பாத்தி கட்டி
மரம் வைத்து
தண்ணீர் ஊற்றி
மொட்டு விட்டு
பூ பூக்கும் வரை
காத்திருக்க வேண்டுமா என்ன
ஒவ்வொரு முறையும்
நீ சிரிக்கும் போது
பூக்கள் பூக்கின்றனவே
செடியில் பூக்கும் பூவை
உன் கூந்தலில் சூடுகிறாய்
உன் சிரிப்பில்
பூக்கும் பூவை நான்
என் இதயத்தில் சூடுகிறேன்