காட்சி -4
--------------
இடம் :கல்லூரி வளாகம்
நேரம் : மாலை
(தருண் பெஞ்சில் அமர்ந்து மொபைல் பார்த்து கொண்டு இருக்கிறான் )
(அப்போது தான்யா வருகிறாள் )
தருண் : ஹாய் தான்யா ...
தான்யா :ஹாய்
தருண் : உனக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்
தான்யா : எதுக்கு ?
தருண் : என்ன நினைச்சுட்டு இருக்கா உன் பிரெண்டு ? ஆதியை கை நீட்டி
அடிச்சு இருக்காள்..
தான்யா : உன் பிரெண்டு மட்டும் ஒழுங்கா? எதுக்கு ஆர்த்திக்கிட்டே அப்டி
சொல்லணும்? அடி வாங்கணும் ?
தருண் : ஹே ..என்னடி அப்டி தப்பா சொல்லிட்டான் ..ஐ லவ் யு சொல்றது
தப்பா?
தான்யா : தப்பு தான்.. நாலு வருஷமா ப்ரெண்ட பழகிட்டு சடனா சொன்னா?
தருண் : அவன் நாலு வருஷமா மனசுக்குலயே வெச்சுட்டு டிஸ்டர்ப் பண்ணாம
தான இருந்தான் .
தான்யா : ஆமா..அப்டியே போக வேண்டியதுதானே ?
தருண்: லூசு நீ.. ஆதிக்குத்தான் கேம்பஸ்லயே பெங்களூரு IT கம்பெனில
நல்ல வேலை கிடைச்ருசலே ...இதோ எக்ஸாம் முடிச்சுட்டு போயி join
பண்ணிருவான் ,,,, அப்புறம் எப்போ தான் லவ்வ சொல்றதாம்?
தான்யா : ஆமா ..உன்னை மாதிரி எவன் 1 yearla ஏ லவ்வ சொல்லுவான் ?
தருண்: (சிரித்து) ஆமாண்டி ..என்னை போல எவன் இருப்பான் நாலு வருஷமா
ஒரே பொண்ண லவ் பண்ணிக்கிட்டு ...
தான்யா : ஓஹ் அய்யாவுக்கு நிறைய கேக்குதோ ..நான் ஓகே சொன்னதே
அதிசயம் ..போடா
தருண் : என்ன பண்ண ..தலை எழுத்தை மாத்தவ முடியும் ?
தான்யா : (அவன் தலையில் குட்டுகிறாள் ) நம்மை விடுடா ஓல்ட் ஸ்டோரி ..
அவங்கள எப்படி சேர்த்து வைக்கிறது ?
தருண் :அதாண்டி தெறியல ...ஆர்த்தி ஏன் இப்டி சிடுமூஞ்சியா இருக்கா?
ரொம்ப அழகுனு திமிரா?
தான்ய :டேய் ...அவளை பத்தி அப்டி பேசாதே ...அவ பேமிலி situation தெரியும்
அவ ...after ஹிஸ் டாடி டெத்....அம்மாவையும் அவ தங்கையையும்
கேர் எடுத்து பார்த்துகிறா.. part time job வேற போறா.. இதுல லவ்
எல்லாம் அவ யோசிப்பாளா ?
தருண் : அது சரிடி ....பட் இப்போ லாஸ்ட் எக்ஸாம் முடிஞ்சுட்டா அவ்ளோதான்
என்ன பண்றது இவங்கள ....
தான்யா : யோசிக்கணும் தருண் ..(யோசிக்கிறாள் )
தருண் : இப்படியேதாண்டி யோசிச்சு நாலு வருஷம் போயாச்சு ..ஆர்த்தி
மாறுற மாதிரி தெரியல ...பட் ஆதி லவ் நிஜம்.. அவனை இழந்துட்ட she
will be unlucky ...
தான்யா : ஹ்ம்ம் எஸ்.. ஆதி போல ஒருத்தன் கிடைச்ச அவ லைப் நல்ல
இருக்கும்.
தருண் : எடுத்து சொல்லு உன் ப்ரெண்டுகிட்ட ,,,டைம் இருந்தா ....
தான்யா : சரிடா .. சொல்லி பாக்குறேன் ..அப்புறம் அவ இஷ்டம் ...