Film Name : ilamai kaalangal
ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
கண்ணீல் என்ன சோகம் போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே
(ஈரமான)
என்னைப் பார்த்து ஒரு மேகம் ஜன்னல் சாத்திவிட்டுப் போகும் (2)
உன் வாசலில் எனைக் கோலம் இடு இல்லை என்றால் ஒரு சாபம் இடு
பொன்னாரமே...
தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து என்னோடு நீ பாடிவா சிந்து
(ஈரமான)
நேரம் கூடிவந்த வேளை நீ நெஞ்சை மூடிவைத்த கோழை (2)
என் நெஞ்சிலே ஒரு ரத்தம் இல்லை கண்ணீருக்கே நான் தத்துப் பிள்ளை
என் காதலி...
உன் போல என்னாசை தூங்காது ராணி தண்ணீரில் தள்ளாடுதே தோணி
ஈரமான ரோஜாவே ஏக்கமென்ன ராஜாவே
கண்ணில் என்ன சோகம் தீரும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே
(ஈரமான)