அதுதானா இது?
உன்னை இரண்டாமுறை பெற்றெடுக்கும்
அது என்றான் அவன்
உயிரோடு உன்னை சாவடிக்கும்
அது என்றான் இவன்
.
வாழவைக்கும் விஷம்
அது என்றான் அவன்
சாகடிக்கும் மருந்து
அது என்றான் இவன்
.
எதை வேண்டுமானாலும் புசி,
இதைத் தவிர என்றுகேட்டதை
ருசி பார்க்க தவித்த
அதாம் ஏவாளின் மனம் போல்
காதலை அறிய தவித்தது என் மனம்…
.
நம்மை யாரோ கடற்கரையில் பார்த்துவிட்டார்கள்
எனக்கு கல்யாணம் தயாராகிறது
என்று பயந்து கொண்டிருந்தது ஒரு காதல்
.
“இதுசரியாய் வராது, நாம் பிரிந்துவிடுவோம்”
என்று ஒரு இருதயத்தை அங்கே
நொறுக்கியது ஒரு காதல்…
.
நண்பனாகத்தான் உன்னை பார்த்தேன்
என்று இருதயத்தை பிளந்து கொண்டிருந்தது
இன்னொரு காதல்…
.
நேற்று உன் பைக்கில் யாரவளென்று தொடங்கி
எக்கேடும்கெட்டோழி என்று முடியும்
கோபத் தீயில் கருகிக் கொண்டிருந்தது ஒருக் காதல்
.
சாதி பணம் அந்தஸ்து
என்ற பாகுபாடுகளின் காலில்
நசுங்கிக்கொண்டிருந்தது ஒரு காதல்…
.
தன் வயதுக் குழந்தையை தோளில்போட்டு
மீசைவைத்த அன்னை அவன் தாலாட்டும்
இங்கொரு காதல்…
.
இதழ் வழி இருதயம் கொடுத்து
இருதயம் வாங்கிக் கொண்டிருந்தது
இங்கொரு காதல்…
.
கண்களின் வாய் வழி
கண் எனும் போதை மருந்தை
அள்ளி தின்றே உலக மறந்துகொண்டிருந்தது
அங்கொரு காதல்…
.
கை இதழால் இவன் பேச
பூ மேனி சிலிர்த்தது
இன்னுமொரு காதல்…
.
கண்காளால் அவன் பேச
வெட்கத்தால் இவள் விடைகொடுக்க
புது மொழியின் இலக்கணம்
அரங்கேற்றியது இன்னுமொரு காதல்…
.
தீண்டல்களில் ஆரம்பித்து
படுக்கை வரை இனித்து
இருவரையும் சர்க்கரை நோயாளியாக்கி
கசந்து போனது ஆசை தீர்ந்த காதல்…
.
அவள் தின்று போட்ட மிட்டாய் தாள் தொடங்கி
உதிர்ந்த தலை முடி வரை
பொறுக்கித் திரிந்தது இங்கொரு காதல்…
.
குட்டி ஆரஞ்சு இதழ் வெட்டித் தள்ளுது,
முகத்திலாடும் முடி என்னை தூக்கிழுடுது
என்று புலம்பிப் போகுது கவிதுவக் காதல்…
.
இன்று நானும் அவளும் ஒரே நிறஉடை,
என்னை இன்று அவள் கண் கடந்தது
என்று தூரத்திலிருந்தே ரசிக்கும்
சொல்லத் தைரியமில்லாக் காதல்…
.
இருதயத்தில் பூட்ட முடியாதது
இன்று தாடிக்குள் புதைந்து கிடக்கும்,
கண்களில் வாழ்ந்த கனவு
கண்ணீராய் வடியும், குறையாது
சுகமென்று நினைத்து தெரிந்தது
வழியாய் மாறிப் போனது
விடை என்று நினைத்துக்கொண்டது
புதிராகி குழப்பிபோகும்…
ஒரு தலைக் காதல்…
.
இப்படி ஆயிரம் பார்த்தேன்…
இவ்வளவு காதல் காட்டிய இந்த உலகுக்கு
உண்மைக் காதல் காட்டிட ஆசைப்பட்டேன்…
மன்மதனின் மலர் கணைக்கு
அடிபணியக் காத்துக்கிடந்தேன்…