வணக்கம் வருண் ,
தாங்கள் இந்நிகழ்ச்சியை நன்றாக தொகுத்து வழங்கி வருகின்றீர்கள் .நான் இந்த முறை "எங்கேயும் எப்போதும் " என்ற திரைபடத்திலிருந்து "சொட்ட சொட்ட நனைய வைத்தாய் " என்ற பாடலை கேட்க விரும்புகிறேன் .இது எனக்கு மிகவும் பிடித்த பாடல்.அந்த பாடலில் வரும் வரிகள் மிகவும் பிடித்தவை .குறிப்பாக "எட்டாத இடத்தில்
என் நெஞ்சை பறக்க வைத்தாய்
கிட்ட தட்ட கரைய வைத்தாய்
கிட்டாமல் அலைய வைத்தாய்
திட்டாமல் திட்டித் தான்
உன் காதல் உணர வைத்தாய் "
மேலும் சில வரிகளும் பிடித்தவையே .அவை
"நீ ஒரு நாள் ஒருநாள் விதையாய்
வந்து விழுந்தாய் கண்ணுக்குள்ளே
விழிபார்க்கும் போதே மரமாய்
இன்று எழுந்தாய் நெஞ்சுக்குள்ளே
அட இனி என்ன நடக்கும் ...
மனம் நடந்ததை நடிக்கும் ...
ஒரு குட்டிப்பூனை போல ,
காதல் எட்டிப் பார்க்குதே
அது அச்சம் மடம் நாணம் எல்லாம்
தட்டிப் பார்க்குதே பார்க்குதே ..
பார்க்குதே ..தோற்குதே"--- இந்த பாடலை சின்மயி ,சத்யா ஆகியோர் பாடி இருகின்றார்கள் .இந்த பாடலை எழுதியவர் நா.முத்துகுமார் .இப்படத்தின் இசையமைப்பாளர் சி.சத்யா .இப்பாடலை நன் எனக்காகவும்,எனதன்பு நண்பன் அஷ்வினுக்காகவும் மற்றும் நம் நட்புகளுக்காகவும் கேட்கிறேன் .மிக்க நன்றி .