பத்து திங்கள் கருவினிலே
நான் பக்குவமாக இருக்கையிலே ..
உத்தமனா என் தாயும்
என்னையும் பெத்தெடுத்தா ..
பதின்பருவ வயசு வர
மனசுக்குள்ள ஆச ஒன்னு
பக்குவமா மீசை கூட சேந்து தானே
மொளச்சிருச்சு ..
பொண்ணுங்கள பாக்குறப்போ
மனசுக்குள்ள மணி அடிக்கும்
அவங்க கிட்ட பேசுறப்போ
வேகமாக ஹார்ட் துடிக்கும்.
ஆனாலும் பேசிடத்தான் மனசுக்குள்ள
பயம் இருக்கும்
அம்மா சொன்ன வார்த்தையுமே
காதுகுள்ள தினம் ஒலிக்கும்
மிங்கிள் ஆக ஆச பட்டு
சுத்தி நாங்க வந்தாலும்
சிங்கிள் ஆக சுத்தி வரும்
முரட்டு சிங்கிள் நாங்கதாங்க.
எங்கள போல் யாருமிங்கே
தங்க மகன் இல்லேங்கே
அங்கில் ஆக ஆனாலும்
நாங்க இங்க சிங்கிள் தான்