http://www.youtube.com/v/ZthjKdj_gBo&feature=relatedஆட்டுவித்தால் யார் ஒருவர்
ஆடாதாரே கண்ணா ...
ஆசையெனும் தொட்டிலிலே
ஆடாதாரே கண்ணா ...
நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு
என் நிழலில் கூட அனுபவத்ததின் சோகம் உண்டு
பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே
ஆனால் நண்பனிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலே .
நண்பனிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலே...
( ஆட்டு ..)
பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்
அந்த பார்த்தவன் உன் இடத்தில கீதை கேட்டான்
நான் இருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்
இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன் ...
நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்
(ஆட்டு ...)
கடலளவு கிடைத்தாலும் மயங்கமாட்டேன்
அது கையளவே ஆனாலும் கலங்கமாட்டேன்
உள்ளத்திலே உள்ளது தான் உலகம் கண்ணா ..
அதை உணர்ந்து கொண்டால் துன்பம் எல்லாம் விலகும் கண்ணா
உணர்ந்து கொண்டால் துன்பம் எல்லாம் விலகும் கண்ணா ....
(ஆட்டு ...)