9
« Last post by TiNu on May 31, 2024, 01:21:14 AM »
தனிமையை உணரும் விதம் பல உண்டு...
நமை சுற்றி பெரும் கூட்டம் இருந்தாலும்..
நமக்கு மிக பிடித்தவர்கள் இல்லையெனில்..
நம் பித்து மனம் உணரும் வெறுமை.. தனிமையே..
ஏதோ ஒரு சூழலில் பிறந்த வீடு விட்டு..
உடன் இருந்த... சொந்த உறவுகளை துறந்து....
முகம் தெரியா.. மொழி புரியா.. தேசத்தில்....
செய்வதறியது.. குழம்பி தவிப்பதுவும் தனிமையே..
ஏதோ ஓர் தொலைதூர நெடு பயணத்தில்..
சற்றும் எதிர்பாரா நொடி பொழுது.விபத்துகளில்
தனியாகவோ.. அல்லது.. கூட்டத்தில் ஒருவராகவோ..
சிக்கி..... நிலை குலைந்து..... நிற்பதுவும் தனிமையே..
நிசப்தமான ஓர் தனி அறையில்.. கண்களை
கூச வைக்கும் ஒளியும்.. செவிப்பறை
கிழிய செய்யும் ஒலியும்.. சுற்றி இருந்தும்..
அதை உணரா.தியான நிலையும் தனிமையே.
மனிதனின் தனிமைகள் பல உண்டு எனினும்..
அதன் முடிவுகள் என்றுமே சமாதிநிலையல்ல..
தைரியமான.. தீர்க்கமான.. முடிவுகள்..கண்டு...
நன்மைகளோடு மலர்ந்த சில தனிமையுமுண்டு....
தனிமைகள் என்றுமே தனியாக நிற்பதில்லை..
அதனுடன்.. அலைபாயும் கலங்கிய மனதும்..
கடின தருணத்தை எதிர்கொள்ள துடிக்கும் மனதும்..
நாம் உணரும் தனிமையில் கைகோர்த்து நிற்குமே..
தன் தனிமையை கையாள ஆள தெரிந்தவனோ....
தன்னை தானே செதுக்க கற்றுக்கொள்கிறான்..
தன் தனிமையை ஆழமாக சுவாசிக்க தெரிந்தவனோ..
இவ்வுலகை கைவச படுத்த கற்றுக்கொள்கிறான்.