாக நறுக்கி வைக்கவும்.
இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கவும்.
பனீரை சிறிய துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் பொரித்து வைக்கவும். அதே எண்ணெயில் பாதாமையும் வறுத்து எடுக்கவும்.
மீதி எண்ணெயில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் காலிஃப்ளவர், பட்டாணி சேர்த்து வதக்கி இறக்கவும்.
வேறொரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
கொதித்ததும் மஞ்சள் தூள், அரிசியை போட்டு வேக விடவும்.
முக்கால் பதம் வெந்ததும் உப்பு, வதக்கிய காய்கள், பொரித்த பனீர், வறுத்த பாதாம், பிஸ்தா, திராட்சை,வெண்ணெய் சேர்த்து சாதம் உடையாமல் கலக்கி சிறிது நேரம் தம்மில் வைத்து பரிமாறவும்.
Note:
ரைஸ் குக்கரிலும் செய்யலாம். தொட்டுக்கொள்ள காரமான சிக்கன் கிரேவி நன்றாக இருக்கும்.

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #58 on: July 17, 2011, 09:16:22 PM »
                             ஈஸி வெஜிடபிள் புலாவ்

பாஸ்மதி அரிசி - கால் கிலோ (2 கப்),
பெரிய வெங்காயம் - 2,
காரட் - 1,
பச்சை பட்டாணி - 100 கிராம்,
பீன்ஸ் - 10,
காலிஃப்ளவர் - 100 கிராம்,
பச்சை மிளகாய் - 2,
சீரகம் - 1/2 தேக்கரண்டி,
இஞ்சி - சிறிது,
பூண்டு - 10 பல்,
பட்டை - சிறிது,
கிராம்பு - 2,
ஏலக்காய் - 2,
பிரிஞ்சி இலை - சிறிது,
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி,
உப்பு - தேவைக்கேற்ப.
 


அரிசியை கழுவி, அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
வெங்காயத்தை நீளமாக, சன்னமாக நறுக்கவும்.
காரட், பீன்ஸை அரை அங்குல சன்ன துண்டுகளாக நறுக்கவும்.
காலிஃப்ளவரை சிறியதாக நறுக்கி வைக்கவும்.
இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பச்சை மிளகாயை நைசாக அரைக்கவும்.
ரைஸ் குக்கர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெயை ஊற்றி பிரிஞ்சி இலை தாளித்து, நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அரைத்த மசாலா சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
காய்கள் சேர்த்து ஒரு கிளறு கிளறி (வதக்க வேண்டாம்) அரிசி சேர்த்து கிளறி, 4 கப் தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
பாத்திரத்தை ரைஸ் குக்கரில் வைத்து ஆன் செய்யவும்.
5 நிமிடம் கழித்து உப்பு சேர்த்து கலக்கி மூடவும்.
தானாக வார்மர் நிலைக்கு வந்ததும் 10 நிமிடம் கழித்து திறந்து, சாதம் உடையாமல் கலக்கி பரிமாறவும். வெள்ளை வெளேரென்று பார்க்க அழகாக இருக்கும்.
Note:
குக்கரிலும், தனியாகவும் கூட இந்த முறையில் செய்யலாம். தொட்டுக்கொள்ள சிக்கன் குருமா, மட்டன் குருமா, உருளைக்கிழங்கு-பட்டாணி குருமா, ராய்த்தா நன்றாக இருக்கும்.

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #59 on: July 17, 2011, 09:17:47 PM »
                                 கறிவேப்பிலை துவையல் சாதம்


சாதம் - ஒரு கப்
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 5
புளி - ஒரு சிறு உருண்டை
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு, உளுந்து - அரை தேக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
 

கறிவேப்பிலையை ஆய்ந்து சுத்தம் செய்து கழுவி வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, தேங்காய் துருவல், புளி, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர் எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் நெய் ஊற்றி கடுகு, உளுந்து போட்டு தாளித்துக் கொள்ளவும்.

அதில் அரைத்த கறிவேப்பிலை விழுது மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

சாப்பிடும் போது துவையலை சாதத்துடன் சேர்த்து கலந்து பரிமாறவும். சுவையான கறிவேப்பிலை துவையல் சாதம் ரெடி

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்