[சிவன் மீட்டும் உடுக்கை
விஷ்ணு மீட்டும் சங்கு
கண்ணன் மீட்டும் புல்லாங்குழல்
நந்தி மீட்டும் மிருதங்கம்
நாரதர் மீட்டும் வீணை
சரஸ்வதி மீட்டும் வீணை
ஒலி அலைகளுக்கும்
சக்தி உ ண்டு.
அண்டம் முழுவதும் பரவியுள்ள
இறைவனின் அலைகளுக்கும்
சக்தி உ ண்டு
இறைவனின் அலைகளோடு
சத்தம் என்பது கலக்கும் போது
அந்த சத்தம் சக்தி வாய்ந்தது
சக்தி உ ண்டு
அந்த சத்தம் இசையாக யிருந்தால்
இசைக்கு சக்தி உ ண்டு
இப்போதுள்ள மின்கருவிகளால்
அந்த இசையதனை
சேமித்து வைத்து
திரும்ப திரும்ப கேட்டாலும்
மாறாத தண்மையோடு
சக்தி உண்டு
இறைவனின்அலையோடு
இணைந்து விட்ட
இசைசக்தியை பிரிக்க இயலாது
காலத்தால் அழியாத
சக்தி உ ண்டு
.
இசைக்கு பாம்புகளையும்
மிருகங்களையும் கூட மயக்கும்
சக்தி உ ண்டு
இருதயம் இசைக்கு
அடிமையானால்
இம்மையில் இன்புற்று வாழ
சக்தி உ ண்டு
துன்பம் கோபம் இவைகளைப்
போக்கி ஒருவரை மகிழச் செய்யும்
சக்தி உ ண்டு
கல் மனதையும் கரைக்க வல்ல
சக்தி உ ண்டு
இறைவனை அடையவும்
உயர்ந்த சிந்தனை சிந்திக்கவும்
சக்தி உ ண்டு
ஈர்க்கும் இசையுடன்
ஒன்று பாடத் தெரிய வேண்டும்
அல்லது இசைக்கருவி
மீட்டவாவது தெரிய வேண்டும்
இரண்டும் இல்லாவிடில்
ரசிக்க தெரியாது
உடனே முடிவெடு
பாடு
மீட்டு
இசை உனக்காக மட்டுல்ல,,,,,,,
லட்சோபலட்ச மக்களை ஈர்த்து
துன்பம் போக்கிடு,,,,,,,,