எங்கேயோ பிறந்த நதியும்
எங்கேயோ தவழ்ந்த நதியும்
கடைசியில் கடலில் கலப்பது போல
எங்கோ பிறந்து எங்கேயோ வளர்ந்து
FTC எனும் கடலில் சங்கமித்தவர்கள்
நானும் எனது அன்புத் தோழியும்
அரட்டை அரங்கத்தில்
சந்தித்தோம்
அளவே இல்லாமல்
அரட்டை அடித்தோம்
வெறும் பேச்சினில் தொடங்கிய நட்பு
போகப் போக மனத்துக்குப் பிடித்த
நட்பாக மாறியது
மனம் விட்டு பேசும் அளவுக்கு
நாங்கள் பேசுவதை பார்ப்பவர்களுக்கு
இவர்கள் நண்பர்களா இல்லை
காதலர்களா என்ற சந்தேகம் தோன்றும்
சில நேரம் அடித்துக்கொள்வோம்
அடுத்த நிமிடம்
உருக உருக பேசுவோம்
பார்ப்பவர்களுக்கு இவர்கள்
பைத்தியங்களா என்றும் எண்ணத் தோன்றும்
வார்த்தைகள் தான் கொரோனா போல
உருமாறுமே தவிர
எங்கள் மனதில் நட்பு மட்டுமே
பாசத்துக்கும் காதலுக்கும் ஒரு எல்லையுண்டு
நட்புக்கு கிடையாதே
அவள் உனது நண்பியா என்றால்
ஆமாம் நண்பியே தான்
காதலியா என்றால்
காதலியே தான்
நான் காதலிப்பது அவளை அல்ல
அவள் தூய்மையான நட்பை
அவள் அழகியா என்றால்
சத்தியமாக தெரியாது
அவள் ஒல்லியா குண்டா
கருப்பா சிவப்பா
எதுமே தெரியாது
ஏன் தெரிய வேண்டும்
அழகிய குணம் இளகிய மனம்
எது சொன்னாலும் விளையாட்டாக எடுத்துக் கொள்ளும்
மனப் பக்குவம்
மனதால் என்றும் அவள் பேரழகியே
காலங்கள் மாறும்
காதலும் மாறும்
நட்பு என்றுமே மாறாது
என்றும் எனது மனதில்
நல்ல நண்பியாய் வீற்றிருக்கும்
இனிய தோழி TINUவிற்கு
இந்த கவிதை சமர்ப்பணம்