பாதம் கல்லில் இடறாது
பசுமையான புற்கள்...............
பாதசாரிகள் அணியும்
பாதணி அணியாது
பாதஉறை அணிந்தும்
பாதஉறை அணியாமலும்
ஓடுவதேனோ?........................
அரசின் அதிரடி ஆணைப்படி
அரசிடம் பழையன சமர்பித்து
அரசிடம் புதியன பெற்றிட
அரசு விடுமுறையென்ற
களிப்பால் ஆனந்த ஓட்டமா?.............
பழைய ஐநூறு ருபாய்
பழைய ஆயிரம் ருபாய்
பண மூடை கொட்டபட்ட
இடத்தை பார்க்க ஓட்டமா?...................
பழைய ஐநூறு ருபாய்
பழைய ஆயிரம் ருபாய்
மாற்ற அல்லாடூம் கூட்டம்
அலைமோதும் வரிசையை
ஆவலுடன் காண ஓட்டமா?...................
இரண்டாயிரம் புதிய ருபாய்
காலை முதல் மாலை வரை
கால்கடுக்க இயந்திரம் முன்னின்ற
பெற்றோரைத் தேடி ஓட்டமா?...............
நாளொன்றுக்கு யாவர்க்கும்
இரண்டாயிரம் மட்டுமே
இயந்திரம் கொடுக்கும்
இயந்திரத்தை சுற்றி
ஒப்பாரியை கேட்க ஓட்டமா?..............
பாதம் கல்லில் இடறாது
பசுமையான புற்கள்
பாதசாரிகள் அணியும்
பாதணி அணியாது
பாதஉறை அணிந்தும்
பாதஉறை அணியாமலும்
ஓடுவதேனோ?........................
புசிக்க உணவில்லை
குடிக்க நீரெங்குமில்லை
இருக்குமிடம் விட்டு
ஏதுமங்கே
இல்லாததால்
இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலையுதே
வனவிலங்கு ........................
எந்தநேரமும் ஊருக்குள் வரலாம்
என்ற அச்சத்தில் வாழுமிடத்திலோ?
குரங்கு வந்ததோ?
கரடியை கண்டனரோ?
வனத்தில் வாழ்வது நம்
மினத்தை அழிக்கவோ?
வனவாசம் முடித்து நம்
இனவாசம் தேடுவதேனோ?
வனத்தை பாதுகாப்போம்
வனவிலங்குகளை பாதுகாப்போம்...............
இருக்குமிடம் விட்டு
இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ மனம் அலையுதே
குழந்தை போல் மனம்
பாம்பை போல் வினா
புறாவைபோல் கபடற்ற மனம்
மனதிலே காண்பாயே...................................
வாழ்க வளமுடன்,,,,,,,,,,,,,,,,,,,,,,...................